மேலும் அறிய

1320 வழக்குகள்.. 930 வாகனங்கள் பறிமுதல்.. அதிரடி காட்டும் திருவாரூர் காவல்துறை

விழிப்புணர்வு குறும்படங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கியுள்ள போலீசார் வழக்குகள் பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக திருவாரூர் மாவட்டத்தில் 1320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு 930 வாகனங்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், ஊரடங்கை மீறியதாக ரூபாய் 92 ஆயிரம் அபராதம் வசூலித்துள்ளனர்.  கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் ஊரடங்கு காரணமாக சற்றே குறைய ஆரம்பித்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்புகளும் அதிக அளவில் இருந்து வருகிறது இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் தேவைகள் இன்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி கயல்விழி தெரிவித்திருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
1320 வழக்குகள்.. 930 வாகனங்கள் பறிமுதல்.. அதிரடி காட்டும் திருவாரூர் காவல்துறை
 
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டிய சூழலில் தமிழகம் முழுவதும் கடந்த 24ஆம் தேதி முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நிலையில் காவல்துறை சார்பிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
அதன்படி ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24ஆம் தேதி முதல் நேற்று இரவு வரை திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்த 930 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் அனைவரின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
1320 வழக்குகள்.. 930 வாகனங்கள் பறிமுதல்.. அதிரடி காட்டும் திருவாரூர் காவல்துறை
 
மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக் கவசங்கள் அணியாமலும் விதிமுறைகளை மீறி நடந்த 390 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 92 ஆயிரத்து 900 ரூபாய் பொதுமக்களிடமிருந்து ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
 
 
தமிழகம் முழுக்க இதே போல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள போலீசார் மக்கள் அநாவசியமாக கூட வேண்டாம் என்றும் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஊரடங்கை தொடர்ந்து மீறி நடப்போர் மீது வழக்குகளும் அவர்கள் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்வதும் என காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Govinda: ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!
Actor Govinda: ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!
Suriya 44: கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செம்ம அப்டேட் - ரசிகர்களுக்கு சப்ரைஸ்!
கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செம்ம அப்டேட் - ரசிகர்களுக்கு சப்ரைஸ்!
SBI Debit Card Charges: எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க? கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா?
எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க? கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா?
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

CV Shanmugam: என்னாது! தேமுதிக வேட்பாளருக்கு பம்பரம் சின்னமா? உளறிய CV சண்முகம் | Cuddalore | DMDKNirmala Sitharaman : ”காசு இல்லப்பா..! அதான் தேர்தல்ல நிக்கல” நிர்மலா சீதாராமன் பகீர் | BJP | ModiGaneshamurthi Death :”கணேசமூர்த்தி மறைவு..” கதறி அழுத வைகோ.. தொண்டர்கள் உருக்கம் | Vaiko | MDMKJayalalitha daughter deepa :தேனி தொகுதியில் திடீர் ஜெயலலிதா மகள்! யாருடன் கூட்டணி? | Theni

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Govinda: ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!
Actor Govinda: ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!
Suriya 44: கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செம்ம அப்டேட் - ரசிகர்களுக்கு சப்ரைஸ்!
கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செம்ம அப்டேட் - ரசிகர்களுக்கு சப்ரைஸ்!
SBI Debit Card Charges: எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க? கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா?
எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க? கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா?
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சு விட்ட இ.பி.எஸ்.! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சு விட்ட இ.பி.எஸ்.! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
Lok Sabha Election 2024: நீலகிரி மக்களவை தொகுதி! ஆ.ராசா மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின்பு ஏற்பு - நடந்தது என்ன?
நீலகிரி மக்களவை தொகுதி! ஆ.ராசா மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின்பு ஏற்பு - நடந்தது என்ன?
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
Embed widget