மேலும் அறிய

திருப்பழனம் ஊராட்சியை திருவையாறுடன் இணைக்க கூடாது - பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன் தங்கள் ஊராட்சியை இணைப்பதை தடுக்க கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் திருப்பழனம் கிராமத்தை சேர்ந்த 300க்கும் அதிகமான பெண்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

தஞ்சாவூர்: தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன் தங்கள் ஊராட்சியை இணைப்பதை தடுக்க கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் திருப்பழனம் கிராமத்தை சேர்ந்த 300க்கும் அதிகமான பெண்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் திருப்பழனம் கிராமத்தை சேர்ந்த 300க்கும் அதிகமானோர் காவிரி டெல்டா விவாசாயிகள் சங்க தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர் தலைமையில், ஒன்றியத் தலைவர் அறிவழகன் முன்னிலையில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கிராம மக்கள் கூறியுள்ளதாவது: திருவையாறு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் திருப்பழனம் கிராம ஊராட்சி உள்ளது. விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாகும். இந்நிலையில் திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெறாத நிலையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறில் எங்கள் பாரம்பரிய திருப்பழனம் ஊராட்சியை சேர்ந்தால் முப்போகம் விளையும் நஞ்சை நிலம் பறிக்கப்படும் அபாயம் உள்ளது. திருப்பழனம் கிராமத்தை திருவையாறுடன் இணைப்பதற்கு பொதுமக்கள் நாங்கள் ஏற்கவில்லை.

மேலும் விலையில்லா ஆடுகள், விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டங்கள் நகராட்சி மக்களாக கிராம மக்கள் மாற்றப்பட்டால் கிடைக்க வழியில்லாமல் போய்விடும். சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர் வரி போன்றவை பல மடங்கு உயர்ந்துவிடும்.

தமிழக அரசின் இலவச பசுமை வீடுகள், மத்திய அரசின் இலவச வீடுகள் போன்ற திட்டங்களை இழக்க நேரிடும். 100 நாள் வேலை திட்டம் பல ஏழைக்குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது.  எனவே திருப்பழனம் ஊராட்சியில் திருவையாறு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சங்கரனார் குடிகாடு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

சங்கரனார் குடிகாடு ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் மக்கள் புழக்கத்தில் உள்ள பொது பாதையை சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்த பாதையை சிமெண்ட் சாலையாக மாற்ற திருவோணம் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பொதுபாதையை சிமெண்ட் சாலையாக மாற்றவிடாமல் சில தனியார் ஆக்கிரமித்துள்ளனர். அரசு நிதியில் இந்த பாதையை அமைப்பதற்கு இடையூறாக இருந்து வருகின்றனர். இதனால் பொதுபாதை வழியாக செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். மழைக்காலங்களில் மிகவும் சிரமமான நிலை உருவாகி விடுகிறது.

இதுகுறித்து கேட்டால் மிரட்டுகின்றனர். பொதுபாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தும், சிமெண்ட் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
Embed widget