மேலும் அறிய

திருவாரூரில் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன் இளைஞர் தீக்குளிப்பு

தீக்குளித்த சுதாகருக்கு 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

திருவாரூர் மாவட்டம் மானந்தங்குடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் சுதாகர் (36). தனது இருதய  பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவதற்காக தனது மனைவி சுதாவின் அண்ணனான பிரசாந்த் என்பவரிடம் செலவுக்கு ஒரு லட்சம் பணம் கடனாக பெற்றுள்ளார். இந்த நிலையில் சுதாகர் பிரசாந்திற்கு 90 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டார். மீதம் கொடுக்க வேண்டியிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்க வலியுறுத்தி பிரசாந்த் அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் பிரசாந்த், சுதாகர் வீட்டிற்கு சென்று மீதமுள்ள பணத்தை எப்பொழுது தருகிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறியது, அதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி பிரசாந்த் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் சுதாகரின் மனைவி சுதா பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் மறுநாள் காலை பிரசாந்த் என் மீது காவல் நிலையத்தில் எப்படி புகார் செய்தார் எனக் கூறி மீண்டும் சுதாகரன் மீது பிரசாந்த் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
 

திருவாரூரில் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன் இளைஞர் தீக்குளிப்பு
 
சுதாகர் அளித்த புகாரின் மீது பேரளம் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சுதாகர் குடும்பத்துடன் பேரளம் காவல் நிலையத்திற்கு  வந்துள்ளார். அப்போது காவல்துறையினருடன் சுதாகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நான் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் என்னை வந்து மீண்டும் பிரசாந்த் தாக்கி உள்ளார். எனக் கூறிக்கொண்டே காவல்துறையினர் தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு பேரளம் காவல் நிலையம் வளாகத்தில் தீக்குளித்து உள்ளார். இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சுதாகர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுதாகரை பரிசோதித்த மருத்துவர்கள் 80 சதவீதம் உடலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் சுதாகரின் மனைவி சுதா அளித்த புகாரின் அடிப்படையில் பேரளம் காவல்துறையினர் பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூரில் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன் இளைஞர் தீக்குளிப்பு
 
இது குறித்து பேரளம் காவல்துறையினரிடம் கேட்டபொழுது நேற்றைய முன்தினம் இரவு சுதா புகார்  கொடுத்த சிறிது நேரத்தில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று இரு தரப்பினரிடமும் விசாரணை செய்தனர்.  இந்த நிலையில் மறுநாள் காலை விசாரணை நடத்த இருந்த நிலையில் அதற்கு முன்னதாக சுதாகர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார். தற்போது பிரசாந்தை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
Embed widget