மேலும் அறிய

திருவாரூரில் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன் இளைஞர் தீக்குளிப்பு

தீக்குளித்த சுதாகருக்கு 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

திருவாரூர் மாவட்டம் மானந்தங்குடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் சுதாகர் (36). தனது இருதய  பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவதற்காக தனது மனைவி சுதாவின் அண்ணனான பிரசாந்த் என்பவரிடம் செலவுக்கு ஒரு லட்சம் பணம் கடனாக பெற்றுள்ளார். இந்த நிலையில் சுதாகர் பிரசாந்திற்கு 90 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டார். மீதம் கொடுக்க வேண்டியிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்க வலியுறுத்தி பிரசாந்த் அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் பிரசாந்த், சுதாகர் வீட்டிற்கு சென்று மீதமுள்ள பணத்தை எப்பொழுது தருகிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறியது, அதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி பிரசாந்த் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் சுதாகரின் மனைவி சுதா பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் மறுநாள் காலை பிரசாந்த் என் மீது காவல் நிலையத்தில் எப்படி புகார் செய்தார் எனக் கூறி மீண்டும் சுதாகரன் மீது பிரசாந்த் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
 

திருவாரூரில் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன் இளைஞர் தீக்குளிப்பு
 
சுதாகர் அளித்த புகாரின் மீது பேரளம் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சுதாகர் குடும்பத்துடன் பேரளம் காவல் நிலையத்திற்கு  வந்துள்ளார். அப்போது காவல்துறையினருடன் சுதாகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நான் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் என்னை வந்து மீண்டும் பிரசாந்த் தாக்கி உள்ளார். எனக் கூறிக்கொண்டே காவல்துறையினர் தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு பேரளம் காவல் நிலையம் வளாகத்தில் தீக்குளித்து உள்ளார். இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சுதாகர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுதாகரை பரிசோதித்த மருத்துவர்கள் 80 சதவீதம் உடலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் சுதாகரின் மனைவி சுதா அளித்த புகாரின் அடிப்படையில் பேரளம் காவல்துறையினர் பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூரில் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன் இளைஞர் தீக்குளிப்பு
 
இது குறித்து பேரளம் காவல்துறையினரிடம் கேட்டபொழுது நேற்றைய முன்தினம் இரவு சுதா புகார்  கொடுத்த சிறிது நேரத்தில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று இரு தரப்பினரிடமும் விசாரணை செய்தனர்.  இந்த நிலையில் மறுநாள் காலை விசாரணை நடத்த இருந்த நிலையில் அதற்கு முன்னதாக சுதாகர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார். தற்போது பிரசாந்தை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் ஏஐடியூசி அதிரடி முடிவு: மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிக்கு வியூகமா?
தஞ்சையில் ஏஐடியூசி அதிரடி முடிவு: மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிக்கு வியூகமா?
தஞ்சையில் திமுக வேட்பாளர் சண். ராமநாதன் வாக்குறுதிகள் மழையில் மக்கள் உற்சாகம்: முக்கிய அறிவிப்புகள் இதோ!
தஞ்சையில் திமுக வேட்பாளர் சண். ராமநாதன் வாக்குறுதிகள் மழையில் மக்கள் உற்சாகம்: முக்கிய அறிவிப்புகள் இதோ!
தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்: 8 தொகுதிகளிலும் வெற்றி உறுதி... தஞ்சை மாவட்டம் திமுக கோட்டைதான்
தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்: 8 தொகுதிகளிலும் வெற்றி உறுதி... தஞ்சை மாவட்டம் திமுக கோட்டைதான்
110 ஆண்டுகள் பெருமையுடன் நடந்த பாஸ்கா நாடகம்... அனைத்து மதத்தினரும் பங்கேற்று நடித்தனர்
110 ஆண்டுகள் பெருமையுடன் நடந்த பாஸ்கா நாடகம்... அனைத்து மதத்தினரும் பங்கேற்று நடித்தனர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
Embed widget