மேலும் அறிய

’’எங்களுக்கு விடியல் வேண்டும்’’- தஞ்சாவூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

’’வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அரசின் போனஸ் அறிவிப்பு உள்ளது.  கடந்த ஆட்சியின் போது வைத்த கோரிக்கைகள் தீராத நிலையில்,  ஆட்சி மாற்றத்திற்குப் பின் புதிய பாதிப்புகளும் உருவாகியுள்ளது’’

தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க சிஐடியு சார்பில் போக்குவரத்து தொழிலாளருக்கு விடியல் காண உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கழகங்களில் பற்றாக்குறையை ஈடுகட்ட வரவுக்கும் செலவுக்கும் ஆன வித்தியாச தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி உதவி வழங்க வேண்டும், புதிய பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும். ஒய்வுபெற்றோர்  பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு அமல்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும்,  அதிகாரிகளின் அடாவடிக்கு முடிவு கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பனிமலை தலைவர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெயபால் கலந்து கொண்டு பேசுகையில், போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 ஆண்டுகளில், 4 வேலை நிறுத்தங்கள், காத்திருப்பு போராட்டம், கோட்டை முற்றுகை மட்டுமின்றி எண்ணற்ற ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களை நடத்தினோம்.  அதிமுக அரசு நமது கோரிக்கையை அலட்சியப்படுத்தியது. இதனால் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் வெறுப்புக்கு உள்ளாகியது.  இதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.  


’’எங்களுக்கு விடியல் வேண்டும்’’- தஞ்சாவூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண கிடைக்கும் என தொழிலாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.  ஆனால் ஆறு மாத காலம் இந்த பிரச்சனை தீர்வு கிடைக்கவில்லை.  இறுதியாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அரசின் போனஸ் அறிவிப்பு உள்ளது.  கடந்த ஆட்சியின் போது வைத்த கோரிக்கைகள் தீராத நிலையில்,  ஆட்சி மாற்றத்திற்குப் பின் புதிய பாதிப்புகளும் உருவாகியுள்ளது. பணியின் போது ஏற்படும் உணவு, டீசல் செலவை ஈடுகட்ட பேட்டா வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் இலவச பயணம் என்ற அறிவிப்பால், அரைகுறை பேட்டாவையும் பறித்து விட்டது. இது அவசர பிரச்சனை உடனே தீர்க்க வேண்டும் என அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கு பல முறை மனு மேல் மனு கொடுத்தும் அலட்சியப்படுத்தும் கொடுமை அரங்கேறி வருகிறது. இன்சென்டிவ் உயர்த்த வேண்டும் என்பது கோரிக்கை பேச்சுவார்த்தைக்கான கோரிக்கைகளில் ஒன்று. ஆனால் இருக்கும் இன்சென்ட்டிவை  பறிப்பதற்கான மோசடியான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  ஆறு வருடம் என்ற பேருந்துகளின் ஆயுட்காலத்தை 9 வருடமாக அரசாணை பிறப்பித்து விட்டு, உதிரிபாகம் இல்லாமல் வாகனம் ஓட்ட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.


’’எங்களுக்கு விடியல் வேண்டும்’’- தஞ்சாவூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

டயர், பேட்டரி, பிரேக் லைனிங்  போன்ற அடிப்படை உபகரணம் கூட இல்லாமல் போக்குவரத்து கழகங்கள் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.  சாதாரணமாக ஒருவர் இடமாற்றம் வேண்டும் என்றால், அமைச்சர் சொல்ல வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இடமாற்றம் கேட்கும் தொழிலாளர்கள் அனைவரும் கோட்டைக்குச் சென்று அமைச்சரை பார்க்க முடியாமா என்பது வேதனையான விஷயமாகும். மேலும், வாரத்தில் ஒருநாள் சட்டப்படி வழங்க வேண்டிய வாரம் ஓய்வும் பறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது ஆனால் தொழிலாளர்களின் அவலநிலை மாறவில்லை. கடந்தாட்சி போலவே உள்ளது. அதிகாரிகளின் அடாவடித்தனமும் குறையவில்லை. அடுத்த ஒப்பந்தமும் பத்து மாதத்தில் வந்துவிடும்.  இனியும் தமிழக அரசு தாமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, எனவே தமிழக அரசு உடனடியாக மேற்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’  வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ
Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’ வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ
Pak. Downed Indian Jets: இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
Modi Vs Congress: “ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
Kerala Monsoon Bumper Lottery 2025: அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’  வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ
Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’ வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ
Pak. Downed Indian Jets: இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
Modi Vs Congress: “ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
Kerala Monsoon Bumper Lottery 2025: அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
Seeman Vs Aadhav Arjuna: அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Embed widget