மேலும் அறிய

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை நிச்சயமாக வழங்கப்படும் - கனிமொழி எம்பி உறுதி

தமிழ்நாட்டில் உள்ள இந்த முகாம்கள் எப்படி நடத்தப்படுகின்றன. இங்குள்ள மக்களுக்கான உரிமை எப்படி வழங்கப்படுகிறது என்பதை உலகத்துக்கே முன்னுதாரணமாக ஐக்கிய நாட்டு சபை பார்த்துக் கொண்டுள்ளது.

எட்டயபுரம் அருகே குளத்துள்வாய்பட்டி இலங்கை தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் ரூ.2.03 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 40 குடியிருப்புகள் திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் வரவேற்றார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை நிச்சயமாக வழங்கப்படும் - கனிமொழி எம்பி உறுதி

புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீட்டின் சாவிகளை வழங்கி பேசிய கனிமொழி எம்.பி,தமிழ்நாடு முழுவதும் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள வீடுகளை மீண்டும் கட்டிக்கொடுத்து, ஒரு குடும்பத்துக்கு ஒரு வீடு என்ற முறையில் முதல்வர் செய்து கொடுத்துள்ளார். மேலும், முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை, அவர்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறதோ, தமிழக அரசால் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் முதல்வர் செய்து கொடுத்துள்ளார்.


இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை நிச்சயமாக வழங்கப்படும் - கனிமொழி எம்பி உறுதி

தமிழ்நாட்டில் உள்ள இந்த முகாம்கள் எப்படி நடத்தப்படுகின்றன. இங்குள்ள மக்களுக்கான உரிமை எப்படி வழங்கப்படுகிறது என்பதை உலகத்துக்கே முன்னுதாரனமாக ஐக்கிய நாட்டு சபை பார்த்துக் கொண்டுள்ளது. அங்கு பணியாற்றும் பலரை நான் சந்தித்து பேசும்போது, தமிழ்நாட்டை தான் நாங்கள் முன்னுதாரணமாக காட்டிக் கொண்டிருக்கிறோம் என அவர்கள் சொல்லும்போது, எங்களுக்கு பெருமையாக உள்ளது. இங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், குடியுரிமை வேண்டுவோர்களுக்கு குடியுரிமை என்று இந்த அடிப்படை விஷயங்களுக்காக தமிழக முதல்வரும், தமிழக அரசும் போராடிக்கொண்டுள்ளது. நிச்சயமாக விரைவில் உங்களுக்கு குடியுரிமை பெற்றுத்தருவதற்கான முயற்சியில் வெற்றி பெறுவோம் என்றார்.


இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை நிச்சயமாக வழங்கப்படும் - கனிமொழி எம்பி உறுதி

நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்தன் அதனடிப்படையில் உடனடியாக குடியிருப்புகளை அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே தாப்பாத்தியில் முதல்கட்டமாக 52 குடியிருப்புகளை திறந்து வைத்துள்ளார்கள். தற்போது இரண்டாம் கட்டமாக குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் குளத்துள்வாய்பட்டியில் 40 வீடுகள் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளையூரணியில் 60 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அவை திறந்து வைக்கப்பட உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் இவ்வாறு வீடுகள் மட்டுமின்றி பேவர்பிளாக் சாலைகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பு, ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதி, பொது சுகாதார வளாகம் என்று உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்கள் என்றார்.


இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை நிச்சயமாக வழங்கப்படும் - கனிமொழி எம்பி உறுதி

விழாவில், அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை இணை இயக்குநர் ரமேஷ், மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஆர்.ஐஸ்வர்யா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றிய திமுக செயலாளர்கள் நவநீத கண்ணன், அன்புராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Embed widget