மேலும் அறிய

சுதந்திர தினத்தன்று சாலையில் குடியேறும் போராட்டம் - விவசாயிகள் சங்க அறிவிப்பால் தென்காசியில் பரபரப்பு

குறிப்பாக அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் தோண்டி எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது.

தமிழக கேரள எல்லைப்பகுதியான செங்கோட்டை வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக பல்வேறு தரப்பிரும் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் அதனை தடுக்க சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கும் பணி நடைபெற்று வந்தாலும் அதனையும் மீறி கனிம வளங்கள் கடத்தப்படுவதாக அவ்வப்போது புகார்  எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கனிமவள கொள்ளையை தடுக்க கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நெல்லை மண்டல தலைவர் செல்லத்துரை தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது, அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மலை வளம் அழிக்கப்பட்டு கனிம வளம் சட்டவிரோதமாக கேரளாவிற்கு ராட்சத லாரிகள் மூலம் கடத்தப்பட்டு வருகிறது.

இதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, மாநில குழு கூட்டம் கடந்த மே 14, 15 தேதிகளில் குற்றாலத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தென்காசி முதல் புளியரை வரை  விவசாயிகள் சாலையில் குடியேறும் போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளோம்.  இது குறித்து ஏற்கனவே உரிய அரிவிப்புகளை செய்துள்ளோம். இதனை ஏற்று தமிழக முதல்வர் கனிம வளம் கடத்தப்படுவதை தடுக்க உரிய உத்தரவுகளை பிறப்பித்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும், இல்லையெனில் சுதந்திர தினத்தன்று சாலையில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் தோண்டி எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயம் செய்ய வழியில்லாமல் விவசாயிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே விவசாயத்தை காக்கும் பொருட்டு கனிம வளத்தை தடுக்க வேண்டும் என  விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நெல்லை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  சுதந்திர தினத்தன்று அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு மிகப்பெரிய அளவில் சாலையில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பால் தென்காசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget