மேலும் அறிய

தமிழகத்தில் சட்டம் இருக்கிறது. ஆனால் ஒழுங்கு இல்லை - சீமான்

பாதிரியார்களை எப்படி இறைவனின் தூதுவர்கள் என்று கூறுவது, சரண்டைந்த பாதிரியார் ராபின்சனை போலீசார் இதுவரை விசாரிக்கவில்லை, காவல்துறை ஏன் இன்னும் கொலை சம்பந்தமாக அறிக்கை வெளியிடவில்லை

“தமிழகத்தில் சட்டம் இருக்கிறது. ஆனால் ஒழுங்கு இல்லை, தனக்கு ஓட்டு போட்டவர்கள் மட்டும் தான் வாழவேண்டும் என்றால் இந்த மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் பதவிக்கு வந்திருக்க கூடாது” என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது தெரிவித்தார்.


தமிழகத்தில் சட்டம் இருக்கிறது. ஆனால் ஒழுங்கு இல்லை - சீமான்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மைலோடு பகுதியில் ஆர்.சி., கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. இத்தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள பங்குத்தந்தை அலுவலகத்தில் கடந்த 20ம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் அரசு போக்குவரத்து கழக ஊழியருமான சேவியர் குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் இரணியல் காவல் நிலையத்தில், திமுக தக்கலை ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, மைலோடு கிறிஸ்தவ தேவாலய பங்கு தந்தை ராபின்சன் உட்பட 15 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பாதரியார் ராபின்சன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனிடையே நேற்று முன்தினம் கல்குளம் தாசில்தார் தலைமையில் போலீசார், சேவியர் குமார் உடலை நீதிமன்ற ஆணைபடி மைலோடு கல்லறைத்தோட்டத்தில் நல்லடக்கம் செய்தனர்.


தமிழகத்தில் சட்டம் இருக்கிறது. ஆனால் ஒழுங்கு இல்லை - சீமான்

இக்கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு உட்பட கொலையாளிகளை கைது செய்வதில் காவல்துறை தாமதம் காட்டுவதாக குற்றம்சாட்டி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து கோசமிட்டனர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.


தமிழகத்தில் சட்டம் இருக்கிறது. ஆனால் ஒழுங்கு இல்லை - சீமான்

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், “கொலை நடந்து இத்தனை நாட்களாகியும் அரசு மெத்தனமாக உள்ளது, தேவாலயத்தில் அழைத்து பேச்சுவார்த்தை என கூறி அடித்து கொலை செய்யப்பட்டு தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பாதிரியார்களை எப்படி இறைவனின் தூதுவர்கள் என்று கூறுவது, சரண்டைந்த பாதிரியார் ராபின்சனை போலீசார் இதுவரை விசாரிக்கவில்லை, காவல்துறை ஏன் இன்னும் கொலை சம்பந்தமாக அறிக்கை வெளியிடவில்லை, பேசுவதற்கெல்லாம் குண்டாஸ் போடும் அரசு கொலைக்கு என்ன முறையில் வழக்கு பதிவு செய்வார்கள், குற்றவாளி தலைமறைவாகிவிட்டார் என்று கூறுவதற்கு வெட்கமாக இல்லையா? இந்த வழக்கில் கொலைக்கு துணை போகிறார்களா என்று கூறுவதை விட குற்றவாளிகளே திமுக தான். தமிழகத்தில் சட்டம் இருக்கிறது ஆனால் ஒழுங்கு இல்லை, சட்ட ஒழுங்கு இருந்திருந்தால் இதே போன்ற கொலைகள் நடந்திருக்காது. எத்தனை பேரை வெட்டிக்கொன்றாலும் அவர்களை காப்பாற்ற ஆட்சி, அதிகாரம் இருக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களை அவர்கள் மறக்கலாம் ஆனால் நான் மறக்க மாட்டேன்” என்றார்.


தமிழகத்தில் சட்டம் இருக்கிறது. ஆனால் ஒழுங்கு இல்லை - சீமான்

முன்னதாக கொலை செய்யப்பட்ட சேவியர் குமார் வீட்டுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றார். சேவியர் குமாரின் கல்லறையில் அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். சேவியர் குமாரின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LSG vs DC LIVE Score: லக்னோவுக்கு சவால் விடும் டெல்லியின் போரல் - ஹோப் கூட்டணி!
LSG vs DC LIVE Score: லக்னோவுக்கு சவால் விடும் டெல்லியின் போரல் - ஹோப் கூட்டணி!
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகலRahul Gandhi on Modi | ‘’அதானிக்கு 7 ஏர்போர்ட்..டெம்போல பணம் வந்துச்சா மோடி?” ராகுல் THUGLIFE!Banana Farming | தருமபுரியில் கொளுத்தும் வெயில்! காய்ந்து விழுந்த வாழை மரங்கள்! விவசாயிகள் வருத்தம்Felix Gerald House Raid | FELIX வீட்டில் அதிரடி சோதனைடென்ஷன் ஆன மனைவிபோலீசாருடன் கடும் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LSG vs DC LIVE Score: லக்னோவுக்கு சவால் விடும் டெல்லியின் போரல் - ஹோப் கூட்டணி!
LSG vs DC LIVE Score: லக்னோவுக்கு சவால் விடும் டெல்லியின் போரல் - ஹோப் கூட்டணி!
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.. மூச்சுத்திணறலால் ஒருவர் உயிரிழப்பு!
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.. தலைநகரில் பரபரப்பு!
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
Embed widget