மேலும் அறிய

Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?

DOT Telecom: நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து போன்களிலும் இனி சஞ்சார் சாதி (Sanchar Saathi) செயலி கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

DOT Telecom: மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் அனைத்து போன்களிலும் சஞ்சார் சாதி செயலியை கட்டாயமாக்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு உத்தரவு:

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது உள்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து செல்போன்களிலும் இனி, சஞ்சார் சாதி செயலி கட்டாயம் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசின் தொலைதொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. தொலைதொடர்பு சேவைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சஞ்சார் சாதி செயலி கட்டாயம்:

கடந்த 28ம் தேதி வெளியிட்டப்பட்டுள்ள உத்தரவில், “ புதிய போனை வாங்கிய பிறகு பயன்படுத்துவதற்கு ஏதுவாக அதனை தயார்படுத்தும்போதே, செயலியானது வெளிப்படையாக தெரியும் வகையிலும், பயன்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். செயலியை மறைக்கவோ, செயலிழக்க செய்யவோ அல்லது செயலியின் அம்சங்களை கட்டுப்படுத்தவோ உற்பத்தியாளர்களுக்கு அனுமதி இல்லை.  நிறுவனங்கள் உத்தரவை செயல்படுத்த 90 நாட்களும், இணக்க அறிக்கையை தாக்கல் செய்ய 120 நாட்களும் அவகாசம் உள்ள” என தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே கடைகளில் உள்ள சாதனங்களுக்கு, சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் பயன்பாட்டை வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.

சஞ்சார் சாதி செயலியின் பயன் என்ன?

சஞ்சார் சாதி என்பது சைபர் மோசடியை எதிர்த்துப் போராடவும் தொலைத்தொடர்பு பாதுகாப்பை வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட, குடிமக்களை மையமாகக் கொண்ட செயலியாகும். இதன்மூலம்,

  • ஒரு மொபைல் போன் உண்மையானதா என்பதை அதன் IMEI எண்ணைப் பயன்படுத்தி சரிபார்க்கலாம்
  • சந்தேகிக்கப்படும் மோசடி அழைப்புகள் அல்லது செய்திகளைப் புகாரளிக்கலாம்
  • தொலைந்த அல்லது திருடப்பட்ட தொலைபேசிகளை பற்றி புகாரளிக்கலாம்
  • பயனர்களின் பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ள அனைத்து மொபைல் இணைப்புகளையும் அறியலாம்
  • வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நம்பகமான தொடர்பு விவரங்களை அணுகலாம்

ஏன் இந்த செயலி அவசியம்:

ஒரு நேரத்தில் பல சாதனங்களில் ஒரே சாதனம் தோன்றும் சந்தர்ப்பங்கள் உட்பட, போலி IMEI-கள் கடுமையான பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்று தொலைதொடர்புத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவின் பெரிய செகண்ட் ஹேண்ட் மொபைல் சந்தையில், திருடப்பட்ட அல்லது ப்லாக் லிஸ்டில் சேர்க்கப்பட்ட கைபேசிகள் மறுவிற்பனை செய்யப்படுவதும், தற்செயலாக வாங்குபவர்களை குற்றச் செயல்களில் தொடர்புபடுத்துவது ஆகியவை அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் தொலைபேசி வாங்குவதற்கு முன், அதன் IMEI தடுக்கப்பட்டுள்ளதா அல்லது கருப்புப் பட்டியலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க Sanchar Saathi பயனர்களுக்கு உதவுகிறது. மொபைல் போன்களின் 15 இலக்க IMEI எண் உட்பட தொலைத்தொடர்பு அடையாளங்காட்டிகளை சேதப்படுத்துவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களாகும், மேலும் தொலைத்தொடர்புச் சட்டம் 2023 இன் கீழ் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ரூ.50 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு ஆப்பிள், சாம்சங், கூகுள், விவோ, ஒப்போ மற்றும் சியோமி உள்ளிட்ட அனைத்து முக்கிய மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கும் பொருந்தும், அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே இந்தியாவில் தங்கள் சாதனங்களை உற்பத்தி செய்கின்றன. இந்த செயலியை பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்யலாம்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு:

சஞ்சார் சாதி செயலியை அனைத்து போன்களிலும் காட்டாயப்படுத்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்த உத்தரவால் குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் இன்றியமையாத பகுதியான தனியுரிமைகள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.  முன்கூட்டியே ஏற்றப்பட்ட, நீக்க முடியாத அரசாங்க செயலி, ஒவ்வொரு இந்தியரையும் கண்காணிக்க ஒரு டிஸ்டோபியன் கருவியாகும். இது ஒவ்வொரு குடிமகனின் ஒவ்வொரு அசைவு, தொடர்பு மற்றும் முடிவைக் கண்காணிப்பதற்கான ஒரு வழிமுறையாகும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
Watch Video: நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்.. சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள் - காலையிலே திக்.. திக்..!
Watch Video: நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்.. சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள் - காலையிலே திக்.. திக்..!
Embed widget