மேலும் அறிய

மாநகராட்சி இடத்தில் மதுபார் நடத்தி 19.14 கோடி இழப்பை ஏற்படுத்திய திமுக பிரமுகர்

’’கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி வரை  19 கோடியே 14 லட்சத்து ஆயிரத்து 627 ரூபாய் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு செய்தது தெரியவந்தது’’

தஞ்சாவூரில் மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா இடத்தை, மதுபான பாராக  மாற்றி, கடந்த19 ஆண்டுகளாக, மாநகராட்சிக்கு  19.14 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்திய, திமுக, முன்னாள் கவுன்சிலர் உட்பட அவரது சகோதரர்கள் நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, ஒருவரை கைது செய்துள்ளனர்.   தஞ்சாவூரில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 41,969 சதுர அடியில் ஸ்ரீ சுதர்சன சபா அமைந்துள்ளது. 1925 ஆம் ஆண்டு 99 ஆண்டு குத்தகையாக விடப்பட்டது. இங்கு ஆன்மீக சொற்பொழிவுகள், புத்தக வெளியீடு போன்றவை நடத்தவே அனுமதி அளிக்கப்பட்டது.  இந்நிலையில், கடந்த கடந்த 1991ம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி, சபாவிற்கு ஆர்கே.ராமநாதன் தலைவராகவும், அவரது சகோதரர்களான நாகராஜன் செயலாளராகும், குமரவேல் பொருளாளராகவும், மணி பொது குழு உறுப்பினராகவும் ஆகினார். இதில் நாகராஜன், தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஆவார். 

பின்னர் சபாவில் இருந்த முந்தயை உறுப்பினர்களை நீக்க விட்டு, தனக்கு ஆதரவாக உள்ளவர்களை உறுப்பினராக நியமித்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து சுதர்சன சபாவில் நிகழ்ச்சி நடத்துவதை நிறுத்தி விட்டு, வளாகத்தில் மதுபான பாராக மாற்றி நடத்துவதற்காக அனுமதி பெற்று நடத்தினர். இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகிகள், வருவாய் துறையினர் சோதனை செய்ததில்,  கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி வரை  19 கோடியே 14 லட்சத்து ஆயிரத்து 627 ரூபாய் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு செய்தது தெரியவந்தது.

மாநகராட்சி இடத்தில் மதுபார் நடத்தி 19.14 கோடி இழப்பை ஏற்படுத்திய திமுக பிரமுகர்

மேலும், சபா வளாகத்தில் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல், தன்னிச்சையாக மதுபான பார், பேக்கரி, ஹோட்டல், செல்போன் கடை ஆகியவை கட்டப்பட்டு உள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது  தெரியவந்தது.  இதையடுத்து, கடைகளை அகற்றுமாறு, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்.கே.நாகராஜன் உள்ளிட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பில், நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. தொடர்ந்து, நாகராஜன் உள்ளிட்டோர் நோட்டீஸ் தொடர்பாக தஞ்சாவூர் கோர்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் தாக்கல் செய்த மனுவில், சபாவில் உறுப்பினர் தொடர்பான அளித்த விபரங்களில் தகவல் மோசடியாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, சபாவிற்கு சொந்தமான இடத்தில் உள்வாடகைக்கு விடப்பட்ட ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டன. பின்னர் செப்டம்பர் 29 ஆம் தேதி மதுபான பார், பேக்கரி, மொபைல் கடைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டன. இது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் உத்தரவின் பெயரில் இளநிலை செயற்பொறியாளர் கண்ணதாசன்,  மாவட்ட குற்றப்பிரிவில், ஆர்.கே. ராமநாதனின் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது புகார் அளித்தார்.



மாநகராட்சி இடத்தில் மதுபார் நடத்தி 19.14 கோடி இழப்பை ஏற்படுத்திய திமுக பிரமுகர்
சரவண குமார், தஞ்சை மாநகராட்சி ஆணையர்

அதன் பெயரில், மோசடியாக ஆவணங்களை தயார்படுதல், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு போன்ற 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில் மணியை போலீசார் கைது செய்தனர். ஆனால், அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதால் தற்போது தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரின் சகோதரர்களான ஆர்.கே.ராமநாதன், குமரவேல்,நாகராஜ், ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், புதிய பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை உள்வாடகைக்கு விட்டு, 4.61 லட்சம்  வருவாய் இழப்பு ஏற்படுத்தியாக மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன் படி, மணியை போலீசார் ஏற்கனவே கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை பகுதியில் திமுகவிலும், பொது மக்களிடையே சிம்மசொப்பனமாக இருந்து வந்த ஆர்கே ராமநாதன் மற்றும் இவரது சகோதரகள், தஞ்சைக்கு போலீஸ் மற்றும் எந்த அதிகாரிகள் வந்தாலும், அசைக்க முடியாத இடத்திலும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இவர்களிடம் நெருங்க பயந்து வந்தார்கள். ஆனால் ஆணையராக சரவணகுமார் பொறுப்பேற்று வந்த பிறகு. இவர்களது சகோதரர்களில் ஒருவரை கைது செய்தும், வழக்கு தொடர்ந்திருப்பது, தஞ்சையில் திமுகவினர் மட்டுமில்லாமல் அனைத்து கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget