நாளை திருநெல்வேலி மாவட்டத்தில் மின் தடை! உங்கள் பகுதி உள்ளதா? முக்கிய அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பின்வரும் துணைமின் நிலையங்களில் நாளை (28.10.2025, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை செய்யப்படும்.
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பின்வரும் துணைமின் நிலையங்களில் நாளை (28.10.2025, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை செய்யப்படும்.
திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பாளையங்கோட்டை மற்றும் சமாதானபுரம் துணைமின் நிலையங்களில் நாளை (28.10.2025, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.
அதன்படி வி.எம்.சத்திரம், கிருஷ்ணாபுரம், கட்டபொம்மன்நகர், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத்நகர், நீதிமன்றபகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கம் பகுதி, பாளை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம், பொட்டல், படப்பக்குறிச்சி, திருமலைகொழுந்துபுரம், மணப்படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், முருகன்குறிச்சி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கரந்தானேரி, ரஸ்தா, மூன்றடைப்பு, பரப்பாடி, வன்னிக்கோனேந்தல், மானூர் மற்றும் மூலைக்கரைப்பட்டி துணைமின் நிலையங்களில் நாளை (28.10.2025, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு,
பானாங்குளம்.மதவக்குறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா, பட்டவர்த்தி, வெங்கலப்பொட்டல், நரியூத்து.அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம். பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவனைக்காரன்குளம், வில்லயனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்ப்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூர், சீயோன் மலை, கண்ணாத்திகுளம், தங்கயம்.வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவர்குளம், முத்தம்மாள்புரம் கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்குபனவடலி, நரிக்குடி, மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடான்குளம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இதேபோல் கங்கைகொண்டான் துணைமின் நிலையத்தில் நாளை (28.10.2025, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. அதன்படி சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான்குளம், செழியநல்லூர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வள்ளியூர் துணைமின் நிலையத்தில் நாளை (28.10.2025, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட துணைமின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. அதன்படி வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்குவள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கல்லிடைக்குறிச்சி கோட்டம், மேலக்கல்லுர் துணைமின் நிலையத்தில் நாளை (28.10.2025, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். அதன்படி மேலக்கல்லுர், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லுர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாளங்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




















