மேலும் அறிய

தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் குடிநீர், பாதாள சாக்கடை பணிகள் எப்போது முடியும்?

தற்போது பணிகள் 78 விழுக்காடு முடிவடைந்து தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இத்திட்டம் வருகின்ற அக்டோபர் 2024ல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாளச்சாக்கடை திட்டப் பணிகள் உட்பட ரூ.515.72 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் குடிநீர், பாதாள சாக்கடை பணிகள் எப்போது முடியும்?

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலமாக நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளின் பணி முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி,ஆட்சியர் லட்சுமிபதி, தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் சேதுராமலிங்கபுரத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலமாக ரூ.515.72 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், தூத்துக்குடி மாநகராட்சிக்கான பாதாளச்சாக்கடை திட்டத்தில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 120.53 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 2, 3, 21,18,19, 33, 34,35 ஆகிய 8 வார்டுகளுக்கான பாதாளச்சாக்கடை திட்டப்பணிகள் குறித்தும், அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூபாய் 152.14 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 16, 17, 26, 49, 50 ஆகிய 5 வார்டுகளுக்கான பாதாளச்சாக்கடை திட்டப்பணிகள் குறித்தும், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 1387.73 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 1331 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், திருநெல்வேலி மாவட்டத்தில் ரூபாய் 605.75 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 831 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.


தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் குடிநீர், பாதாள சாக்கடை பணிகள் எப்போது முடியும்?

அதுமட்டுமல்லாமல், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தற்போது செயல்பட்டுவரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து தடைகளின்றி பராமரித்திட வேண்டும். மேலும் நடைபெற்றுவரும் குடிநீர் தொடர்பான திட்டப்பணிகள் அனைத்தையும் கொடுக்கப்பட்டுள்ள காலஅளவிற்குள் விரைவாக நிறைவுசெய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, அறிவுறுத்தினார்.


தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் குடிநீர், பாதாள சாக்கடை பணிகள் எப்போது முடியும்?

அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சிக்கான பாதாளச்சாக்கடை திட்டத்தில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 120.53 கோடி மதிப்பீட்டில் 2, 3, 21,18,19, 33, 34, 35 ஆகிய 8 வார்டுகளுக்கான பாதாளச்சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 3வது வார்டுக்குட்பட்ட கே.டி.சி. நகர் பகுதியில் நடைபெற்றுவரும் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளையும், அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூபாய் 152.14 கோடி மதிப்பீட்டில் 16, 17, 26, 49, 50 ஆகிய 5 வார்டுகளுக்கான பாதாளச்சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 17வது வார்டுக்குட்பட்ட கதிர்வேல் நகர் பகுதியில் நடைபெற்றுவரும் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளையும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.


தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் குடிநீர், பாதாள சாக்கடை பணிகள் எப்போது முடியும்?

பின்னர், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் சேதுராமலிங்கபுரத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலமாக ரூ.515.72 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இத்திட்டத்தில் நாளொன்றுக்கு தேவையான 16.57 மில்லியன் லிட்டர் குடிநீரை தாமிரபரணி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு கருங்குளம் ஒன்றியம் அகரம் ஊராட்சியைச் சார்ந்த அகரம் கிராமத்திற்கு அருகில் நீர் எடுக்கும் கிணறு ஒன்று அமைக்கப்பட்டு, அதிலிருந்து மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு சேதுராமலிங்கபுரம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் 239 குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டார் மூலம் 20.35 கி.மீ நீளமுள்ள நீர் உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு மணியாச்சியில் அமைந்துள்ள தரைமட்ட நீர் தேக்கத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது.

இவ்விரண்டு உயர்மட்ட நீர்தேக்கத் தொட்டிகளில் இருந்து 42 ஊராட்சி தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகளுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. அதிலிருந்து 60 புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளுக்கும், மேலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 356 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கும் குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படவுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் 92,407 புதிய வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகளும் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கான பணி உத்தரவு 31.03.2023-ல் வழங்கப்பட்டு தற்போது பணிகள் 78 விழுக்காடு முடிவடைந்து தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது இத்திட்டம் வருகின்ற அக்டோபர் 2024ல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும் பொழுது 3,96,376 மக்கள் பயன் அடைவார்கள் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.ரா.ஐஸ்வர்யா, தலைமைப் பொறியாளர் வி.ஆறுமுகம், மேற்பார்வை பொறியாளர்கள் லதாசெல்வி, கென்னடி, ராமசாமி, செயற்பொறியாளர்கள் ராஜா, ராமசாமி, மயில்வாகனம், ஜான்சிலின் ரெசுலா, ராமலெட்சுமி, தட்சிணாமூர்த்தி, குமார், உதவி செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மாற்றம் நிச்சயம்.. தூத்துக்குடியில் ஸ்ரீநாத்: தலைவர் மீதான நம்பிக்கையும், மக்களின் எதிர்பார்ப்பும்!
மாற்றம் நிச்சயம்.. தூத்துக்குடியில் ஸ்ரீநாத்: தலைவர் மீதான நம்பிக்கையும், மக்களின் எதிர்பார்ப்பும்!
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
தவெக வேட்பாளாராக விஜயின் கல்லூரி நண்பர் ஶ்ரீநாத்..எந்த தொகுதியில் நிற்கிறார் தெரியுமா
தவெக வேட்பாளாராக விஜயின் கல்லூரி நண்பர் ஶ்ரீநாத்..எந்த தொகுதியில் நிற்கிறார் தெரியுமா
விளாத்திகுளம் மாணவி கொலை: கொலையாளியை கைது செய்தது எப்படி? - தூத்துக்குடி எஸ்பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்
விளாத்திகுளம் மாணவி கொலை: கொலையாளியை கைது செய்தது எப்படி? - தூத்துக்குடி எஸ்பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Trump Iran War: ”அடிச்சு காலி பண்ணுங்க, 2-3 வாரம் தான் டைம்” - ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஆர்டர் - ஹெல்ப்புக்கு வாங்க
Trump Iran War: ”அடிச்சு காலி பண்ணுங்க, 2-3 வாரம் தான் டைம்” - ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஆர்டர் - ஹெல்ப்புக்கு வாங்க
2026 சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் அதிரடி உயர்வு! எவ்ளோ தெரியுமா?
2026 சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் அதிரடி உயர்வு! எவ்ளோ தெரியுமா?
Trump Vs Starmer: “போருக்குள்ள எங்கள இழுக்க முடியாது“ ஒரே போடாய் போட்ட ஸ்டார்மர்; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில்
“போருக்குள்ள எங்கள இழுக்க முடியாது“ ஒரே போடாய் போட்ட ஸ்டார்மர்; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில்
VinFast MPV EV: வின்ஃபாஸ்ட் மின்சார 7 சீட்டருக்கான முன்பதிவு தொடக்கம் - கட்டணம் என்ன? பேட்டரி, ரேஞ்ச், விலை
VinFast MPV EV: வின்ஃபாஸ்ட் மின்சார 7 சீட்டருக்கான முன்பதிவு தொடக்கம் - கட்டணம் என்ன? பேட்டரி, ரேஞ்ச், விலை
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
Best EV Under 10 Lakh: டியாகோ முதல் சிட்ரோயன் வரை; ரூ.10 லட்சத்திற்குள் சிறந்த EV கார்கள் எவை.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
டியாகோ முதல் சிட்ரோயன் வரை; ரூ.10 லட்சத்திற்குள் சிறந்த EV கார்கள் எவை.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
Embed widget