மேலும் அறிய

கும்பகோணம் புதிய பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

பலத்த மழை பெய்து வரும் நிலையில், மேல்மாடியில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதால், கட்டிடத்தின் உறுதித் தன்மை கேள்வி குறியாகியுள்ளது

கும்பகோணம் புதிய பஸ் நிலைய மேற்கூரையில் மழை நீர் கசிந்ததால், சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. அகிஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆபாய நிலையில் காட்சியளிப்பதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் நவக்கிரஹ கோயில்கள், புராதனகோயில்கள், வரலாற்று சின்னங்கள், உலக புகழ்பெற்ற கோயில்கள் மற்றும் மூன்று மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக கும்பகோணம் இருப்பதால் விஷேச நாட்கள் மட்டுமில்லாது தினந்தோறும் வெளி மாநிலம், மாவட்ட, உள்ளூர் பகுதி மக்கள் பேருந்துகளில் வந்து, இறங்கி தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு செல்வார்கள். இதனால் கும்பகோணம் பழைய பஸ் நிலையத்தில் கூட்டம் நெரிசலானதையடுத்து, கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் நவீன முறையில் கான்கீரீட் கட்டிடம் கட்டப்பட்டு,  புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அதன், பின்னர் புதிய பஸ் நிலையத்திற்கு நாகை, திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், தஞ்சை பகுதியில் இருந்து சென்னை, திருப்பதி, ஆந்திரா, பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு பஸ்சுகள் சென்று வருவதால், வெளி மாநில பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.


கும்பகோணம் புதிய பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

மேலும், கோவை, திருப்பூர், மதுரை, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு கும்பகோணம் பகுதிகளில் தயாரிக்கும் பித்தளை, சில்வர் பாத்திரங்கள், பித்தளை குத்துவிளக்குகள், சேலைகள், வெற்றிலை, காய்கறிகள், வாழை இலைகள் உள்ளிட்டவைகள் தினந்தோறும், பஸ்சுகளில் சென்று வருகிறது.தினந்தோறும் சுமார் 500 க்கும் மேற்பட்ட பஸ்சுகள் வந்து செல்லும் நிலையில், கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் இரவு பகல் நேரத்தில் பயணிகளின் கூட்டம் நிரம்பியிருக்கும்.இந்நிலையில் பஸ் நிலையத்தின் காங்கீரிட் கட்டிடத்தின் கீழ் சுமார் 100 க்கும் மேற்பட்ட டீக்கடைகள், உணவு விடுதிகள், மெடிக்கல் ஷாப் உள்ளிட்ட அனைத்து கடைகளும் உள்ளன.  இதே போல் பஸ் நிலையம் மேல்மாடியின் ஒரு பகுதியில் ஹோட்டல்களும் உள்ளன.


கும்பகோணம் புதிய பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கும்பகோணம் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையினால் புதிய பஸ் நிலையத்தின் மேல்மாடியில், மழை நீர் தேங்கியுள்ளது.  அந்த நீர் வடிவதற்கு வழியில்லாததால், தெப்பம் போல் தேங்கியது. இது போன்ற அபாய நிலை பல ஆண்டுகளாக இருப்பதால், கட்டிடத்தின் கடைகளின் மேல் பகுதியும், பயணிகள் நிற்கும் மேற்பகுதியிலும் தண்ணீர் கசிந்து சொட்டியது. மேலும் கட்டிடத்தின் காங்கீரிட் பீம்களில் தண்ணீர் புகுந்துள்ளதால், விரிசல் விட்டு ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள் மற்றும் கடைகாரர்கள் தினந்தோறும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகாரளித்தும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தின் தஞ்சாவூர் மார்க்கம் செல்லும் பேருந்துகளில் செல்வதற்காக பயணிகள் நிற்கும் பகுதியில் திடீரென  மேற்கூரை  பெயர்ந்து இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியிலுள்ள பயணிகள், மெடிக்கல் ஷாப்பிலுள்ள ஊழியர்கள் என அனைவரும், வெளியே ஒடினர். இதனால் மேற்கூரை பெயர்ந்து எழும்பு கூடாக காட்சியளிக்கின்றது.


கும்பகோணம் புதிய பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

மேலும், பலத்த மழை பெய்து வரும் நிலையில், மேல்மாடியில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதால், கட்டிடத்தின் உறுதித் தன்மை கேள்வி குறியாகியுள்ளது. எனவே, ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ளவர்களின் நிலை அறிந்து, உடனடியாக கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தின் மேல்மாடியில் தேங்கியுள்ள மழை நீரை, வடிவதற்கும், விரிசல் அடைந்து வரும் கட்டிடத்தையும், பெயர்ந்து விழுந்து வருவதையும் சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget