மேலும் அறிய

பெரிய கோயிலின் நுணுக்கமான கட்டிட அமைப்புக்கு 2 பேர் காரணமாம்: அவர்கள் யார்?

நுணுக்கமாக கல்லில் பொறித்துவைத்த அவரது நிர்வாகம் எவ்வளவு சீரும் சிறப்புடனும் நடந்திருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தஞ்சாவூர்: அதிசயங்களே அசந்து போகும் அளவிற்கு திரும்பும் இடமெல்லாம் வியக்க வைக்கும், உலகமே அண்ணாந்து பார்க்கும் பெரியகோவில் தன்னுள் ஏராளமான அதிசயங்களை அடங்கி உள்ளது என்றால் மிகையில்லை. ஒவ்வொரு சதுர அடியிலும் நம் முன்னோர்களின் சிறந்த உழைப்பையும், நுணுக்கமான வேலைப்பாடுகளையும், கட்டிடக்கலையில் காட்டிய திறமையையும் வெளிப்படும்.

இன்றும் உலகம் ராஜராஜனை போற்றுகிறது. பெரிய கோவிலை ராஜராஜன் தட்சிண மேரு என்றும் அழைத்தார். அதற்கு காரணம் என்ன தெரியுங்களா? வடதிசையில் மேரு மலை என்பது உயரத்துக்கும், புனிதத்துக்கும் பெயர் பெற்ற மலை. அதுபோல தென் திசையில் அளவிலும், புகழிலும், புனிதத்திலும் பெயர் பெற்றது பெரிய கோவில். அதனால்தான் ராஜராஜன் தட்சிண மேரு என்று அழைத்ததாக கூறப்படுகிறது.


பெரிய கோயிலின் நுணுக்கமான கட்டிட அமைப்புக்கு 2 பேர் காரணமாம்: அவர்கள் யார்?

பெருமைமிகு, அனைவரும் வியந்து போற்றும் பெரியகோவிலை கட்டுவதற்கு ராஜ ராஜ சோழனுக்கு மிக்க உறுதுணையாக நின்றவர்கள் யார் என்று தெரியுங்களா.  ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை, குரு – கருவூர் சித்தர், படைத் தளபதி கிருஷ்ணன் ராமன்.

அதெல்லாம் சரிதான் இத்தனை நுணுக்கமான அற்புதமான கோயிலின் கட்டிட நுட்பத்திற்கு அழகாக திட்டம் போட்டுக் கட்ட வேண்டுமே. அப்பேற்பட்ட கட்டிடக் கலை நிபுணர்கள் பெயரையும் தவறாமல் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளார் ராஜராஜ சோழன். அந்த கட்டிட நிபுணர்கள் குஞ்சர மல்லன், ராஜராஜப் பெருந்தச்சன் என்ற இருவர்தான்.

பெரிய கோவிலில் உள்ள மற்ற சில அதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். முழுக்க முழுக்க கருங்கற்களால் ஆனது. ஒரு இடத்திலும் காரை பயன்படுத்தவில்லை. பிற்காலத்தில் நாயக்கர், மராட்டிய மன்னர்கள் ஆட்சியில் புதிய சிலைகள், கட்டிடங்கள் சேர்க்கப்பட்டன. அவைகளில் காரை முதலிய பொருட்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்க்கது.

ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இவை நமக்கு பல அரிய விஷயங்களைத் தருகின்றன. கல்வெட்டுகளில் 400 ஆடல் அழகிகளின் பெயர்களும், அவர்கள் வசித்த வீட்டு இலக்கமும் உள்ளன. ஐம்பதுக்கும் மேலான இசைக்கலைஞர்கள் கோவிலில் இருந்தனர். அவர்கள் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் கோவில் பணியில் ஈடுபட்ட சுமார் 600 ஊழியர்களின் பெயர்கள், அவர்களுடைய வேலை, அவர்களுடைய ஊதியம் என அனைத்தையும் கல்வெட்டுகளில் பதிய செய்துள்ளார் ராஜராஜ சோழன். இதையெல்லாம் நுணுக்கமாக கல்லில் பொறித்துவைத்த அவரது நிர்வாகம் எவ்வளவு சீரும் சிறப்புடனும் நடந்திருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கல்வெட்டுகளில் உள்ள சில ஆடல் அழகிகளின் பெயர்கள் பற்றி பார்ப்போம். சேர மங்கை, எடுத்தபாதம், சோழகுலசுந்தரி, தில்லை அழகி, மதுரவாசகி, இரவிகுல மாணிக்கம், மாதேவி, சீருடையாள், ஆரா அமுது, மழலைச் சிலம்பு, திகைச் சுடர், காமக்கோடி, பொற்கேசி, ஆறாயிரம், தில்லைக் கூத்தி, செம்பொன், இன்னிளவஞ்சி, கயிலாயம், ஆடவல்லாள், இளங்கோயில், அறிவாட்டி, சோமநாதி, சுந்தர சோழி, இராமி, சற்பதேவி,  அரநெறி, குந்தவை, பொற்கேசி, கன்னரதேவி, அருள்மொழி என்று பெயர்கள் கல்வெட்டுகளில் உள்ளன.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று காட்சிதரும் வயல் பிரதேசங்களை எல்லாம் கடந்து எங்கோ ஒரு மலையிலிருந்து கற்களைக் கொணர்ந்து சோழ நாடு முழுதும் கோவில்களைக் கட்டியது அதிசயத்திலும் அதிசயம் தானே. இது சோழ மாமன்னர்களின் பக்திக்கு எடுத்துக்காட்டு. அதே நேரத்தில் நிர்வாகம், படையெடுப்புகள் ஆகியவற்றிலும் சோழ மன்னர்கள் பின் தங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Iran Economic Crisis: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget