மேலும் அறிய

தாமிரபரணி ஆற்றில் காணும் பொங்கலை கொண்டாட தூய்மை பணி தொடக்கம்

தூய்மை பணியில் ஈடுபடும் போது மரங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது புதிதாக பாதை அமைக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் தூய்மைப் பணியை மேற்கொள்ள மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் அனுமதி

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின்  இரண்டு பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் காணும் பொங்கலை சுற்றுவட்டார பகுதி மக்கள் கொண்டாடும் விதமாக தூய்மைபணியினை மேற்கொள்ள வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் போராட்டாத்தில் ஈடுபடபோவதாக வியாபாரிகள் சங்கத்தினரும் பொது மக்களும் தெரிவித்ததை தொடர்ந்து மரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகளுடன் வனத்துறையினர் அனுமதி அளித்ததை தொடர்ந்து ஆற்றை தூய்மை படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


தாமிரபரணி ஆற்றில் காணும் பொங்கலை கொண்டாட தூய்மை பணி தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் அனைத்து கீழ் பகுதியில மணல் பகுதியாக இருந்த இடத்தில் ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் காணும் பொங்கல் திருநாள் அன்று சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் குடும்பத்தோடு வந்து விளையாடி மகிழ்வார்கள்.காலப்போக்கில் மணல் பகுதிகளில் முட்செடிகள் அதிகரித்து காணும் பொங்கல் அன்று குடும்பத்தோடு தாமிரபரணி ஆற்றில் விளையாடி மகிழ்வது மறைந்து போனது.


தாமிரபரணி ஆற்றில் காணும் பொங்கலை கொண்டாட தூய்மை பணி தொடக்கம்

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறை முயற்சியால் ஶ்ரீவைகுண்டத்தில் உள்ள இரண்டு பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டதால் காணும் பொங்கல் சித்திரை திருவிழா என பொதுமக்கள் மீண்டும் கொண்டாடி மகிழ்ந்தனர்.தொடர்ந்து உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் முட்செடிகள் அதிகரித்ததால் தாமிரபரணி ஆற்றில் காணும் பொங்கலை கொண்டாடும் பழக்கம் நின்று போனது.இரண்டு பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியை சீர்படுத்தி பொதுமக்கள் காணும் பொங்கலை கொண்டாட  அனுமதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


தாமிரபரணி ஆற்றில் காணும் பொங்கலை கொண்டாட தூய்மை பணி தொடக்கம்

இந்நிலையில்,  சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் ஶ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் ஆகியோர் தங்களது சொந்த நிதியில் தாமிரபரணி ஆற்றின் இரண்டு பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியை சீர்படுத்த முன்வந்தனர்.இதற்கான பணிகள் பூமி பூஜையுடன் இன்று தொடங்கியது. அப்போது தாமிரபரணி ஆற்றில் வனத்துறை பகுதியில் பணிகளை மேற்கொள்ள அனுமதி பெற வேண்டும் எனக் கூறி வனத்துறையினர் தடை விதித்தனர்.


தாமிரபரணி ஆற்றில் காணும் பொங்கலை கொண்டாட தூய்மை பணி தொடக்கம்

சட்டமன்ற உறுப்பினரின் நிதி உதவியுடன் தாமிரபரணி ஆற்றில் தூய்மைப்படுத்தும் பணிக்காக தாசில்தாரிடம் முன் அனுமதி பெற்று பணி தொடங்கப்பட்டுள்ளதாக பொதுமக்களும் வியாபாரிகள் சங்கத்தினரும் தெரிவித்தனர்.மாவட்ட வன அலுவலரின் உரிய அனுமதியின்றி பணி மேற்கொள்ளக் கூடாது என வனவர் பழனி மற்றும் வனக் காப்பாளர் கோபிநாத் ஆகியோர் தெரிவித்தனர்.

தாமிரபரணி ஆற்றில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வந்த காணும் பொங்கல் உரிய பராமரிப்பு இல்லாததால் நின்று போனது.இந்த ஆண்டு தாமிரபரணி ஆற்றில் காணும் பொங்கல் கொண்டாட பொதுமக்கள் ஆர்வமாக உள்ள நிலையில் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இதற்கு வனத்துறையினர் தடை விதித்தால் கடைகளை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வியாபாரிகள் சங்கத்தினரும் பொது மக்களும் தெரிவித்தனர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் ராதாகிருஷ்ணன் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.


தாமிரபரணி ஆற்றில் காணும் பொங்கலை கொண்டாட தூய்மை பணி தொடக்கம்

இதற்கிடையில், இரண்டு பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் தூய்மை பணியில் ஈடுபடும் போது மரங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது புதிதாக பாதை அமைக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் தூய்மைப் பணியை மேற்கொள்ள மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் அனுமதி அளித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்ததை எடுத்து பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget