மேலும் அறிய

மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர், கண்டக்டர்

கன்னியாகுமரி கோதையாறு - நாகர்கோவில் அரசு பேருந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக நடத்துனர் மற்றும் ஓட்டுனர் சிறுகாயத்தோடு தப்பினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு -நாகர்கோவில் அரசு பேருந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக நடத்துனர் மற்றும் ஓட்டுனர் சிறுகாயத்தோடு தப்பினர்.
 
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், பவர்கவுஸ் மின்வாரிய ஊழியர்கள், ஆதிவாசி பழங்குடியின மக்களுக்காக என பொதுமக்கள் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து கோதையாயாறுக்கு தினசரி அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பாதையில் இந்த பேருந்துகள் இயக்கப்படுவதால் பல பகுதிகளில் உள்ள தரை பாலம் வழியாக பல நீரோடைகள் மற்றும் ஆறு பகுதிகளை கடந்து செல்லும் நிலை உள்ளது. சாதாரண மழை பெய்தால் கூட நீரோடைகள் வெள்ளம் பெருக்கெடுத்தது ஓடும். அப்போது இந்த சாலையில் பேருந்து இயக்குவது என்பது கடினமாக இருக்கும் நிலையில் நேற்று அரசு பேருந்து கோதயாரு சென்றுவிட்டு பவர்கவுஸ் அருகே இறக்கத்தில் வந்து கொண்டு இருந்த போது திடீரென கட்டுபாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த பகுதியில் மரம் நின்ற காரணத்தாலும் ஓட்டுனரின் துரித நடவடிக்கையாலும் மலையில் இருந்து சுமார் ஐம்பதடி பள்ளத்தில் கவழாமல் தப்பித்தது. பேருந்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மட்டுமே இருந்ததால் பெரும் விபத்து நடக்காமல் தப்பித்துள்ளது. நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு சிறு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து கிரேன் மூலம் பேருந்து மீட்கப்பட்டது.
 
 

மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர், கண்டக்டர்
 
 
பேச்சுபாறை வழியாக மோதிர மலை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்றும் இந்த சாலையில் கோதை ஆறு கடக்கும் பகுதியில் அமைந்துள்ள தரைப் பாலத்தை உயர் மட்டபாலமாக மாற்றி அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ள நிலையில் அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் மலைவாழ் மக்கள் மற்றும் மின்சார துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டு தூண்டில் வளைவு உடைந்து சேதமடைந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்த நிலையில் மீனவர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

 


மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர், கண்டக்டர்


கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளான அரபிக்கடல் பகுதியில் பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடல் சீற்றத்துடனே காணப்படும். இந்த வருடம் ஜூன் மாதம் முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் அழிக்கால், கொட்டில்பாடு, கொல்லங்கோடு போன்ற மீனவ கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் கடல் நீர் சூழ்ந்து சேதமடைந்ததால் மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

தொடர் கடல் சீற்றத்தால் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது கடல் சீற்றம் ஓய்ந்த நிலையில் மீன்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் குளச்சல், கொட்டில்பாடு மீனவ கிராமங்களில் மீண்டும் திடீரென கடல் சீற்றத்துடனே காணப்பட்டது.


மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர், கண்டக்டர்


கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் தூண்டில் வளைவுகள் சேதமடைந்து சாலைகளும் உடைந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல்நீர் சூழ்ந்தது சில வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்த நிலையில் அவர்கள் பாதுகாப்பாக உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். தொடர்ந்து கடல் சீற்றத்துடனே காணப்படுவதால் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதோடு கடல்நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து வருவதோடு குடியிருப்பு பகுதிகளில் மேலும் கடல்நீர் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Embed widget