மேலும் அறிய

கடைமடைக்கு வராத தண்ணீர்.. கருகும் 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்..! டெல்டா விவசாயிகளுக்கு தீர்வு கிட்டுமா?

முள்ளையாறு என்ற ஆற்றின் மூலமாக பாசன வசதியை பெற்று வரும் நிலையில், இந்த ஆற்றில் தற்பொழுது தண்ணீர் மிக குறைந்த அளவு செல்வதால் நெல் பயிர்களுக்கு தண்ணீர் வைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

தரையோடு தரையாக செல்லும் தண்ணீர்:

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 60000 ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைப்பிலும் 29 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு பணியிலும் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்பட்டதை அடுத்து தண்ணீர் வந்து விடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் குறுவை நெல்சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தரையோடு தரையாக தண்ணீர் சொல்வதால் நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் உருவாகியுள்ளது.

குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் சேகள் நாகளுடயான்யிருப்பு மடபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்ட குறுவை நெல் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகிறது. இவர்களுக்கு முள்ளையாறு என்ற ஆற்றின் மூலமாக பாசன வசதியை பெற்று வரும் நிலையில் இந்த ஆற்றில் தற்பொழுது தண்ணீர் மிக குறைந்த அளவு செல்வதால் நெல் பயிர்களுக்கு தண்ணீர் வைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.


கடைமடைக்கு வராத தண்ணீர்.. கருகும் 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்..! டெல்டா விவசாயிகளுக்கு தீர்வு கிட்டுமா?

கருகும் பயிர்கள்:

இதன் காரணமாக நெல் பயிர்கள் முற்றிலும் கருகி வருகிறது. உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே இந்த பயிர்களை காப்பாற்ற முடியும் இல்லையென்றால் முற்றிலுமாக நெல் பயிர்கள் கருகிவிடும் நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தற்பொழுது பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கையை வைத்துள்ளனர்.

தூர்வாராத கால்வாய்:

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஆறு மற்றும் பாசன வாய்க்காலை தூர் வாருவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்து பல இடங்களில் ஆறு மற்றும் ஏ பி சேனல் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளே முள்ளை ஆற்றில் இருந்து பிரியும் மங்கள வாய்க்கால் கடந்த ஏழு வருடமாக தூர்வாரப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வாய்க்காலை நம்பி ஆதிரங்கம் சேகல் ஆகிய இரண்டு கிராமங்களில் 2000 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


கடைமடைக்கு வராத தண்ணீர்.. கருகும் 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்..! டெல்டா விவசாயிகளுக்கு தீர்வு கிட்டுமா?

இந்த நிலையில் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் மங்கள வாய்க்காலை தூர்வாராதன் காரணமாக இரண்டு கிராமங்களுக்கும் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு 1500 ஏக்கர் குருவை சாகுபடி செய்யப்பட்டு தண்ணீர் இல்லாமல் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு விவசாயி ஆயிரம் ரூபாய் பணம் போட்டு மங்கள வாக்காளை ஹிட்டாச்சி எந்திரம் மூலமாக தாங்களே தூர்வாரி வருகின்றனர்.

தற்பொழுது பயிரிடப்பட்ட குருவை நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வரும் நிலையில் அடுத்த கட்ட சாகுபடியான சம்பா சாகுபடியாவது முழுமையாக செய்ய வேண்டும் ஆகையால் நாங்களே பணம் போட்டு எங்களுடைய சொந்த செலவில் பாசன வாய்க்காலை தூர்வாரி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் முல்லையாற்றில் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் தண்ணீர் வந்தால் மட்டுமே தற்போது பயிரிட்டுள்ள பயிர்களை ஓரளவுக்காவது காப்பாற்ற முடியும் இல்லையென்றால் செய்த செலவு மொத்தமாக இழந்து விடுவோம் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
Trump Warns Iran: “அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
“அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
Embed widget