மேலும் அறிய

’’எங்களுக்கு விடியல் வேண்டும்’’- தஞ்சாவூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

’’வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அரசின் போனஸ் அறிவிப்பு உள்ளது.  கடந்த ஆட்சியின் போது வைத்த கோரிக்கைகள் தீராத நிலையில்,  ஆட்சி மாற்றத்திற்குப் பின் புதிய பாதிப்புகளும் உருவாகியுள்ளது’’

தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க சிஐடியு சார்பில் போக்குவரத்து தொழிலாளருக்கு விடியல் காண உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கழகங்களில் பற்றாக்குறையை ஈடுகட்ட வரவுக்கும் செலவுக்கும் ஆன வித்தியாச தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி உதவி வழங்க வேண்டும், புதிய பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும். ஒய்வுபெற்றோர்  பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு அமல்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும்,  அதிகாரிகளின் அடாவடிக்கு முடிவு கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பனிமலை தலைவர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெயபால் கலந்து கொண்டு பேசுகையில், போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 ஆண்டுகளில், 4 வேலை நிறுத்தங்கள், காத்திருப்பு போராட்டம், கோட்டை முற்றுகை மட்டுமின்றி எண்ணற்ற ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களை நடத்தினோம்.  அதிமுக அரசு நமது கோரிக்கையை அலட்சியப்படுத்தியது. இதனால் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் வெறுப்புக்கு உள்ளாகியது.  இதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.  


’’எங்களுக்கு விடியல் வேண்டும்’’- தஞ்சாவூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண கிடைக்கும் என தொழிலாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.  ஆனால் ஆறு மாத காலம் இந்த பிரச்சனை தீர்வு கிடைக்கவில்லை.  இறுதியாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அரசின் போனஸ் அறிவிப்பு உள்ளது.  கடந்த ஆட்சியின் போது வைத்த கோரிக்கைகள் தீராத நிலையில்,  ஆட்சி மாற்றத்திற்குப் பின் புதிய பாதிப்புகளும் உருவாகியுள்ளது. பணியின் போது ஏற்படும் உணவு, டீசல் செலவை ஈடுகட்ட பேட்டா வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் இலவச பயணம் என்ற அறிவிப்பால், அரைகுறை பேட்டாவையும் பறித்து விட்டது. இது அவசர பிரச்சனை உடனே தீர்க்க வேண்டும் என அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கு பல முறை மனு மேல் மனு கொடுத்தும் அலட்சியப்படுத்தும் கொடுமை அரங்கேறி வருகிறது. இன்சென்டிவ் உயர்த்த வேண்டும் என்பது கோரிக்கை பேச்சுவார்த்தைக்கான கோரிக்கைகளில் ஒன்று. ஆனால் இருக்கும் இன்சென்ட்டிவை  பறிப்பதற்கான மோசடியான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  ஆறு வருடம் என்ற பேருந்துகளின் ஆயுட்காலத்தை 9 வருடமாக அரசாணை பிறப்பித்து விட்டு, உதிரிபாகம் இல்லாமல் வாகனம் ஓட்ட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.


’’எங்களுக்கு விடியல் வேண்டும்’’- தஞ்சாவூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

டயர், பேட்டரி, பிரேக் லைனிங்  போன்ற அடிப்படை உபகரணம் கூட இல்லாமல் போக்குவரத்து கழகங்கள் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.  சாதாரணமாக ஒருவர் இடமாற்றம் வேண்டும் என்றால், அமைச்சர் சொல்ல வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இடமாற்றம் கேட்கும் தொழிலாளர்கள் அனைவரும் கோட்டைக்குச் சென்று அமைச்சரை பார்க்க முடியாமா என்பது வேதனையான விஷயமாகும். மேலும், வாரத்தில் ஒருநாள் சட்டப்படி வழங்க வேண்டிய வாரம் ஓய்வும் பறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது ஆனால் தொழிலாளர்களின் அவலநிலை மாறவில்லை. கடந்தாட்சி போலவே உள்ளது. அதிகாரிகளின் அடாவடித்தனமும் குறையவில்லை. அடுத்த ஒப்பந்தமும் பத்து மாதத்தில் வந்துவிடும்.  இனியும் தமிழக அரசு தாமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, எனவே தமிழக அரசு உடனடியாக மேற்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றார்.

தலைப்பு செய்திகள்

காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
நெற்றியில் பட்டைநாமம், காய்கறி மாலை: விவசாயிகள் நடத்திய நூதன மனு அளிக்கும் போராட்டம்
நெற்றியில் பட்டைநாமம், காய்கறி மாலை: விவசாயிகள் நடத்திய நூதன மனு அளிக்கும் போராட்டம்
ABP Nadu Impact: மாற்றத்தை விதைத்த 'ஏபிபிநாடு' செய்தி! பூதலூர் கோவில்பத்து பேருந்து நிழற்குடை சீரமைப்பு!
ABP Nadu Impact: மாற்றத்தை விதைத்த 'ஏபிபிநாடு' செய்தி! பூதலூர் கோவில்பத்து பேருந்து நிழற்குடை சீரமைப்பு!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget