மேலும் அறிய

திருவாரூர்: நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் 25 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்

உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய கோரிக்கை

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாத காரணத்தினால் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி என்பது நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதன் காரணத்தினால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி என்பது நடைபெற்று வருகிறது.

திருவாரூர்: நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் 25 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்
 
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி என்பது நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஆற்றுப் பாசனத்தை நம்பியே அதிகளவில் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்மணிகளை எடுத்து சென்றால் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். ஏற்கனவே கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழையில் சாய்ந்து உள்ள நிலையில், விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தாங்கள் செய்த செலவு தொகையை கூட எடுக்க முடியாத நிலை உருவாகி உள்ள நிலையில் கஷ்டப்பட்டு அறுவடை இயந்திரங்களை வைத்து ஒரு சில பகுதிகளில் தாங்கள் பயிரிட்ட நெல் மணிகளை அறுவடை செய்து வந்தால், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

திருவாரூர்: நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் 25 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்
 
குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கூப்பாட்சி கோட்டை, கண்டிதம்பேட்டை,  மேலநெம்மேலி, பெருகவாழ்ந்தான், பாளையங்கோட்டை, திருமக்கோட்டை, வல்லூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணத்தினால் தேங்கிக் கிடப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே கடந்த ஒரு வார காலமாக இரவு நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடை செய்த நெல் மணிகள் மழையில் நினைந்து பாதிக்கக் கூடிய சூழல் உருவாகும். ஆகையால் அரசு அதிகாரிகள் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். உடனடியாக தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, ஈரப்பதத்தை உயர்த்தி விவசாயிகளின் அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget