மேலும் அறிய

1320 வழக்குகள்.. 930 வாகனங்கள் பறிமுதல்.. அதிரடி காட்டும் திருவாரூர் காவல்துறை

விழிப்புணர்வு குறும்படங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கியுள்ள போலீசார் வழக்குகள் பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக திருவாரூர் மாவட்டத்தில் 1320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு 930 வாகனங்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், ஊரடங்கை மீறியதாக ரூபாய் 92 ஆயிரம் அபராதம் வசூலித்துள்ளனர்.  கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் ஊரடங்கு காரணமாக சற்றே குறைய ஆரம்பித்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்புகளும் அதிக அளவில் இருந்து வருகிறது இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் தேவைகள் இன்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி கயல்விழி தெரிவித்திருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
1320 வழக்குகள்.. 930 வாகனங்கள் பறிமுதல்.. அதிரடி காட்டும் திருவாரூர் காவல்துறை
 
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டிய சூழலில் தமிழகம் முழுவதும் கடந்த 24ஆம் தேதி முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நிலையில் காவல்துறை சார்பிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
அதன்படி ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24ஆம் தேதி முதல் நேற்று இரவு வரை திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்த 930 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் அனைவரின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
1320 வழக்குகள்.. 930 வாகனங்கள் பறிமுதல்.. அதிரடி காட்டும் திருவாரூர் காவல்துறை
 
மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக் கவசங்கள் அணியாமலும் விதிமுறைகளை மீறி நடந்த 390 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 92 ஆயிரத்து 900 ரூபாய் பொதுமக்களிடமிருந்து ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
 
 
தமிழகம் முழுக்க இதே போல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள போலீசார் மக்கள் அநாவசியமாக கூட வேண்டாம் என்றும் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஊரடங்கை தொடர்ந்து மீறி நடப்போர் மீது வழக்குகளும் அவர்கள் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்வதும் என காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது
 
 
 

தலைப்பு செய்திகள்

களை கட்டும் மாட்டுச்சந்தை... விற்பனை அமோகமாக நடப்பதால் தஞ்சை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
களை கட்டும் மாட்டுச்சந்தை... விற்பனை அமோகமாக நடப்பதால் தஞ்சை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
தஞ்சையில் டிராபிக் போலீசாரின் அதிரடி: பேருந்துகளில் இருந்து 100-க்கும் அதிகமான ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்து அழிப்பு
தஞ்சையில் டிராபிக் போலீசாரின் அதிரடி: பேருந்துகளில் இருந்து 100-க்கும் அதிகமான ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்து அழிப்பு
மாதுளை அலங்காரத்தில் மஹாவாராஹி... தஞ்சாவூரில் பக்திப்பரவசத்தில் மிதந்த பக்தர்கள்
மாதுளை அலங்காரத்தில் மஹாவாராஹி... தஞ்சாவூரில் பக்திப்பரவசத்தில் மிதந்த பக்தர்கள்
தொடர்ந்து நீடிக்கும் கடும் வெப்பம்: தஞ்சாவூர் பொதுமக்கள் கடும் அவதி: எப்போங்க பெய்யும் மழை!!!
தொடர்ந்து நீடிக்கும் கடும் வெப்பம்: தஞ்சாவூர் பொதுமக்கள் கடும் அவதி: எப்போங்க பெய்யும் மழை!!!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Embed widget