மேலும் அறிய

மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர், கண்டக்டர்

கன்னியாகுமரி கோதையாறு - நாகர்கோவில் அரசு பேருந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக நடத்துனர் மற்றும் ஓட்டுனர் சிறுகாயத்தோடு தப்பினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு -நாகர்கோவில் அரசு பேருந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக நடத்துனர் மற்றும் ஓட்டுனர் சிறுகாயத்தோடு தப்பினர்.
 
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், பவர்கவுஸ் மின்வாரிய ஊழியர்கள், ஆதிவாசி பழங்குடியின மக்களுக்காக என பொதுமக்கள் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து கோதையாயாறுக்கு தினசரி அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பாதையில் இந்த பேருந்துகள் இயக்கப்படுவதால் பல பகுதிகளில் உள்ள தரை பாலம் வழியாக பல நீரோடைகள் மற்றும் ஆறு பகுதிகளை கடந்து செல்லும் நிலை உள்ளது. சாதாரண மழை பெய்தால் கூட நீரோடைகள் வெள்ளம் பெருக்கெடுத்தது ஓடும். அப்போது இந்த சாலையில் பேருந்து இயக்குவது என்பது கடினமாக இருக்கும் நிலையில் நேற்று அரசு பேருந்து கோதயாரு சென்றுவிட்டு பவர்கவுஸ் அருகே இறக்கத்தில் வந்து கொண்டு இருந்த போது திடீரென கட்டுபாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த பகுதியில் மரம் நின்ற காரணத்தாலும் ஓட்டுனரின் துரித நடவடிக்கையாலும் மலையில் இருந்து சுமார் ஐம்பதடி பள்ளத்தில் கவழாமல் தப்பித்தது. பேருந்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மட்டுமே இருந்ததால் பெரும் விபத்து நடக்காமல் தப்பித்துள்ளது. நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு சிறு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து கிரேன் மூலம் பேருந்து மீட்கப்பட்டது.
 
 

மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து-  அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பிய டிரைவர், கண்டக்டர்
 
 
பேச்சுபாறை வழியாக மோதிர மலை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்றும் இந்த சாலையில் கோதை ஆறு கடக்கும் பகுதியில் அமைந்துள்ள தரைப் பாலத்தை உயர் மட்டபாலமாக மாற்றி அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ள நிலையில் அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் மலைவாழ் மக்கள் மற்றும் மின்சார துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டு தூண்டில் வளைவு உடைந்து சேதமடைந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்த நிலையில் மீனவர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

 


மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து-  அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பிய டிரைவர், கண்டக்டர்


கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளான அரபிக்கடல் பகுதியில் பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடல் சீற்றத்துடனே காணப்படும். இந்த வருடம் ஜூன் மாதம் முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் அழிக்கால், கொட்டில்பாடு, கொல்லங்கோடு போன்ற மீனவ கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் கடல் நீர் சூழ்ந்து சேதமடைந்ததால் மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

தொடர் கடல் சீற்றத்தால் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது கடல் சீற்றம் ஓய்ந்த நிலையில் மீன்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் குளச்சல், கொட்டில்பாடு மீனவ கிராமங்களில் மீண்டும் திடீரென கடல் சீற்றத்துடனே காணப்பட்டது.


மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து-  அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பிய டிரைவர், கண்டக்டர்


கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் தூண்டில் வளைவுகள் சேதமடைந்து சாலைகளும் உடைந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல்நீர் சூழ்ந்தது சில வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்த நிலையில் அவர்கள் பாதுகாப்பாக உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். தொடர்ந்து கடல் சீற்றத்துடனே காணப்படுவதால் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதோடு கடல்நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து வருவதோடு குடியிருப்பு பகுதிகளில் மேலும் கடல்நீர் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Embed widget