மேலும் அறிய

ஸ்டெர்லைட் ஆலையில் இயந்திரங்கள் பல இடங்களில் துருபிடித்த நிலையில் காணப்படுகின்றன - மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன்

4 ஆண்டுகளாக செயல்படாத ஆலை என்பதால் அதன் செயல்பாட்டை இப்போது கணிக்க முடியாது. இயந்திரங்கள் பல இடங்களில் துருபிடித்த நிலையில் காணப்படுகின்றன.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவுபடி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைப்பட்டுள்ளது. மேலும், ஆலை முழுமையாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


ஸ்டெர்லைட் ஆலையில் இயந்திரங்கள் பல இடங்களில் துருபிடித்த நிலையில் காணப்படுகின்றன - மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன்

ஆலை சுமார் 4 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடப்பதால் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் ஆலையில் உள்ள இயந்திரங்கள் மற்றும் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன. எனவே, ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என வேதாந்தா குழுமம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்துள்ளது.


ஸ்டெர்லைட் ஆலையில் இயந்திரங்கள் பல இடங்களில் துருபிடித்த நிலையில் காணப்படுகின்றன - மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன்

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள இயந்திரங்கள் மற்றும் ஆலை வளாகத்தில் உள்ளிட்ட கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. சென்னை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் கண்ணன் தலைமையில், மதுரை தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் (பதிவு) ரவிச்சந்திரன், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மதுரை தென்மண்டல துணை இயக்குநர் விஜயகுமார், சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் (சிவில்) செந்தில், சென்னை ஐஐடி பேராசிரியர் சம்பத், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் திருநெல்வேலி இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயலெட்சுமி ஆகிய 6 பேர் இந்த உயர்மட்டக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி வந்தனர். ஆனால், அப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் அப்போது ஆலையில் ஆய்வு செய்ய முடியவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மட்டும் நடத்திவிட்டு குழுவினர் திரும்பிச் சென்றனர்.


ஸ்டெர்லைட் ஆலையில் இயந்திரங்கள் பல இடங்களில் துருபிடித்த நிலையில் காணப்படுகின்றன - மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன்

இந்நிலையில் தமிழக அரசின் உயர்மட்டக் குழுவினர் மீண்டும் தூத்துக்குடிக்கு வந்தனர். இக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று தங்கள் ஆய்வு பணியை தொடங்கினர். ஆலையில் உள்ள அனைத்து இயந்திரங்கள், கட்டிடங்களை முழுமையாக ஆய்வு செய்து, அவைகளின் தற்போதைய நிலை, பாதுகாப்பு குறித்து உரிய பரிசோதனைகளை செய்தனர். மேலும், ஆலை வளாகத்தில் அபாயகரமான கழிவுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் இந்த ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து உயர்மட்டக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தூத்துக்குடி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சத்தியராஜ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஸ்டெர்லைட் ஆலையின் தற்போதைய நிலவரம், அங்குள்ள இயந்திரங்கள் மற்றும் கட்டிடங்களின் நிலை மற்றும் ஆலை வளாகத்தில் உள்ள பொருட்கள், ரசாயனம் குறித்து உயர்மட்ட குழுவினர், ஆட்சியர் தலைமையிலான உள்ளூர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.


ஸ்டெர்லைட் ஆலையில் இயந்திரங்கள் பல இடங்களில் துருபிடித்த நிலையில் காணப்படுகின்றன - மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன்

இந்த ஆலோசனைக்கு பிறகு உயர்மட்டக் குழுவினர் தலைவரான தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கட்டிடங்கள் மற்றும் இயந்திரங்களின் பாதுகாப்பு தொடர்பாக அந்த நிறுவனத்தினர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் உள்ள சாராம்சங்களை ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. குழுவினர் ஏற்கனவே ஒரு முறை ஆய்வு செய்ய வந்த போது உள்ளாட்சித் தேர்தல் காரணமாக ஆய்வு செய்ய முடியவில்லை. எனவே, தற்போது மீண்டும் வந்து ஆய்வை முடித்துள்ளோம். ஆலையில் உள்ள கட்டிடங்கள், இயந்திரங்கள் எந்த நிலையில் உள்ளன, ரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா, ஆலை வளாகத்தில் உள்ள பசுமை பரப்பு போன்றவற்றை ஆய்வு செய்துள்ளோம். 4 ஆண்டுகளாக செயல்படாத ஆலை என்பதால் அதன் செயல்பாட்டை இப்போது கணிக்க முடியாது. இயந்திரங்கள் பல இடங்களில் துருபிடித்த நிலையில் காணப்படுகின்றன. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்படும். தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் போது அந்த அறிக்கையும் இணைத்து தாக்கல் செய்யப்படும் என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Embed widget