மேலும் அறிய

Watch Video: நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்.. சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள் - காலையிலே திக்.. திக்..!

சென்னை சென்ட்ரல் - உயர்நீதிமன்றம் இடையே பாதி வழியிலே நின்ற ரயிலில் இருந்து பயணிகள் சுரங்கப்பாதை வழியாக சென்றனர்.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் போக்குவரத்துக்கு முக்கிய பலமாக இருப்பது மெட்ரோ சேவை ஆகும். மழைக்காலங்களில் மக்கள் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றிற்கு மாணவர்கள் சென்று வருவதற்கு மிகவும் பக்கபலமாக மெட்ரோ சேவை உள்ளது. 

நடுவழியில் சிக்கிய மெட்ரோ ரயில்:

சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையில் ஒரு வழித்தடத்திலும், சென்னை விமான நிலையம் முதல் சென்ட்ரல் நிலையம் வரையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை காலையில் சென்று கொண்டிருந்தது. 

அப்போது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 500 மீட்டரை கடந்து உயர்நீதிமன்றம் மெட்ரோ செல்லும் வழியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறால் ரயில் நின்றது. மெட்ரோ ரயில் ஓட்டுனர் அதை சரி செய்ய முயற்சித்தார். ஆனால், அவரால் சரி செய்ய இயலவில்லை. பின்னர், மெட்ரோ நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டார். 

சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள்:

மெட்ரோ திடீரென நடுவழியில் நீண்ட நேரம் நின்றதால் பயணிகள் அச்சத்திற்கு ஆளானார்கள். மேலும், மெட்ரோ ரயில் உள்ளே விளக்குகளும் அணைந்ததால் பயணிகள் மிகுந்த பீதிக்கு ஆளாகியுள்ளனர். அனைவரும் தங்களது கைகளில் இருந்த செல்போன் வெளிச்சத்தை பயன்படுத்தியுள்ளனர். 

சுமார் அரைமணி நேரமாக சுரங்கப்பாதை உள்ளே மெட்ரோ ரயில் மாட்டிக் கொண்டதால் பயணிகளை மீட்பதற்கு மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது. சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக மெட்ரோ உள்ளே பயணிகள் சிக்கிக் கொண்டதால் அவசர கால கதவுகள் திறக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு மெட்ரோ ரயில் ஓட்டுனர் மூலமாக அளிக்கப்பட்டது. 

காரணம் என்ன?

காலை 5.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தபோது அதிகளவு பயணிகள் மெட்ரோ ரயிலின் உள்ளே இல்லை. பின்னர், இந்த சம்பவம் சீரான பிறகு சுமார் 6.20 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல சீராக இயங்கி வருகிறது.

இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன? மழைக்காலத்தில் இதுபோன்று இனிமேல் நடக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து மெட்ரோ நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
Watch Video: நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்.. சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள் - காலையிலே திக்.. திக்..!
Watch Video: நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்.. சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள் - காலையிலே திக்.. திக்..!
Embed widget