![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
“போலீசாரால் என் மகன் உயிருக்கு ஆபத்து” - ஆர்டிஓ-விடம் தாய் பரபரப்பு புகார்
எனது மகனை பாா்க்கவிடாமல் போலீசார் வல்லநாடு கொண்டு சென்றதாக தெரிகிறது. அங்கு வைத்து எனது மகனின் கை மற்றும் கால்களை உடைக்கப்போவதாகவும் அல்லது சுட்டுக் கொல்லப் போவதாகவும் தகவல் வருகின்றன.
![“போலீசாரால் என் மகன் உயிருக்கு ஆபத்து” - ஆர்டிஓ-விடம் தாய் பரபரப்பு புகார் Thoothukudi news mother complained to the kovillpatti Revenue divisional office my son life was in danger due to the police - TNN “போலீசாரால் என் மகன் உயிருக்கு ஆபத்து” - ஆர்டிஓ-விடம் தாய் பரபரப்பு புகார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/10/180ea6fb088f76e55d3657e6e675be251717992949011571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவில்பட்டியில் போலீசாரால் மகன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புகார் அளித்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சோ்ந்த மாரிச்செல்வம் என்பவா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் காா்த்திக் என்ற பாம்பு காா்த்திக் என்பவா் தேடப்பட்டு வந்தாா். இதற்கிடையே அவரது தாய் பேச்சியம்மாள், தனது மகள் மணிமாலா உள்ளிட்டோருடன் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினியிடம் அளித்த மனு விவரம், எனது கணவா் இறந்துவிட்டாா். எனது மகன் காா்த்திக் என்ற பாம்பு காா்த்திக் என்பவருக்கும், எனது அக்கா மகன் மாரிச்செல்வம் என்பவருக்கும் குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த ஏப். 23ஆம் தேதி பிரச்னை ஏற்பட்டு, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் எனது மகனை மேற்கு காவல்நிலைய போலீசாரும், எஸ்.பி. தனிப்படையும் தேடி வந்தது.
எனது மகன் காா்த்திக் என்ற பாம்பு காா்த்திக்கை வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் சென்னையில் வைத்து எஸ்.பி. தனிப்படை கைது செய்ததாக தெரிகிறது. இதனால் நான் எனது மகனை பாா்ப்பதற்கு மேற்கு காவல் நிலையத்துக்கு சென்றேன். ஆனால் அங்கு எனது மகன் இல்லை என்று போலீசார் தெரிவித்துவிட்டனா். இதனால் எனது மகனை தேடி கொப்பம்பட்டி காவல்நிலையம் சென்று விசாரித்தும் முறையான பதில் இல்லை.
எனது மகனை பாா்க்கவிடாமல் போலீசார் வல்லநாடு கொண்டு சென்றதாக தெரிகிறது. அங்கு வைத்து எனது மகனின் கை மற்றும் கால்களை உடைக்கப்போவதாகவும் அல்லது சுட்டுக் கொல்லப் போவதாகவும் தகவல் வருகின்றன. எனவே, எனது மகனுக்கும், எனது அக்கா மகனுக்கு உள்ள பிரச்னை பெரிதாக பேசப்பட்டு, சனிக்கிழமை எனது மகனை சட்டத்துக்கு புறம்பாக காவல்துறையால் காவல் வைக்கப்பட்டு, எனது மகனின் உயிருக்கு ஆபத்தான சூழல் கோவில்பட்டி போலீசாரால் ஏற்பட்டுள்ளது. எனவே, எனது மகன் மீது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். மேலும், எனது மகனை நான் பாா்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளாா்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)