மேலும் அறிய

வாக்காளர் பட்டியல் பணியில் உயர் அதிகாரி திட்டியதால் விஏஓ உடல்நலம் பாதிப்பு

தேர்தல் பணி மற்றும் தன்னுடைய கிராம நிர்வாக அலுவலர் பணி நிமித்தமாக கொளக்குடிக்கும் அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருங்கப்பள்ளம் - சாந்தாம்பேட்டை பகுதிக்கும் அலைந்து திரிந்து வந்துள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் வாக்காளர் தீவிர திருத்தப் பணியில், உயர் அலுவலர் திட்டியதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி உடல்நிலை பாதிக்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மற்ற அரசு அலுவலர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா, குருவிக்கரம்பை முனுமாக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (47). இவரது மனைவி சித்ரா. கல்லூரியில் படிக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பழனிவேல் பேராவூரணி வட்ட அலுவலகத்துக்கு உட்பட்ட கொளக்குடி கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மருங்கப்பள்ளம் - சாந்தாம்பேட்டை பகுதியில், தேர்தல் தொடர்பான பணி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தேர்தல் பணி மற்றும் தன்னுடைய கிராம நிர்வாக அலுவலர் பணி நிமித்தமாக கொளக்குடிக்கும் அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருங்கப்பள்ளம் - சாந்தாம்பேட்டை பகுதிக்கும் மாறி மாறி அலைந்து திரிந்து பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி பேராவூரணி வட்ட அலுவலகத்தில் தேர்தல் பணி தொடர்பாக மீளாய்வுக் கூட்டம் நடந்ததாக கூறப்படுகிறது.

இக்கூட்டத்தில், பேராவூரணி தொகுதி தேர்தல் அலுவலரும் முத்திரைத்தாள் துணை ஆட்சியருமான கலியபெருமாள் என்பவர் தேர்தல் பணியை பழனிவேல் ஒழுங்காக செய்யவில்லை. முடிந்தால் செய்யுங்கள் இல்லை என்றால், வேலையை விட்டுச் செல்லுங்கள் என சக அலுவலர்கள், பணியாளர்கள் முன்னிலையில் கோபமாக திட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால் கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல் கடந்த இரு தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 24ம் தேதி மருங்கப்பள்ளம் - சாந்தாம்பேட்டை பகுதியில் தேர்தல் பணியில் இருந்த போது, திடீரென அவருக்கு வாய்குளறி பேச முடியாமல் தவித்த பழனிவேல் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடன் அக்கம்பக்கம் இருந்த பொதுமக்கள் அவரை மயக்கம் தெளிவித்து எழுப்பிய போதும் அவருக்கு பேச்சு வரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதையடுத்து, பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு, அவரை அங்கிருந்து வாகனம் மூலம் பேராவூரணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.  இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் அவரை சக கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினர். தற்போதும் பழனிவேல் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். 

இதுகுறித்து அவரது உறவினர்கள் மற்றும் சக அலுவலர்கள் கூறுகையில், "தேர்தல் பணி தொடர்பாக நேரம் காலம் இல்லாமலும், போதிய அவகாசம் வழங்காமலும், அலுவலர்கள் வேலை செய்யச் சொல்லி வற்புறுத்துகின்றனர். வாக்காளர் விண்ணப்பத்தினை வாங்கி வந்து வட்ட அலுவலகத்தில் பழனிவேல் ஒப்படைத்தும், அதனை கணினியில் பதிவேற்றம் செய்யாமல் இருந்தது கிராம நிர்வாக அலுவலர் தவறல்ல.

இருந்தும் பொது இடத்தில் மற்றவர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் ஆணையம் வாக்காளர் தீவிர திருத்தப் பணியை ஆரம்பித்ததில் இருந்து அலுவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உடல்நல பாதிப்பு, தற்கொலைக்கு முயல்வது, தற்கொலை செய்து கொண்டது என்று தொடர்கதை ஆகியுள்ளது. இச்சம்பவம் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
Watch Video: நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்.. சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள் - காலையிலே திக்.. திக்..!
Watch Video: நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்.. சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள் - காலையிலே திக்.. திக்..!
JOB ALERT: இன்டர்வியூக்கு வாங்க அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்குங்க.! 5000 பேருக்கு ஜாக்பாட் ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வாங்க அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்குங்க.! 5000 பேருக்கு ஜாக்பாட் அறிவிப்பு
Embed widget