மேலும் அறிய

திருநள்ளாறு, நல்லம்பல் ஏரி புத்துருவாக்கம் செய்யப்படுமா? கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்..!

காரைக்கால் மாவட்டம் குமாரகுடி, சேத்தூர், நெடுஞ்சேரி, மேனாகுடி, கீனாகுடி, உட்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாய பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு இந்த ஏரி ஆதாரமாக விளங்கி வருகிறது.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலையொட்டி வெட்டப்பட்டு சிதிலமடைந்து வருகின்ற நல்லம்பல் ஏரி புத்துருவாக்கம் செய்யப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் என்ற இடத்தில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், விவசாயிகளின் பாசன வசதிக்காகவும், பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், கடந்த 2006-ஆம் ஆண்டு சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று வெட்டப்பட்டது. இந்த ஏரியை வெட்டுவதற்காக விவசாயிகள் பயன்படுத்தி வந்த நிலத்தை அவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி, புதுச்சேரி மாநில அரசு புதிதாக ஏரியை வெட்டியதுடன், ஏரியை சுற்றிலும் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து ஏரியின் இயற்கை அழகை ரசிப்பதற்கு பல்வேறு கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி வைத்திருந்தனர். அரசலாறு தண்ணீர், நூல் ஆற்றின் வழியாக இந்த ஏரிக்கு தண்ணீர் நிரம்பி வந்தது.


திருநள்ளாறு, நல்லம்பல் ஏரி புத்துருவாக்கம் செய்யப்படுமா? கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்..!

இந்த ஏரியில் நீர் நிரம்பியதன் பலனாக காரைக்கால் மாவட்டம் குமாரகுடி, சேத்தூர், பண்டாரவடை, நல்லம்பல், தாமனாங்குடி, பேட்டை, வளத்தான்மங்கலம், திருவாரூர் மாவட்டம் நெடுஞ்சேரி, மேனாகுடி, கீனாகுடி, உட்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாய பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் இந்த ஏரி ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில்  கடந்த பத்து வருட காலமாக ஏரி உரிய பராமரிப்பின்றி முற்றிலும் சிதிலமடைந்து கிடக்கிறது. சுற்றுலா பயணிகள் வந்து அமரும் வகையில் அமைக்கப்பட்ட கட்டமைப்புகள் அனைத்தும் சிதிலமடைந்து  காணப்படுகின்றது. ஏரி உரிய முறையில் பராமரிக்கப்படாமல் ஆங்காங்கே தூர்ந்து போய்க் காணப்படுகிறது. இந்த நிலையில் திருநள்ளாறு செல்கின்ற பக்தர்களின் வசதியைக் கருதியும், 25 கிராமங்களில் நீராதாரத்தை கருத்தில் கொண்டும் ஏரியை சிறப்பு நிதி ஒதுக்கி புதுச்சேரி மாநில அரசு முழுமையாக தூர்வாருவதன் மூலம் முழுமையாக பராமரிப்பு செய்திட வேண்டும் மேலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் ஏரியை சுற்றியுள்ள சாலைகளை சீரமைத்தும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து அமர்ந்து இயற்கையை ரசிக்கும் வகையில் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் மக்கள்.


திருநள்ளாறு, நல்லம்பல் ஏரி புத்துருவாக்கம் செய்யப்படுமா? கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்..!
திருநள்ளாறு, நல்லம்பல் ஏரி புத்துருவாக்கம் செய்யப்படுமா? கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்..!

மேலும் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஏரியின் அருகே சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் புதுச்சேரி அரசு நல்லம்பல் ஏரியின் அருகே சிறுவர் பூங்கா அமைக்கப்படும் அதற்கான நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தது. ஆனால் இதற்கான எந்த பணியும் இதுவரை தொடங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுவர்கள் என அனைவரும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடமாக இந்த ஏரியை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அந்த ஏரியை சுற்றி அமைக்கப்பட்ட சாலை முழுவதுமாக பழுதடைந்துள்ளது. இதனால் தற்போது பொதுமக்கள் யாரும் நடைபயிற்சி மேற்கொள்ளப்படாமல் உள்ளது உடனடியாக சாலையை புதுப்பித்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில் ஏரியை சீர்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தேர்வர்கள் கவனத்திற்கு! 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி இல்லை: டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுக்கான அதிரடி உத்தரவு!
தேர்வர்கள் கவனத்திற்கு! 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி இல்லை: டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுக்கான அதிரடி உத்தரவு!
ஈரான்-இஸ்ரேல் போர்! ஒரே நாளில் ₹20 உயர்ந்த LPG விலை! ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி
ஈரான்-இஸ்ரேல் போர்! ஒரே நாளில் ₹20 உயர்ந்த LPG விலை! ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் ரெடி… WiFi, CCTV உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் திறப்பு...
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் ரெடி… WiFi, CCTV உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் திறப்பு...
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Embed widget