மேலும் அறிய

மானியத்திற்கு வந்த விதைகள் வியாபாரிகளுக்கு விற்பனை - அரசு ஊழியர்கள் 14 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

வேளாண்மை அலுவலர் கோமதி, துணை வேளாண்மை அலுவலர் மாறன், கண்காணிப்பாளர் சாந்தி, உள்ளிட்ட 14 நபர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த இரண்டு மாத காலமாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 1.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த விதை கிராமத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு  விதை நெல் வழங்கும் திட்டத்தில் போலி ஆவணங்களை தயாரித்து அதிகாரிகள் தனியாரிடம் விற்பதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து விவசாயிகள் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கொடுத்ததின் பெயரில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் 13 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை  காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர் 

மானியத்திற்கு வந்த விதைகள் வியாபாரிகளுக்கு விற்பனை - அரசு ஊழியர்கள் 14 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு
 
அப்பொழுது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 6 வேளாண்மை துறை ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். அப்போது லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினர் அனைவரிடமும் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 23 லட்சத்து 42 ஆயிரத்து 150 ரூபாய் பணம் இருந்துள்ளது. உடனடியாக அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 6 பேர் மீது மீது வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மேலும் 8 அரசு ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
குறிப்பாக மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய உளுந்து மற்றும் விதை நெல்லை தனியார் வியாபாரிகளுக்கு வலங்கைமான் வேளாண் துறை அதிகாரிகள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியை சேர்ந்த தனியார் வியாபாரியிடம் உளுந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோன்று திருவிடைமருதூர் தனியார் நெல் வியாபாரியிடம் விதை நெல் விற்பனை செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மானியத்திற்கு வந்த விதைகள் வியாபாரிகளுக்கு விற்பனை - அரசு ஊழியர்கள் 14 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு
 
அதுமட்டுமின்றி இதற்கு உடந்தையாக இருந்த வேளாண்மை அலுவலர் கோமதி, துணை வேளாண்மை அலுவலர் மாறன், கண்காணிப்பாளர் சாந்தி, ஆவூர் விதைநெல் அலுவலக மேலாளர் தியாகராஜன், ஆலங்குடி விதைநெல் அலுவலக மேலாளர் ஆறுமுகம், உள்ளிட்ட 14 நபர்கள் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வேளாண் துறை அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மாவட்டம் முழுவதும் எந்தெந்த இடங்களில் இதே போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tamilnadu Round Up: உயர்ந்த தங்கம் விலை, முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள், திருப்பூரில் படுகொலை - தமிழ்நாட்டில் இதுவரை
உயர்ந்த தங்கம் விலை, முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள், திருப்பூரில் படுகொலை - தமிழ்நாட்டில் இதுவரை
ரேஷன் கடைக்குள் ஹாயாக அமர்ந்திருந்த பூனை.. ஷாக்கான அமைச்சர்.. ஊழியர்களுக்கு வார்னிங்!
ரேஷன் கடைக்குள் ஹாயாக அமர்ந்திருந்த பூனை.. ஷாக்கான அமைச்சர்.. ஊழியர்களுக்கு வார்னிங்!
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
தொடரும் சோதனை.. தமிழ்நாட்டில் ஊழல் என்பதே இனி இருக்காது.. செங்கோட்டையன் உறுதி!
தொடரும் சோதனை.. தமிழ்நாட்டில் ஊழல் என்பதே இனி இருக்காது.. செங்கோட்டையன் உறுதி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
TN Weather Update: வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் அதிரடித் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
Tata Punch CNG: 31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
Bengaluru Pugazhendi: கலையப்போகும் அடுத்த அதிமுக.. தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
Bengaluru Pugazhendi: கலையப்போகும் அடுத்த அதிமுக.. தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Embed widget