மேலும் அறிய

TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!

TN Assembly Session LIVE: இன்று தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

Key Events
TN Assembly Session 2025 Live Updates Governor RN Ravi Speech Anna University Issue CM MK Stalin Tamil Nadu Assembly Latest News TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
தமிழ்நாடு சட்டமன்றம்
Source : twitter

Background

TN Assembly:  தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, 2025ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. 

நடப்பாண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்:

நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படுகிறார். தலைமைச் செயலகத்திற்கு காலை 9.20 மணிக்கு வருகை தரும் அவருக்கு காவல்துறை அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. 

ஆளுநர் உரை நிகழ்த்த வருகை தரும் அவரை பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டசபை முதன்மைச் செயலாளர் சீனிவாசன் பூங்கொத்து அளித்து வரவேற்க உள்ளனர். இதன்பின்னர், நடப்பாண்டிற்கான முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. 

சட்டப்பேரவை மூன்றாம் நாள்:

சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக, விசிக, பாஜக ஆகிய கட்சிகள் சபாநாயகர் அப்பாவுக்கு அனுப்பிய நிலையில் இன்று அந்த கவன் ஈர்ப்புக்கு அவர் ஒப்புதல் அளித்தார். 

கட்சிக்கு ஒருவர் இது குறித்து பேசலாம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். 

எதிர்க்கட்சிகள் கேள்வி: 

இது குறித்து எதிர்க்கட்சிகள் பேசத்தொடங்கிய நிலையில்  அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்காமல் காவல்துறை பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தன. 

சட்டப்பேரவையில் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து கட்சியினருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பேசிய பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ காந்தி பாலியல் வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பேசினார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார். அதேபோல், பல்கலைக்கழகங்களுக்கு பொறுப்பு ஆளுநர்தான் என மதிமுக எம்.எல்.ஏ பேசினார். 

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் போராட்டம் நடத்திய பெண்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாகவும் பாமகவின் ஜி.கே.மணி பேரவையில் கேள்வி எழுப்பினார். மேலும் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். 

முதல்வர் ஸ்டாலின் பதில்:

இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். போராட்டங்களுக்கு காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். எல்லா இடங்களிலும் போராட்டங்கள் நடத்த முடியாது. போராட்டம் நடத்த சில இடங்கள் இருக்கின்றன. அனுமதி இன்றி போராட்டங்களை நடத்தியவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்யப்படுகின்றன. கைது நடவடிக்கை மேற்கொள்ளப் படுகின்றன. பல்வேறு இடங்களில் அனுமதியோடு போராட்டங்கள் நடைபெறுகின்றன. திடீரென அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறும்போது வழக்கு போடப்படுகின்றன. 

திமுகவினரும் அனுமதி இன்றி போராட்டங்கள் நடத்தியுள்ளனர். ஆளுங்கட்சியாக இருந்தாலும் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை பாகுபாடு காட்டுவதில்லை” எனத் தெரிவித்தார். 

அண்ணா பல்கலை விவகாரம் குறித்து பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “மாணவி பாதிக்கபப்ட்ட விவகாரத்தை அரசியல் ஆதாரத்திற்காக ஒருவர் பேசினார். குற்றம் தொடர்பான ஆதாஅரங்களை திரட்டிய பிறகும் அரசை குறை கூறுவது அரசியல் ஆதாரத்திற்கு மட்டுமே. தொழிநுட்ப கோளாறு காரணமாக எஃப்.ஐ.ஆர் வெளியானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைகழகத்தின் பெயரை சொல்லி அண்ணாவிற்கு களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை. அந்த சார் யாராக இருந்தாலும் புலானாய்வு குழுவிடம் ஆதாரத்தை கொடுங்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சியை கொண்டே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். குற்றவாளி யாராக இருந்தாலும் தயவு தாட்சன்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். அரசை பாராட்ட மனம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. வீண் பழி சுமத்த வேண்டாம். வீண் அரசியல், மலிவான அரசியலை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். வீண் அரசியலை தவிர்த்தாலே பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். 

பொள்ளாச்சி சம்பவத்தில் என்ன செய்தீர்கல் என நினைத்து பாருங்கள். அதன்பிறகு தான் தொடர்ந்து பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரன்கேறின. பெண்களில் பாதுகாவலர்களாக பேசுபவர்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள். அதிமுக அரசு அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிபிஐ வந்தபிற்குதான் பல உண்மைகள் வெளிவந்தன. 

பெண்களின் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம் என மக்களுக்கு நன்றாகத் தெரியும். பொள்ளாச்சி சம்பவத்தில் அன்றைய முதலமைச்சர் சார் என்ன செய்து கொண்டிருந்தார். மீண்டும் மீண்டு சொல்கிறேன் பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுகவுக்கு பங்கு இருக்கிறது. அதிமுக ஆட்சியில் 100 சார்கள் இருக்கின்றனர். பொல்லாத ஆட்சியின் சாட்சியாக பொள்ளாச்சி உள்ளது” என குறிப்பிட்டார். 

இதை கேட்டதும் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் முதலமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். 

10:00 AM (IST)  •  09 Jan 2025

சட்டப்பேரவை தொடக்கம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 4வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது. மேலும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். 

13:15 PM (IST)  •  08 Jan 2025

அதிமுகவினர் மீது என்ன நடவடிக்கை? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

ஆளுநர் உரையின் போது பதாகையுடன் வந்த அதிமுக உறுப்பினர்கள் மீது என்ன நடவடிக்கை என முதல்வர் ஸ்டாலின் கேள்வி

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget