மேலும் அறிய

நெல்லை பள்ளி கட்டட விபத்து - இரண்டாவது நாளாக முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

மாவட்டத்தில் உள்ள 1500க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்ய 17 குழுக்கள் அமைக்கப்பட்டு கட்டிட தரத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது - தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி

நெல்லை டவுண்  பகுதியில் இயங்கிவரும் சாப்டர் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியானார்கள். நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் மாவட்டத்திலுள்ள ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்ய வருவாய் துறை, பொதுப்பணித் துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளடக்கிய 18 சிறப்பு குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளது.


நெல்லை பள்ளி கட்டட விபத்து - இரண்டாவது நாளாக முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட பள்ளியில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமையிலான அதிகாரிகள் குழு 2-ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டது. இதில் விபத்து ஏற்பட்ட இடம் சரிந்து விழுந்த சுவர் மற்றும் கழிப்பறையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறைகள், சமையலறை,  பள்ளி சுற்றுச் சுவர் உள்ளிட்ட பகுதிகளும் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


நெல்லை பள்ளி கட்டட விபத்து - இரண்டாவது நாளாக முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருக்கும் சுற்றுச்சுவர் சமையலறை வகுப்பறை கழிப்பறை போன்ற கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்கிறோம், நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு,  அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில்  சிறப்பு குழுக்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நெல்லை வருவாய் கோட்டாட்சியர் சந்திரசேகர் மற்றும்  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இரண்டு நாட்கள் ஆய்வு முடிந்தவுடன் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை அளிக்கப்படுகிறது. இந்த அறிக்கையின் படி குறைபாடுகள் உள்ள பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு சுட்டிக்காட்டும் குறைகளை சரிசெய்ய தவறும் பள்ளிகள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் - நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி

 

முன்னதாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் வகையில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கட்டணமில்லா மருத்துவ உதவித் திட்டமான  "இன்னுயிர் காப்போம்" திட்டத்தை தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

நெல்லை பள்ளி கட்டட விபத்து - இரண்டாவது நாளாக முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

நெல்லையில் நடைபெற்ற விழாவில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கலந்துகொண்டனர். நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் 9 தனியார் மருத்துவமனைகள் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவ மனைகளுக்கான கடவுச்சொல்லை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.  மேலும் நிகழ்வில் 3 பேருக்கு காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டது. 


நெல்லை பள்ளி கட்டட விபத்து - இரண்டாவது நாளாக முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறும் பொழுது, தமிழகத்தின் எல்லைப் பகுதியில் விபத்து ஏற்பட்டால் உலகத்தில் எந்த பகுதியில் உள்ள மக்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். மேலும் நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பள்ளி விபத்து துரதிர்ஷ்டவசமானது,  உயிரிழந்த பள்ளி மாணவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது நெல்லை மாவட்டத்தில் 17 குழுக்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்ய பிரித்து அனுப்பபட்டுள்ளனர். இந்த குழுக்கள் 48 மணி நேரத்தில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்யும். அதனை தொடர்ந்து அறிக்கையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டு அதனை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிகாரிகளின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளை சரி செய்ய தவறும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிப்பார் என தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி விபத்தில் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, அவர்கள் தவறு செய்தது தெரியவந்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ENG Semi Final LIVE Score: மீண்டும் வந்த மழை.. ஆட்டம் பாதியில் நிறுத்தம்!
IND vs ENG Semi Final LIVE Score: மீண்டும் வந்த மழை.. ஆட்டம் பாதியில் நிறுத்தம்!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG Semi Final LIVE Score: மீண்டும் வந்த மழை.. ஆட்டம் பாதியில் நிறுத்தம்!
IND vs ENG Semi Final LIVE Score: மீண்டும் வந்த மழை.. ஆட்டம் பாதியில் நிறுத்தம்!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
Embed widget