மேலும் அறிய

கடைமடைக்கு வராத தண்ணீர்.. கருகும் 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்..! டெல்டா விவசாயிகளுக்கு தீர்வு கிட்டுமா?

முள்ளையாறு என்ற ஆற்றின் மூலமாக பாசன வசதியை பெற்று வரும் நிலையில், இந்த ஆற்றில் தற்பொழுது தண்ணீர் மிக குறைந்த அளவு செல்வதால் நெல் பயிர்களுக்கு தண்ணீர் வைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

தரையோடு தரையாக செல்லும் தண்ணீர்:

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 60000 ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைப்பிலும் 29 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு பணியிலும் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்பட்டதை அடுத்து தண்ணீர் வந்து விடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் குறுவை நெல்சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தரையோடு தரையாக தண்ணீர் சொல்வதால் நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் உருவாகியுள்ளது.

குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் சேகள் நாகளுடயான்யிருப்பு மடபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்ட குறுவை நெல் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகிறது. இவர்களுக்கு முள்ளையாறு என்ற ஆற்றின் மூலமாக பாசன வசதியை பெற்று வரும் நிலையில் இந்த ஆற்றில் தற்பொழுது தண்ணீர் மிக குறைந்த அளவு செல்வதால் நெல் பயிர்களுக்கு தண்ணீர் வைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.


கடைமடைக்கு வராத தண்ணீர்.. கருகும் 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்..! டெல்டா விவசாயிகளுக்கு தீர்வு கிட்டுமா?

கருகும் பயிர்கள்:

இதன் காரணமாக நெல் பயிர்கள் முற்றிலும் கருகி வருகிறது. உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே இந்த பயிர்களை காப்பாற்ற முடியும் இல்லையென்றால் முற்றிலுமாக நெல் பயிர்கள் கருகிவிடும் நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தற்பொழுது பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கையை வைத்துள்ளனர்.

தூர்வாராத கால்வாய்:

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஆறு மற்றும் பாசன வாய்க்காலை தூர் வாருவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்து பல இடங்களில் ஆறு மற்றும் ஏ பி சேனல் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளே முள்ளை ஆற்றில் இருந்து பிரியும் மங்கள வாய்க்கால் கடந்த ஏழு வருடமாக தூர்வாரப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வாய்க்காலை நம்பி ஆதிரங்கம் சேகல் ஆகிய இரண்டு கிராமங்களில் 2000 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


கடைமடைக்கு வராத தண்ணீர்.. கருகும் 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்..! டெல்டா விவசாயிகளுக்கு தீர்வு கிட்டுமா?

இந்த நிலையில் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் மங்கள வாய்க்காலை தூர்வாராதன் காரணமாக இரண்டு கிராமங்களுக்கும் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு 1500 ஏக்கர் குருவை சாகுபடி செய்யப்பட்டு தண்ணீர் இல்லாமல் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு விவசாயி ஆயிரம் ரூபாய் பணம் போட்டு மங்கள வாக்காளை ஹிட்டாச்சி எந்திரம் மூலமாக தாங்களே தூர்வாரி வருகின்றனர்.

தற்பொழுது பயிரிடப்பட்ட குருவை நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வரும் நிலையில் அடுத்த கட்ட சாகுபடியான சம்பா சாகுபடியாவது முழுமையாக செய்ய வேண்டும் ஆகையால் நாங்களே பணம் போட்டு எங்களுடைய சொந்த செலவில் பாசன வாய்க்காலை தூர்வாரி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் முல்லையாற்றில் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் தண்ணீர் வந்தால் மட்டுமே தற்போது பயிரிட்டுள்ள பயிர்களை ஓரளவுக்காவது காப்பாற்ற முடியும் இல்லையென்றால் செய்த செலவு மொத்தமாக இழந்து விடுவோம் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Iran War: 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்.. ஹார்மஸ் ஓவர், அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்த ஈரான் - என்ன?
Trump Iran War: 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்.. ஹார்மஸ் ஓவர், அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்த ஈரான் - என்ன?
மது போதையில் தகராறு !! மாமனாரை துப்பாக்கியால் போட்டு தள்ளிய மருமகன்
மது போதையில் தகராறு !! மாமனாரை துப்பாக்கியால் போட்டு தள்ளிய மருமகன்
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
நெல்லை டூ மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: கோடை விடுமுறையில் பயணிகளுக்கு குட் நியூஸ்!
நெல்லை டூ மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: கோடை விடுமுறையில் பயணிகளுக்கு குட் நியூஸ்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்.. ஹார்மஸ் ஓவர், அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்த ஈரான் - என்ன?
Trump Iran War: 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்.. ஹார்மஸ் ஓவர், அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்த ஈரான் - என்ன?
TN Election 2026: ”வேன் மீதே நிற்பார், டாடா மட்டுமே காட்டுவார்” விஜய் மீது அட்டாக் - பெரம்பூரில் அன்புமணி ஆவேசம்
TN Election 2026: ”வேன் மீதே நிற்பார், டாடா மட்டுமே காட்டுவார்” விஜய் மீது அட்டாக் - பெரம்பூரில் அன்புமணி ஆவேசம்
Thirumavalavan: காட்டுமன்னார்கோயிலில் விசிக சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்காரர் - யார் இந்த ஜோதிமணி?
Thirumavalavan: காட்டுமன்னார்கோயிலில் விசிக சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்காரர் - யார் இந்த ஜோதிமணி?
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
Tirumavalavan: “நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
Embed widget