மேலும் அறிய

தஞ்சாவூர் மாநகரிலுள்ள வீடுகளில் க்யூஆர் கோடு ஒட்டும் பணி - மேயர் தொடக்கி வைத்தார்

தஞ்சாவூர் மாநகரிலுள்ள 51 வார்டுகளிலும் க்யூஆர் கோடு ஒட்டும் பணி ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகரிலுள்ள வீடுகளில் க்யூஆர் கோடு ஒட்டும் பணி தொடங்கப்பட்டது. இது மக்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்கள் சேவைகளைப் பெறவும், புகார்களைத் தெரிவிக்கவும் டிஜிட்டல்மயமாக்கும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து  தஞ்சாவூர் மாநகரிலுள்ள வீடுகளில் கியூஆர் ஸ்கேன் கோடு ஸ்டிக்கர் ஓட்டும் பணி தொடங்கப்பட்டது.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை நடராஜபுரம் ஏழாவது தெருவில் இப்பணியை மேயர் சண். ராமநாதன் தொடக்கி வைத்தார். வீடுகளில் க்யூஆர் ஸ்கேன் கோடு ஸ்டிக்கரை ஒட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த க்யூஆர் ஸ்கேன் கோடு ஒவ்வொரு இல்லத்திலும் ஒட்டப்படுகிறது. இதை ஸ்கேன் செய்யும்போது பொதுமக்களின் தேவைகளை நிறைவு செய்யும் விதமாக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. குடிநீர் வராதது, குப்பை அள்ளப்படாதது உள்பட எந்த பிரச்னையாக இருந்தாலும், மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிய வரும்.

உதாரணமாக குடிநீர் குழாயில் அடைப்பால் தண்ணீர் வரவில்லை என்றால், மாநகராட்சி அலுவலகத்தில் மனுவாக கொடுக்கும்போது, அதைச் சீர் செய்வதற்கு ஓரிரு நாள்களாகும். இப்போது, இந்த க்யூஆர் கோடு வசதி மூலம் ஸ்கேன் செய்து தெரிவித்தால், அடுத்த ஓரிரு மணிநேரத்தில் அப்பிரச்னை சரி செய்யப்படும். இதன் மூலம், மக்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். இதனால் மக்களுக்கு நேர விரயம் குறைந்து விடுகிறது.

இதேபோல, இந்த வசதி மூலம் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, புதை சாக்கடை தொகை என எதுவாக இருந்தாலும் உடனடியாக வீட்டிலிருந்தே செலுத்தலாம். இந்த க்யூஆர் கோடில் வார்டு எண், தெரு பெயர், கதவு எண், தொடர்பு எண், குடிநீர் வரி எண், புதை சாக்கடை இணைப்பு எண், மின் இணைப்பு எண், குடும்ப அட்டை எண் உள்பட ஒவ்வொரு வீட்டினரின் முழுத் தகவலும் இருக்கும்.

தஞ்சாவூர் மாநகரிலுள்ள 51 வார்டுகளிலும் க்யூஆர் கோடு ஒட்டும் பணி ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும். இது உடனடியாக பயன்பாட்டுக்கு வந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து  சிவகங்கை பூங்காவில் மேற்கொள்ளப்பட்டும் வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டார். பின்னர்  நடைபாதை தளம், சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் போன்றவை தயாராகிவிட்டன. கதை முற்றம், விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன. இப்பணிகள் 3 மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று தெரிவித்தார்.

மாநகராட்சி செயற் பொறியாளர் எஸ். ஜெகதீசன், மாநகர நல அலுவலர் வீ.சி. சுபாஷ் காந்தி, உதவிப் பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் உடனிருந்தனர்.  

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget