மேலும் அறிய

”மீன் பிடி தடை கால நிவாரணம் கிடைக்கவில்லை’ வேலை நிறுத்தத்தை அறிவித்த முத்துப்பேட்டை மீனவர்கள்..!

பிரதமர் கிசான் திட்ட நிதி உதவி தேவையில்லை என 543 மீனவர்களும் எழுதிக் கொடுத்து, எம்எல்ஏ மூலமாக மீன்வளத்துறை அமைச்சகம் வரை அதிகாரிகளை சென்று பார்த்த பின்னரும், நிவாரணம் வழங்கப்படவில்லை

திருவாரூர் மாவட்டம முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த 543 மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகை வழங்காததை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக முத்துப்பேட்டை மீனவ கிராமங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

முத்துப்பேட்டை மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை ஒட்டிய உப்பூர், ஆலங்காடு, தொண்டியக்காடு, கற்பகநாதர் குளம், வாடியக்காடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5,000 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.   இவர்களுக்கு ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலத்தை ஒட்டி தடைக்கால நிவாரணமாக ரூ.8000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த மீனவர்களில் ஒரு சிலருக்கு கால் ஏக்கர், அரை ஏக்கர் என விவசாய நிலங்கள் உள்ளன. விவசாய நிலங்கள் உள்ள மீனவர்களுக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 6 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு 543 மீனவர்களுக்கு பிரதமர் கிசான் திட்ட நிதி வந்த நிலையில், மீனவர்களுக்கு தடைகால நிவாரணமாக 8000 வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மீனவர்கள் கடும் அதிருப்தி அடைந்து வந்துள்ளனர். 

மீன் பிடி தொழிலே பிரதானம் - மீனவர்கள் கண்ணீர்

முத்துப்பேட்டை மீனவர்களை பொருத்தவரை மீன்பிடி தொழில் மட்டுமே பிரதானமாகும். ஆண்டு முழுவதும் மீன்பிடித்து மட்டுமே  தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர். எனவே எங்களுக்கு பிரதமர் கிசான் திட்ட நிதி உதவி தேவையில்லை என 543 மீனவர்களும் எழுதிக் கொடுத்து, எம்எல்ஏ மூலமாக மீன்வளத்துறை அமைச்சகம் வரை அதிகாரிகளை சென்று பார்த்த பின்னரும், இதுவரை மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மீன்பிடி தடைகால நிவாரணம் வழங்கப்படவில்லை என அவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.  அரசு அதிகாரிகளின் இத்தகைய அலட்சியப் போக்கு காரணமாக மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. அனைவரும் மத்திய அரசின் திட்டம் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தும் இது போன்று நடப்பது வேதனையாக உள்ளதாகவும் இதனால் தங்கள் குடும்பம் கஷ்டமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நிவாரணம் கேட்டு - வேலை நிறுத்த்த்தை அறித்த மீனவர்கள்

எனவே இத்தகைய போக்கினை கண்டித்து, வரும் திங்கட்கிழமை முதல், முத்துப்பேட்டை கிராமத்தை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் மேலும் திங்கட்கிழமை காலை முதல் முத்துப்பேட்டை பகுதி முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக முடிவு செய்துள்ளோம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.