மேலும் அறிய

தீராத விளையாட்டு தாத்தா... லீலைகளின் மன்மதன்...! மனைவியை கொலை செய்து நாடகமாடியது அம்பலம்...

ஆர்.எஸ்.மங்கலத்தில் முதியவர் ஒருவர் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆர்.எஸ்.மங்கலத்தில் முதியவர் ஒருவர் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் செட்டிய மடையை சேர்ந்தவர் சந்தியாகு (எ) சந்திரசேகர். ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஞானசவுந்தரி (வயது80). இவர்களது பிள்ளைகள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் கணவன்-மனைவி ஆகிய இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சாப்பாடு வாங்குவதற்காக ஆர்.எஸ்.மங்கலம் டவுண் பகுதிக்கு சந்தியாகு சென்றுள்ளார். இதனால் ஞானசவுந்தரி தனியாக வீட்டில் இருந்துள்ளார். சாப்பாடு வாங்கி விட்டு சந்தியாகு வீட்டுக்கு திரும்பி வந்தபோது ஞானசவுந்தரி தலையின் பின்புறம் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததாக ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ, ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.


தீராத விளையாட்டு தாத்தா... லீலைகளின் மன்மதன்...! மனைவியை கொலை செய்து நாடகமாடியது அம்பலம்...

ஞானசவுந்தரி தலையின் பின்பக்கம் காயம் இருப்பதால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரை கொன்றது யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது உடனடியாக தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டுக்குள்ளேயே சுற்றி வந்தது. இதனால் கொலையாளி கொலை நடந்த இடத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு சென்று பஸ்சில் தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது. மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தபின் ஞானசவுந்தரியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஞானசவுந்தரியின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வந்தனர். மேலும் விசாரணையின் போது சந்தியாகு கொடுத்த தகவலின் அடிப்படையில் ஓட்டலில் வேலைசெய்து வந்த ஒரு நபரை போலீசார் தேடிச் சென்றனர். அப்போது அவர் ஊருக்கு சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.


தீராத விளையாட்டு தாத்தா... லீலைகளின் மன்மதன்...! மனைவியை கொலை செய்து நாடகமாடியது அம்பலம்...

இதனால் அவரை போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது கணவரே மனைவியை அடித்துக் கொன்றதாக ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 


தீராத விளையாட்டு தாத்தா... லீலைகளின் மன்மதன்...! மனைவியை கொலை செய்து நாடகமாடியது அம்பலம்...

மேலும், மோப்ப நாய் சோதனையில் சம்பவ இடத்தில் இருந்து ஓடி கடைசியாக ஆர்.எஸ் மங்கலம் காவல் நிலையத்திற்கு வந்து கணவர் சந்திரசேகரையே  சுற்றி சுற்றி வந்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் காவல் துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஞானசவுந்தரியின் பிரேத பரிசோதனையில் தலையில் அடித்து கீழே தள்ளி அதன் பின் கழுத்து நெரித்து காெலை செய்த விவரம் தெரிய வந்தது. மேலும்  தடயங்கள், கைரேகை ஆகியவற்றை வைத்து விசாரித்ததில் கணவரே தனது மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகியது.



தீராத விளையாட்டு தாத்தா... லீலைகளின் மன்மதன்...! மனைவியை கொலை செய்து நாடகமாடியது அம்பலம்...

பின்னர் போலீசார் முறையாக  நடத்திய விசாரணையில் பல தகவல்களை கூறியுள்ளார். அதில் சந்திரசேகர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு செய்தபிறகு தனக்கு கிடைத்த ஓய்வூதிய தொகையை வைத்துக் கொண்டு விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை குறிவைத்து அவர்களுக்கு உதவி செய்வது போலவும் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில்  சான்றிதழ் வாங்கி கொடுப்பது போலவும்  அவர்களை அணுகி மெல்ல மெல்ல தன் வசப்படுத்தி தவறான உறவு வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தீராத விளையாட்டு தாத்தா... லீலைகளின் மன்மதன்...! மனைவியை கொலை செய்து நாடகமாடியது அம்பலம்...

இவர் பல பெண்களுக்கு பணத்தை செலவு செய்து வந்ததை  அவரது மனைவி தொடர்ந்து கண்டித்ததால் ஆத்திரம் அடைத்த சந்திரசேகர் தனது மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து திருப்பி பின்தலையில் அடித்து காயப்படுத்தி கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கடந்த மூன்று  நாட்களாக யார் கொலை செய்தார்கள் என்று தெரியாத நிலையில் பரபரப்பாக இருந்து வந்த சூழ்நிலையில் கணவரே மனைவியை கொலை செய்துவிட்டு  நாடகமாடியது தெரியவந்தது.  இதனையடுத்து தற்போது தீராத விளையாட்டு தாத்தா  சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கோடை விடுமுறை ஸ்பெஷல்! திருநெல்வேலியிலிருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயில்: மிஸ் பண்ணிடாதீங்க!
கோடை விடுமுறை ஸ்பெஷல்! திருநெல்வேலியிலிருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயில்: மிஸ் பண்ணிடாதீங்க!
ரயில் பயணிகளுக்கு நற்செய்தி! ஐதராபாத்-கொல்லம், திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு நற்செய்தி! ஐதராபாத்-கொல்லம், திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
ELECTION 2026 : மு.க.ஸ்டாலின் நெல்லை & கன்னியாகுமரி பிரசாரம்: பாதுகாப்பு காரணமாக டிரோன் தடை
ELECTION 2026 : மு.க.ஸ்டாலின் நெல்லை & கன்னியாகுமரி பிரசாரம்: பாதுகாப்பு காரணமாக டிரோன் தடை
சிலிண்டர் தட்டுப்பாடு: டீக்கடை உரிமையாளரின் உருக்கமான வேண்டுகோள்! விலை உயர்வு குறித்து கேள்வி கேட்காதீர்!
சிலிண்டர் தட்டுப்பாடு: டீக்கடை உரிமையாளரின் உருக்கமான வேண்டுகோள்! விலை உயர்வு குறித்து கேள்வி கேட்காதீர்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Congress Candidate List: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
Embed widget