மேலும் அறிய

கடைமடைக்கு வராத தண்ணீர்.. கருகும் 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்..! டெல்டா விவசாயிகளுக்கு தீர்வு கிட்டுமா?

முள்ளையாறு என்ற ஆற்றின் மூலமாக பாசன வசதியை பெற்று வரும் நிலையில், இந்த ஆற்றில் தற்பொழுது தண்ணீர் மிக குறைந்த அளவு செல்வதால் நெல் பயிர்களுக்கு தண்ணீர் வைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

தரையோடு தரையாக செல்லும் தண்ணீர்:

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 60000 ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைப்பிலும் 29 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு பணியிலும் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்பட்டதை அடுத்து தண்ணீர் வந்து விடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் குறுவை நெல்சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தரையோடு தரையாக தண்ணீர் சொல்வதால் நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் உருவாகியுள்ளது.

குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் சேகள் நாகளுடயான்யிருப்பு மடபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்ட குறுவை நெல் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகிறது. இவர்களுக்கு முள்ளையாறு என்ற ஆற்றின் மூலமாக பாசன வசதியை பெற்று வரும் நிலையில் இந்த ஆற்றில் தற்பொழுது தண்ணீர் மிக குறைந்த அளவு செல்வதால் நெல் பயிர்களுக்கு தண்ணீர் வைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.


கடைமடைக்கு வராத தண்ணீர்.. கருகும் 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்..! டெல்டா விவசாயிகளுக்கு தீர்வு கிட்டுமா?

கருகும் பயிர்கள்:

இதன் காரணமாக நெல் பயிர்கள் முற்றிலும் கருகி வருகிறது. உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே இந்த பயிர்களை காப்பாற்ற முடியும் இல்லையென்றால் முற்றிலுமாக நெல் பயிர்கள் கருகிவிடும் நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தற்பொழுது பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கையை வைத்துள்ளனர்.

தூர்வாராத கால்வாய்:

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஆறு மற்றும் பாசன வாய்க்காலை தூர் வாருவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்து பல இடங்களில் ஆறு மற்றும் ஏ பி சேனல் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளே முள்ளை ஆற்றில் இருந்து பிரியும் மங்கள வாய்க்கால் கடந்த ஏழு வருடமாக தூர்வாரப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வாய்க்காலை நம்பி ஆதிரங்கம் சேகல் ஆகிய இரண்டு கிராமங்களில் 2000 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


கடைமடைக்கு வராத தண்ணீர்.. கருகும் 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்..! டெல்டா விவசாயிகளுக்கு தீர்வு கிட்டுமா?

இந்த நிலையில் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் மங்கள வாய்க்காலை தூர்வாராதன் காரணமாக இரண்டு கிராமங்களுக்கும் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு 1500 ஏக்கர் குருவை சாகுபடி செய்யப்பட்டு தண்ணீர் இல்லாமல் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு விவசாயி ஆயிரம் ரூபாய் பணம் போட்டு மங்கள வாக்காளை ஹிட்டாச்சி எந்திரம் மூலமாக தாங்களே தூர்வாரி வருகின்றனர்.

தற்பொழுது பயிரிடப்பட்ட குருவை நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வரும் நிலையில் அடுத்த கட்ட சாகுபடியான சம்பா சாகுபடியாவது முழுமையாக செய்ய வேண்டும் ஆகையால் நாங்களே பணம் போட்டு எங்களுடைய சொந்த செலவில் பாசன வாய்க்காலை தூர்வாரி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் முல்லையாற்றில் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் தண்ணீர் வந்தால் மட்டுமே தற்போது பயிரிட்டுள்ள பயிர்களை ஓரளவுக்காவது காப்பாற்ற முடியும் இல்லையென்றால் செய்த செலவு மொத்தமாக இழந்து விடுவோம் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ADGP Jayaram: ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் ரத்து கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் அதிரடி காட்டிய தமிழக அரசு- அனல் பறந்த வாதம்!
ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் ரத்து கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் அதிரடி காட்டிய தமிழக அரசு- அனல் பறந்த வாதம்!
MK Stalin: தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தை நம்பும் உலக நாடுகள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தை நம்பும் உலக நாடுகள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
IND Vs ENG: இந்தியாவின் இளம்படையும், இங்கிலாந்தின் பேரனுபவமும் - கில் முன்னே உள்ள சவால்கள், ரூட் எனும் அரக்கன்
IND Vs ENG: இந்தியாவின் இளம்படையும், இங்கிலாந்தின் பேரனுபவமும் - கில் முன்னே உள்ள சவால்கள், ரூட் எனும் அரக்கன்
America to Attack Iran?: ஈரானுக்கு நடக்கப்போகும் விபரீதம்; தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா - ஒரு சொல்லுக்காக வெயிட்டிங்
ஈரானுக்கு நடக்கப்போகும் விபரீதம்; தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா - ஒரு சொல்லுக்காக வெயிட்டிங்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

School Girl Plate Washing | பாத்திரம் கழுவும் மாணவிகள்! அரசு பள்ளியில் அவலம்! ஆக்‌ஷனில் அன்பில்மகேஷ்Kanchipuram Police | ”டேய் கைநீட்டி பேசுறியா” புகாரளித்த அதிமுக நிர்வாகி! விரட்டியடித்த POLICEInbanithi Stalin | ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி! அரசியலுக்கு அச்சாரம்?GK mani | காலை அருள்..மாலை ஜி.கே.மணிபாமக MLA-க்களுக்கு நெஞ்சுவலி!அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADGP Jayaram: ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் ரத்து கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் அதிரடி காட்டிய தமிழக அரசு- அனல் பறந்த வாதம்!
ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் ரத்து கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் அதிரடி காட்டிய தமிழக அரசு- அனல் பறந்த வாதம்!
MK Stalin: தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தை நம்பும் உலக நாடுகள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தை நம்பும் உலக நாடுகள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
IND Vs ENG: இந்தியாவின் இளம்படையும், இங்கிலாந்தின் பேரனுபவமும் - கில் முன்னே உள்ள சவால்கள், ரூட் எனும் அரக்கன்
IND Vs ENG: இந்தியாவின் இளம்படையும், இங்கிலாந்தின் பேரனுபவமும் - கில் முன்னே உள்ள சவால்கள், ரூட் எனும் அரக்கன்
America to Attack Iran?: ஈரானுக்கு நடக்கப்போகும் விபரீதம்; தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா - ஒரு சொல்லுக்காக வெயிட்டிங்
ஈரானுக்கு நடக்கப்போகும் விபரீதம்; தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா - ஒரு சொல்லுக்காக வெயிட்டிங்
10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு; துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! எப்படி?
10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு; துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! எப்படி?
’போலீஸ் வலையில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால்’ இதுதான் காரணம்..!
’போலீஸ் வலையில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால்’ இதுதான் காரணம்..!
'என்பீல்டு பைக் ரசிகர்களா நீங்கள் ?' அப்போ இது உங்களுக்காகதான்..!
'என்பீல்டு பைக் ரசிகர்களா நீங்கள் ?' அப்போ இது உங்களுக்காகதான்..!
"மயிலாடுதுறைக்கு பணிக்கு வர தயங்கும் மருத்துவர்கள்" அய்யோ, இதுதான் காரணமா..?
Embed widget