தூத்துக்குடி வேலைவாய்ப்பு முகாம்: ஜூலை 17 அன்று 200 தனியார் நிறுவன வேலைகள்! விபரம் இதோ..
வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஜூலை 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, B.E., டிப்ளமோ, ஐ.டி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கல்வித் தகுதிகளை பெற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைக்கு ஏற்ற பணிகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளன.
மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலம் 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தெரிவித்துள்ளது. வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், சுயவிவரம் (Resume), ஆதார் அட்டை மற்றும் தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட நேரத்தில் நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முகாமில் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நிறுவனங்கள் நேர்முகத் தேர்வு நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய்யும். இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















