மேலும் அறிய

திருநள்ளாறு, நல்லம்பல் ஏரி புத்துருவாக்கம் செய்யப்படுமா? கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்..!

காரைக்கால் மாவட்டம் குமாரகுடி, சேத்தூர், நெடுஞ்சேரி, மேனாகுடி, கீனாகுடி, உட்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாய பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு இந்த ஏரி ஆதாரமாக விளங்கி வருகிறது.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலையொட்டி வெட்டப்பட்டு சிதிலமடைந்து வருகின்ற நல்லம்பல் ஏரி புத்துருவாக்கம் செய்யப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் என்ற இடத்தில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், விவசாயிகளின் பாசன வசதிக்காகவும், பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், கடந்த 2006-ஆம் ஆண்டு சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று வெட்டப்பட்டது. இந்த ஏரியை வெட்டுவதற்காக விவசாயிகள் பயன்படுத்தி வந்த நிலத்தை அவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி, புதுச்சேரி மாநில அரசு புதிதாக ஏரியை வெட்டியதுடன், ஏரியை சுற்றிலும் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து ஏரியின் இயற்கை அழகை ரசிப்பதற்கு பல்வேறு கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி வைத்திருந்தனர். அரசலாறு தண்ணீர், நூல் ஆற்றின் வழியாக இந்த ஏரிக்கு தண்ணீர் நிரம்பி வந்தது.


திருநள்ளாறு, நல்லம்பல் ஏரி புத்துருவாக்கம் செய்யப்படுமா? கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்..!

இந்த ஏரியில் நீர் நிரம்பியதன் பலனாக காரைக்கால் மாவட்டம் குமாரகுடி, சேத்தூர், பண்டாரவடை, நல்லம்பல், தாமனாங்குடி, பேட்டை, வளத்தான்மங்கலம், திருவாரூர் மாவட்டம் நெடுஞ்சேரி, மேனாகுடி, கீனாகுடி, உட்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாய பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் இந்த ஏரி ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில்  கடந்த பத்து வருட காலமாக ஏரி உரிய பராமரிப்பின்றி முற்றிலும் சிதிலமடைந்து கிடக்கிறது. சுற்றுலா பயணிகள் வந்து அமரும் வகையில் அமைக்கப்பட்ட கட்டமைப்புகள் அனைத்தும் சிதிலமடைந்து  காணப்படுகின்றது. ஏரி உரிய முறையில் பராமரிக்கப்படாமல் ஆங்காங்கே தூர்ந்து போய்க் காணப்படுகிறது. இந்த நிலையில் திருநள்ளாறு செல்கின்ற பக்தர்களின் வசதியைக் கருதியும், 25 கிராமங்களில் நீராதாரத்தை கருத்தில் கொண்டும் ஏரியை சிறப்பு நிதி ஒதுக்கி புதுச்சேரி மாநில அரசு முழுமையாக தூர்வாருவதன் மூலம் முழுமையாக பராமரிப்பு செய்திட வேண்டும் மேலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் ஏரியை சுற்றியுள்ள சாலைகளை சீரமைத்தும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து அமர்ந்து இயற்கையை ரசிக்கும் வகையில் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் மக்கள்.


திருநள்ளாறு, நல்லம்பல் ஏரி புத்துருவாக்கம் செய்யப்படுமா? கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்..!
திருநள்ளாறு, நல்லம்பல் ஏரி புத்துருவாக்கம் செய்யப்படுமா? கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்..!

மேலும் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஏரியின் அருகே சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் புதுச்சேரி அரசு நல்லம்பல் ஏரியின் அருகே சிறுவர் பூங்கா அமைக்கப்படும் அதற்கான நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தது. ஆனால் இதற்கான எந்த பணியும் இதுவரை தொடங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுவர்கள் என அனைவரும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடமாக இந்த ஏரியை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அந்த ஏரியை சுற்றி அமைக்கப்பட்ட சாலை முழுவதுமாக பழுதடைந்துள்ளது. இதனால் தற்போது பொதுமக்கள் யாரும் நடைபயிற்சி மேற்கொள்ளப்படாமல் உள்ளது உடனடியாக சாலையை புதுப்பித்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில் ஏரியை சீர்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

செங்கல்பட்டு மக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! ₹25 லட்சம் வரை அரசாங்கக் கடன்.. உடனே இதைப் படிங்க!
செங்கல்பட்டு மக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! ₹25 லட்சம் வரை அரசாங்கக் கடன்.. உடனே இதைப் படிங்க!
வெப்ப அலை விடுமுறை ஈடுசெய்ய... புதுச்சேரி பள்ளிகளுக்கு 7 சனிக்கிழமைகள் வேலை நாட்கள்!
வெப்ப அலை விடுமுறை ஈடுசெய்ய... புதுச்சேரி பள்ளிகளுக்கு 7 சனிக்கிழமைகள் வேலை நாட்கள்!
புதுச்சேரி பெற்றோர்களே அலர்ட்! ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை வீடு தேடி வரும் ஓஆர்எஸ், துத்தநாக மாத்திரைகள்!
புதுச்சேரி பெற்றோர்களே அலர்ட்! ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை வீடு தேடி வரும் ஓஆர்எஸ், துத்தநாக மாத்திரைகள்!
விழுப்புரத்திற்கு டபுள் ட்ரீட்! ரூ.42 கோடியில் புதுப்பிக்கும் வீடூர் அணை... தயார் நிலையில் பிரம்மாண்ட வேளாண் மையம்!
விழுப்புரத்திற்கு டபுள் ட்ரீட்! ரூ.42 கோடியில் புதுப்பிக்கும் வீடூர் அணை... தயார் நிலையில் பிரம்மாண்ட வேளாண் மையம்!

வீடியோ

Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
Chennai Power Cut: சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
Embed widget