மேலும் அறிய

திருவாரூர்: ‘என் கொலுசை கொடு’ - அடகு கடையை உடைத்த இளைஞரை கைது செய்த போலீசார்..!

‘என்னிடம் 3000 ரூபாய் பணம் இருக்கிறது. அந்த பணத்தை வைத்துக்கொண்டு என் கொலுசை கொடு’ என தகாத வார்த்தையால் திட்டி, கடையில் உள்ள கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

உரிய பணத்தை கொடுக்காமல் அடகு வைத்த பொருளைக் கேட்டு அடகு கடையை உடைத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அச்சுதமங்களம் மெயின் ரோட்டில் ராஜஸ்தானை சேர்ந்த மகேந்திரராம் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அரவிந்த் வயது 21 என்பவர் நேற்று கொலுசை 3200 ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று கொலுசை மீட்க அடகு கடைக்கு வந்த இளைஞர் அரவிந்த் அடகு கடை உரிமையாளரிடம் மூன்றாயிரம் ரூபாய் பணத்தை மட்டும் கொடுத்துள்ளார். அப்போது கடை உரிமையாளர் மகேந்திரா ராம் நீங்கள் கொலுசை 3200 ரூபாய்க்கு அடகு வைத்துள்ளீர்கள். ஆனால் 3000 ரூபாய் மட்டுமே கொடுக்கிறீர்கள் ஆகையால் முழு பணத்தை கொடுத்தால் கொழுசை தருகிறேன் என கூறினார்.


திருவாரூர்: ‘என் கொலுசை கொடு’ - அடகு கடையை உடைத்த இளைஞரை கைது செய்த போலீசார்..!

என்னிடம் 3000 ரூபாய் பணம் இருக்கிறது அந்த பணத்தை வைத்துக்கொண்டு என் கொலுசை கொடு என தகாத வார்த்தையால் திட்டி, கடையில் உள்ள கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன கடை உரிமையாளர் மகேந்திரராம் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் காவல்துறையினர் பிரச்சனை குறித்து இரு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் பணத்தை குறைவாக கொடுத்து நகை கேட்டு கொடுக்காத காரணத்தினால் கடை உரிமையாளரை தகாத வார்த்தையால் திட்டி கடையை உடைத்து சேதப்படுத்தியதாக கூறி  இளைஞர் அரவிந்தனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருவாரூர்: ‘என் கொலுசை கொடு’ - அடகு கடையை உடைத்த இளைஞரை கைது செய்த போலீசார்..!

மேலும் அந்த அடகு கடையில் சிசிடிவி கேமரா இருப்பதைக் கண்டு காவல் துறையினர் அதில் உள்ள காட்சிகளை சோதனை செய்ய சென்றனர். அப்பொழுது கேமரா பழுதாகி பல நாட்கள் ஆகிறது என காவல்துறையினரிடம் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து காவல்துறையினர் வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா எப்பொழுதும் செயல்பட வேண்டும் என பலமுறை அறிவுறுத்தியும் தாங்கள் அலட்சிய போக்கில் இருப்பது கண்டிக்கத்தக்கது உடனடியாக சிசிடிவி கேமராவை சரி செய்து வைக்க வேண்டும் என கடையின் உரிமையாளருக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் வணிகர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவம் என்பது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதே போன்ற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அரவிந்தனை கைது செய்துள்ளனர். அச்சுதமங்கலத்தில் உரிய பணத்தை கொடுக்காமல் அடகு வைத்த நகையை கேட்டு அடகு கடையில் தகராறில் ஈடுபட்டு கடையில் கண்ணாடியை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Porur to Vadapalani Metro Rail : போரூர் டூ வடபழனி மெட்ரோ ரயில் ரெடி.! இன்று வெளியாகிறது.? சென்னை மக்கள் எதிர்பார்த்த சூப்பர் அறிவிப்பு
போரூர் டூ வடபழனி மெட்ரோ ரயில் ரெடி.! இன்று வெளியாகிறது.? சென்னை மக்கள் எதிர்பார்த்த சூப்பர் அறிவிப்பு
Nallakannu Health: தீயாய் பரவும் தகவல்.. நல்லக்கண்ணு உடல்நிலை எப்படி இருக்கு?
Nallakannu Health: தீயாய் பரவும் தகவல்.. நல்லக்கண்ணு உடல்நிலை எப்படி இருக்கு?
திருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக பாமாயில்.. இந்துக்களுக்கு எதிரான சூழ்ச்சி.. கொந்தளித்த பவன் கல்யாண்!
திருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக பாமாயில்.. இந்துக்களுக்கு எதிரான சூழ்ச்சி.. கொந்தளித்த பவன் கல்யாண்!
USS Gerald Warship Issue: அவசரத்துக்கு கூட போக முடியாது போலயே.! ஈரானை தாக்க வந்த அமெரிக்க படைகளுக்கு புதுவித சோதனை.!
அவசரத்துக்கு கூட போக முடியாது போலயே.! ஈரானை தாக்க வந்த அமெரிக்க படைகளுக்கு புதுவித சோதனை.!
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nallakannu Health: தீயாய் பரவும் தகவல்.. நல்லக்கண்ணு உடல்நிலை எப்படி இருக்கு?
Nallakannu Health: தீயாய் பரவும் தகவல்.. நல்லக்கண்ணு உடல்நிலை எப்படி இருக்கு?
Gold and silver rate : தங்கம் சவரனுக்கு ரூ.4,080 உயர்வு.! வெறும் 4 நாட்களில் புதிய உச்சம்- நகைப்பிரியர்கள் ஷாக்
தங்கம் சவரனுக்கு ரூ.4,080 உயர்வு.! வெறும் 4 நாட்களில் புதிய உச்சம்- நகைப்பிரியர்கள் ஷாக்
அதிமுக, அமமுக மட்டும் தான்.. சசிகலாவுக்கு இடமில்லை.. டிடிவி தினகரன் விமர்சனம்!
அதிமுக, அமமுக மட்டும் தான்.. சசிகலாவுக்கு இடமில்லை.. டிடிவி தினகரன் விமர்சனம்!
VK Sasikala: நான் ஜெயலலிதாவை கொன்றேனா? - இதுதான் நடந்துச்சு.. ஓபனாக பேசிய சசிகலா!
VK Sasikala: நான் ஜெயலலிதாவை கொன்றேனா? - இதுதான் நடந்துச்சு.. ஓபனாக பேசிய சசிகலா!
ABP NADU Exclusive: ஆலங்குடிக்கு செய்தது என்ன? சாதனைகளை அடுக்கிய அமைச்சர் மெய்யநாதன்- ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி
ABP NADU Exclusive: ஆலங்குடிக்கு செய்தது என்ன? சாதனைகளை அடுக்கிய அமைச்சர் மெய்யநாதன்- ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி
Porur to Vadapalani Metro Rail : போரூர் டூ வடபழனி மெட்ரோ ரயில் ரெடி.! இன்று வெளியாகிறது.? சென்னை மக்கள் எதிர்பார்த்த சூப்பர் அறிவிப்பு
போரூர் டூ வடபழனி மெட்ரோ ரயில் ரெடி.! இன்று வெளியாகிறது.? சென்னை மக்கள் எதிர்பார்த்த சூப்பர் அறிவிப்பு
ABP Nadu Exclusive: நடைபயணம், மக்கள் சந்திப்பு, இளையராஜா பாடல்கள்.. அமைச்சர் மெய்யநாதனின் காலைப் பொழுது இப்படித்தான்!
ABP Nadu Exclusive: நடைபயணம், மக்கள் சந்திப்பு, இளையராஜா பாடல்கள்.. அமைச்சர் மெய்யநாதனின் காலைப் பொழுது இப்படித்தான்!
USS Gerald Warship Issue: அவசரத்துக்கு கூட போக முடியாது போலயே.! ஈரானை தாக்க வந்த அமெரிக்க படைகளுக்கு புதுவித சோதனை.!
அவசரத்துக்கு கூட போக முடியாது போலயே.! ஈரானை தாக்க வந்த அமெரிக்க படைகளுக்கு புதுவித சோதனை.!
Embed widget