மேலும் அறிய

ரயில்வே தண்டவாளத்தில் தூங்கிய வாலிபர்கள் - ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்

3 வாலிபர்கள் காவடி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டதால் சோர்வு ஏற்பட்டதுடன் அருகில் இந்த ரயில்வே தண்டாவளத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை காண வந்த 3 வாலிபர்கள் அதிகாலை 3 மணியளவில் அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியபோது அவ்வழியாக சென்ற தாம்பரம் - செங்கோட்டை ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். ஒரு வாலிபர் படுகாயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தேறும் சித்திரை மாதம் வெகு விமரிசையாக நடைபெறும். அதன் வகையில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 14ந் தேதி துவங்கியது. முக்கிய நாளான 10ம் நாள் நேற்றிரவு காவடி எடுத்தல், சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் விடிவிடிய நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துத் கொண்டனர்.
 
இந்தநிலையில் திருவிழாவை காணவந்த உப்பூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகதாஸ் மகன் அருண் (17), கோபாலசமுத்திரம் கந்தசாமி மகன் பரத் (17), நாகை மாவட்டம், தாணிக்கோட்டகம் கிராமத்தை சேர்ந்த முருகபாண்டியன்(24) ஆகிய 3 வாலிபர்கள் காவடி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டதால் சோர்வு ஏற்பட்டதுடன் அருகில் இந்த ரயில்வே தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த போது அதிகாலை சுமார் 3 மணியளவில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் அருண் தலை துண்டித்தும், முருகபாண்டியன் உடலில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பரத் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்கப்பட்டு ஆபாத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன், உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கோவில் திருவிழாவின்போது நடந்த இந்த துயர சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
தாம்பரம் செங்கோட்டை ரயிலானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு வருகை தந்த பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் முத்துப்பேட்டை பகுதியில் அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து சென்னைக்கு செல்லும் விரைவு ரயில் முதல் ரயில் இந்த ரயிலாகும். இந்த நிலையில் ரயில்வே காவல்துறையினர் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். குறிப்பாக தண்டவாளத்தில் யாரும் படுக்கக் கூடாது மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்லக்கூடாது என பல முக்கிய விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் இதே போன்ற சம்பவங்கள் நடந்து வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர். தற்பொழுது இருவரது உடலையும் கைப்பற்றி பிரதி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த நபர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவினில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seenu Ramasamy : திமுக தோல்விக்கு இது தான் காரணம்.! வெளிப்படையாக போட்டு உடைத்த இயக்குனர் சீனு ராமசாமி
திமுக தோல்விக்கு இது தான் காரணம்.! வெளிப்படையாக போட்டு உடைத்த இயக்குனர் சீனு ராமசாமி
டிரைவர்கள் கவனமுடன், பாதுகாப்பாக இயக்க வேண்டும்: பள்ளி வாகன ஆய்வில் கலெக்டர் அறிவுறுத்தல்
டிரைவர்கள் கவனமுடன், பாதுகாப்பாக இயக்க வேண்டும்: பள்ளி வாகன ஆய்வில் கலெக்டர் அறிவுறுத்தல்
இந்த மழையைத்தான் எதிர்பார்த்தோம்! தஞ்சை விவசாயிகளின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
இந்த மழையைத்தான் எதிர்பார்த்தோம்! தஞ்சை விவசாயிகளின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
பீன்ஸ்சும், அவரைக்காயும் உச்சத்தில்... இன்றைய காய்கறி நிலவரம் இதுதாங்க
பீன்ஸ்சும், அவரைக்காயும் உச்சத்தில்... இன்றைய காய்கறி நிலவரம் இதுதாங்க
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

4 Year Old boy Rescued |30 அடி போர்வெல் குழி!9 மணி நேர போராட்டம்..உயிருடன் சிறுவன் மீட்பு
பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து
தமிழர்களின் பொக்கிஷம்! ஆனைமங்கலம் செப்பேடு சோழ வரலாறு திரும்புகிறது!
விஜய் வசம் 16 துறைகள்! யாருக்கு என்னென்ன இலாகா? அதிகாரப்பூர்வ பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangam Thenarasu Vs Keerathana: அமைச்சர் கீர்த்தனாவின் பொய்க் கதைகளுக்கு கடிவாளம் போடுவது யார்.? கொந்தளித்த தங்கம் தென்னரசு
அமைச்சர் கீர்த்தனாவின் பொய்க் கதைகளுக்கு கடிவாளம் போடுவது யார்.? கொந்தளித்த தங்கம் தென்னரசு
கேடு கெட்ட கொளத்தூர்வாசிகள்... மக்களை கேவலமாக பேசிய முன்னாள் அமைச்சர் - இதெல்லாம் நியாயமா?
கேடு கெட்ட கொளத்தூர்வாசிகள்... மக்களை கேவலமாக பேசிய முன்னாள் அமைச்சர் - இதெல்லாம் நியாயமா?
CM Vijay: சென்னையை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்? மழையில் தத்தளிப்பதில் தப்புமா தலைநகர்?
CM Vijay: சென்னையை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்? மழையில் தத்தளிப்பதில் தப்புமா தலைநகர்?
Leema Rose vs EPS : என் மேல நடவடிக்கையா.!? அப்போ வாங்குனதை திருப்பி கொடுங்க- இபிஎஸ்யை கதற விடும் லீமா ரோஸ்
என் மேல நடவடிக்கையா.!? அப்போ வாங்குனதை திருப்பி கொடுங்க- இபிஎஸ்யை கதற விடும் லீமா ரோஸ்
Vishal: ராஜ்மோகனை அமைச்சர் ஆக்கியது வருத்தம் அளிக்கிறது.. நடிகர் விஷால் ஏன் இப்படி கூறுகிறார்?
Vishal: ராஜ்மோகனை அமைச்சர் ஆக்கியது வருத்தம் அளிக்கிறது.. நடிகர் விஷால் ஏன் இப்படி கூறுகிறார்?
Rajinikanth: ”CM விஜயை இரண்டு வருடங்கள் தொந்தரவு செய்யாமல் வேலை செய்ய விடுங்கள்” - ரஜினி கோரிக்கை
Rajinikanth: ”CM விஜயை இரண்டு வருடங்கள் தொந்தரவு செய்யாமல் வேலை செய்ய விடுங்கள்” - ரஜினி கோரிக்கை
SIP Scheme: வருமானம் குறைஞ்சிடுச்சா..! SIP திட்டத்தின் தவணை தொகையை குறைப்பது எப்படி? - முழு விவரம் இதோ
வருமானம் குறைஞ்சிடுச்சா..! SIP திட்டத்தின் தவணை தொகையை குறைப்பது எப்படி? - முழு விவரம் இதோ
டாஸ்மாக் கடைகளை மூடும் நேரம் இது தான்.! காவல்துறையினருக்கு அடுத்தடுத்து பறந்த ஆணையரின் உத்தரவுகள்
டாஸ்மாக் கடைகளை மூடும் நேரம் இது தான்.! காவல்துறையினருக்கு அடுத்தடுத்து பறந்த ஆணையரின் உத்தரவுகள்
Embed widget