மேலும் அறிய

கும்பகோணத்தில் கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் இயக்கம்

கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இந்த நிதியாண்டில் (2023-24) 100 நாள் வேலை வழங்க மனு கொடுக்கும் இயக்கம் நடந்தது.

தஞ்சாவூர்: கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இந்த நிதியாண்டில் (2023-24) 100 நாள் வேலை வழங்கப்பட வேண்டியதை உறுதிப்படுத்தும் விதத்தில் நம்பர் 6 படிவத்தில் மனு கொடுக்கும் இயக்கம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடந்தது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில முடிவின்படி கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருப்பனந்தாள் பிடிஓ அலுவலர்களை சந்தித்து கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இந்த நிதியாண்டில் (2023-24) 100 நாள் வேலை வழங்கப்பட வேண்டியதை உறுதிப்படுத்தும் விதத்தில் நம்பர் 6 படிவத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடந்தது. 

மாநகர செயலாளர் பழ.அன்புமணி தலைமையில் ஒரு குழுவாக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் வேலை பெற விரும்பும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நீல நிற அடையாள அட்டை வழங்கப்பட்டு 100 நாள் வேலை வழங்கப்பட வேண்டும்.

4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்கப்பட வேண்டும், அதேபோல மென்மையான, கடினமற்ற வேலை மட்டுமே வழங்கப்பட வேண்டும், வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தின கூலியாக ரூபாய் 294 குறையாமல் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்பட்டது.

கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருப்பனந்தாள் பிடிஓ அலுவலகங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை பெருந்திளாக திரட்டி மனுக்கள் கொடுக்கப்பட்டது. 

இதில் கும்பகோணம் மாநகர தலைவர் பாரூக், பொருளாளர் ராஜேஸ்வரி மற்றும் கும்பகோணம் ஒன்றிய தலைவர் காமாட்சி, செயலாளர் தாமோதரன், பொருளாளர் மகேஸ்வரி மற்றும் பாபநாசம் பொறுப்பாளர்கள் நெடுந்தெரு ராஜா, உமையாள்புரம் சரவணபாபு, வழுத்தூர் சதாசிவம் மற்றும் திருப்பனந்தாள் ஒன்றியம் ராமலிங்கம், பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கும்பகோணம் பிடிஓ அலுவலகத்தில் நடைபெற்ற இயக்கத்தின் போது சுமார் 100 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகளும், பாபநாசம் பிடிஓ அலுவலகத்தில் நடைபெற்ற மனு கொடுக்கும் இயக்கத்தின் போது சுமார் 40 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகளும், திருப்பனந்தாள் பிடிஓ அலுவலகத்தில் நடந்த இயக்கத்தின் போது அந்த பகுதியை சேர்ந்த 50 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கூறுகையில், கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில முடிவின்படி கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருப்பனந்தாள் பிடிஓ அலுவலர்களை சந்தித்தோம்.

கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நடப்பாண்டில் 100 நாள் வேலை வழங்க வேண்டும். இதை உறுதி செய்யும் விதமாக நம்பர் 6 படிவத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தினோம். பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இதன்மூலம் வேலைவாய்ப்பு கிடைத்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget