மேலும் அறிய

மறக்குமா அந்த நாள்... மறக்காமல் 42 ஆண்டுக்கு பிறகு சுகப்பிரசவம் பார்த்த அரசு மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கிய பெண்

தனக்கு சுகப்பிரசவம் நடக்க காரணமாக இருந்த தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கி அந்த நாள் எனக்கு மறக்காத நாள் என்று நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தஞ்சாவூர்: தனக்கு சுகப்பிரசவம் நடக்க காரணமாக இருந்த தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கி அந்த நாள் எனக்கு மறக்காத நாள் என்று நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் எழிற்செல்வி (64). இவர் மிகவும் ஆபத்தான நிலையில் பிரசவத்துக்காக கடந்த  1981ம் ஆண்டில் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் மருத்துவக்குழுவினர் அவருக்கு சுகப்பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தில் எழிற்செல்விக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் வீடு திரும்பினர். 

இதற்கிடையில் எழிற்செல்வியின் கணவரின் பணி நிமித்தமாக டில்லி அருகேயுள்ள கங்கோத்ரிக்கு சென்று வசித்து வருகிறார். தற்போது எழிற்செல்வியின் மகளுக்கும் திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் 42 ஆண்டுகள் கடந்த போதும் ஆபத்தான நிலையில் வந்த தனக்கு சுகப்பிரசவம் பார்த்த உயிருடன் மீட்டுக் கொடுத்த தஞ்சாவூர் அரசு ராசா மருத்துவமனையை நினைவில் வைத்திருந்து, அதன் சேவையைப் பாராட்டி, மருத்துவமனை வளர்ச்சிக்காக ரூ. 50 ஆயிரம் நன்கொடையை எழிற்செல்வி வழங்கியுள்ளார்.

இதற்கான காசோலையை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜிநாதனிடம் முனிசிபல் காலனியில் வசிக்கும் எழிற்செல்வியின் அண்ணன் சி.ஆர். பாலசுப்பிரமணியன் நேரில் வழங்கினார். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: 


மறக்குமா அந்த நாள்... மறக்காமல் 42 ஆண்டுக்கு பிறகு சுகப்பிரசவம் பார்த்த அரசு மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கிய பெண்

எனது பணிக்காலத்தில் அரசு மருத்துவமனையின் சேவையைப் பாராட்டி, தனி நபர் இப்படியொரு நன்கொடையை வழங்கியிருப்பது இதுவே முதல் முறை. இது, மானுடம் இன்றளவும் நன்றி மறவாமல் உள்ளதைக் காட்டுவது மட்டுமல்லாமல், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட அனைவரும் மன நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இந்த மருத்துவமனையில் கடந்த 2021 ஆண்டில் 46.1 சதவீதமாக இருந்த தாய்- சேய் இறப்பு விகிதம் நடப்பாண்டு 37.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. எடை குறைவாக பிறந்து உயிர் வாழும் குழந்தைகளின் விகிதம் கடந்த ஆண்டு 80.53 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 86.2 சதவீதமாக முன்னேற்றம் அடைந்துள்ளது. 

குறை மாத குழந்தைகள் உயிர் வாழ்தல் விகிதம் 2022ம் ஆண்டில் 74.8 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் 82.43 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் 3 பெண்களுக்கு பிறந்தன. அனைவரும் நலமாக விடுவிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

தேசிய உணவு நாளையொட்டி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையிலும் நோயாளிகளுக்கு எவர்சில்வர் தட்டுகளில் உணவு வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான செலவை மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் இதுவே முதல் முறை.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர்கள் ஏ. செல்வம், சுப்புராமன், மகப்பேறு, மகளிர் நலத் துறை மருத்துவர்கள் ராஜேஸ்வரி, ராஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி மறப்பது நன்றன்று என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக ஆபத்தான நிலையில் இருந்த தனக்கு சுகப்பிரசவம் ஏற்பட காரணமாக இருந்த மருத்துவமனையை இத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காமல் தன்னால் முடிந்த நிதியுதவியை அளித்த அந்த பெண்ணை அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget