மேலும் அறிய

வல்லம் வளம் மீட்பு பூங்காவில் பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விளக்க பயிற்சி

தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தரம் பிரிக்கப்பட்டு மக்கும் திடக்கழிவுகளை உரப்படுக்கையாக அமைக்கப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.

தஞ்சாவூர் அருகே வல்லம் வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலைமகள் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான மாணவர்களுக்கு விளக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி. இங்கு 15 வார்டுகள் உள்ளன. வல்லத்தை சுற்றி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என ஏராளமாக உள்ளன. எந்நேரமும் போக்குவரத்து நிறைந்த இப்பேரூராட்சியில் 4743 குடியிருப்பு வீடுகளும், 480 வணிக கட்டிடங்களும் உள்ளது. தினமும் இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் வார்டு 12ல் அமைந்துள்ள அய்யனார் நகர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.


வல்லம் வளம் மீட்பு பூங்காவில் பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விளக்க பயிற்சி

இந்த குப்பைகள் சேகரிக்கப்படும் இடம் மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைக்கிடங்கிற்கு வளம் மீட்பு பூங்கா என்று பெயர். எந்த வித துர்நாற்றமும் வீசுவது கிடையாது. சுற்றுலாவிற்கு செல்லும் பகுதியில் உள்ள இந்த பூங்கா உள்ளது. 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளம் மீட்பு பூங்கா மிகவும் சிறப்பான செயல்பாடுகளால் மாவட்ட அளவில் மட்டுமின்றி மாநில அளவில் முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. இங்கு தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தரம் பிரிக்கப்பட்டு மக்கும் திடக்கழிவுகளை உரப்படுக்கையாக அமைக்கப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. இந்த இயற்கை உரங்களை மிகக் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவில் தேக்கு, மூங்கில், கொய்யா, பலா, வாழை என்று நூற்றுக்கணக்கில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

மாடுகள், கோழிகள், வாத்துகள் மற்றும் முயல்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு வளர்க்கப்படும் மரங்கள், காய்கறிச் செடிகள் போன்றவற்றுக்கு மண்புழு உரம்தான் இடப்படுகிறது; மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் மண்புழு உரத்தை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனையும் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் மகசூலுக்கு அதிகம் உதவிகரமாக உள்ளது. இப்படி அனைத்து விதத்திலும் குப்பைகளை பயன் உள்ளதாக மாற்றி வளம் மீட்பு பூங்கா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவிற்கு பள்ளி மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி உட்பட சுற்றுப்பகுதியில் உள்ள பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் வந்து பார்வையிட்டு பயிற்சியும் பெற்றுள்ளனர். இங்கு வரும் மாணவர்கள் இது குப்பை சேகரிக்கும் கிடங்கா என்று ஆச்சரியப்படுகின்றனர். அந்தளவிற்கு சுற்றுலாப்பூங்கா போல் மிகவும் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கலைமகள் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து வளம் மீட்பு பூங்காவின் செயல்பாடுகளை பார்த்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு பேரூராட்சி பணியாளர்கள் திடக்கழிவு மேலாண்மை, உரப்படுக்கை அமைக்கப்படும் விதம், மண்புழு உரம் தயாரிப்பு, மரங்கள் வளர்ப்பு போன்றவை குறித்து விளக்கம் அளித்தனர்.

இதில் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். மேலும் வீடுகளில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எப்படி தரம்பிரிக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினர். ஏற்பாடுகளை பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர். 

தலைப்பு செய்திகள்

தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget