மேலும் அறிய

அரசு அறிவித்து 2 ஆண்டுகளையும் கடந்து நிறைவேறாத தாமிரபரணி வைப்பார் இணைப்பு திட்டம் - எதிர்பார்ப்புடன் விவசாயிகள்

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் வீணாக கடலுக்குச் செல்லும் தண்ணீரை தடுத்து மடைமாற்றி விடுவதே இத்திட்டத்தின் நோக்கம் அறிவிக்கப்பட்ட போது அதனை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வரவேற்றனர்.

தாமிரபரணி வைப்பாறு இணைப்பு திட்டம் 2 ஆண்டுகளாகியும் செயல்பாட்டுக்கு வராததால் தூத்துக்குடி மாவட்டத்தின் வட பகுதி மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கிராமங்கள் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி வறட்சியில் தகிக்கின்றது.


அரசு அறிவித்து 2 ஆண்டுகளையும் கடந்து நிறைவேறாத தாமிரபரணி வைப்பார் இணைப்பு திட்டம் - எதிர்பார்ப்புடன் விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி மக்களுக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு தாமிரபரணி வைப்பாறு இணைப்பு திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் வீணாக கடலுக்குச் செல்லும் தண்ணீரை தடுத்து மடைமாற்றி விடுவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது அதனை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வரவேற்றனர். ஆனால் தமிழகத்தில் வழக்கம் போல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது காட்சிகளும் மாறத் தொடங்கின. இதுவரை இத்திட்டத்தை செயல்படுத்த எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர் இரு மாவட்ட விவசாயிகளும் குடிநீருக்காக ஏங்கும் பொது மக்களும்.


அரசு அறிவித்து 2 ஆண்டுகளையும் கடந்து நிறைவேறாத தாமிரபரணி வைப்பார் இணைப்பு திட்டம் - எதிர்பார்ப்புடன் விவசாயிகள்

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறும்போது, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பார் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது மழைக்காலங்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். 1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் வைப்பாற்றில் முதல் முறையாக அயன்ராசாபட்டி, கீழ்நாட்டு குறிச்சி ஆகிய இடங்களில் தனியார் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு முதல் மணல் குவாரியை அரசு ஏற்று நடத்த கொள்கை முடிவு எடுத்தது.


அரசு அறிவித்து 2 ஆண்டுகளையும் கடந்து நிறைவேறாத தாமிரபரணி வைப்பார் இணைப்பு திட்டம் - எதிர்பார்ப்புடன் விவசாயிகள்

அதனைத் தொடர்ந்து அயன்ராசாபட்டி, நென்மேனி, கீழ்நாட்டுகுறிச்சி, முத்தலாபுரம் நம்பிபுரம், அம்மன் கோவில்பட்டி, விருசம்பட்டி ஆகிய இடங்களில் குவாரி அமைக்கப்பட்டு சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்திருந்த மணல் முழுவதும் விதிமுறைகளை மீறி 20 அடி ஆழம் வரை மண்ணை அள்ளியதால் வைப்பாறு மலடாகி போனது. தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாறு துவங்கும் இடமான அயன்ராசாபட்டி முதல் வைப்பாறு வரை ஆற்றின் இருகரை ஓரங்களிலும் உள்ள கிராமங்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் கூட்டுக் குடிநீர் திட்ட ஆழ்துளை கிணறுகள் குடிநீர் கிணறுகள் விவசாய கிணறுகள் என இருந்தன. கடும் கோடையிலும் தண்ணீர் வற்றாத இந்த கிணறுகள் அனைத்தும் மணலை மொத்தமாக அல்ல வறண்டு போயின, இதன் காரணமாக சாகுபடியும் முழுமையாக பாதிக்கப்பட்டது.


அரசு அறிவித்து 2 ஆண்டுகளையும் கடந்து நிறைவேறாத தாமிரபரணி வைப்பார் இணைப்பு திட்டம் - எதிர்பார்ப்புடன் விவசாயிகள்

குடிநீர் கிணறுகள் வறண்டு போனதால் தாமிரபரணி ஆட்சியில் உள்ள தண்ணீரை நம்பி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பகுதியில் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் பகுதிகள் உள்ளது. செழிப்பாக சாகுபடி நடைபெற்ற விவசாய தோட்டங்கள் இன்று வறண்டு வேலிக்கருவை காடுகளாக காட்சியளிக்கின்றன. இதனைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் இருந்து கால்வாய் வெட்டி முத்தலாபுரத்தில் வைப்பாருக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்கு சுமார் 245 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடும் செய்யப்பட்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் இப்பகுதி விவசாயிகள் கிராம மக்கள் என அனைவரும் தங்களுடைய பகுதிகளுக்கு இனி விமோசனம் ஒன்று என எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.


அரசு அறிவித்து 2 ஆண்டுகளையும் கடந்து நிறைவேறாத தாமிரபரணி வைப்பார் இணைப்பு திட்டம் - எதிர்பார்ப்புடன் விவசாயிகள்

ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் அச்சு மாற்றம் ஏற்பட்ட பின்னர் தாமிரபரணி வைப்பார் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறும் இவர் இத்திட்டத்தை செயல்படுத்தினால் வைப்பாற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அனைத்து கிராமங்களுக்கு மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கும் குடிநீரை வழங்க முடியும்.அதே நேரத்தில் விவசாயமும் செழிப்படையும் எனவே போதிய நிதியை இத்திட்டத்திற்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்து விரைவில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.


அரசு அறிவித்து 2 ஆண்டுகளையும் கடந்து நிறைவேறாத தாமிரபரணி வைப்பார் இணைப்பு திட்டம் - எதிர்பார்ப்புடன் விவசாயிகள்

தமிழக அரசு விரைவாக ஆய்வினை நிறைவு செய்து மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பதை இப்பகுதி மக்களின் எண்ணமாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Embed widget