மேலும் அறிய

மழவராயன் ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை: கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்

மழவராயன் ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகாவில் உள்ள மழவராயன் ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் தலைமை வகித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது பூதலூர் தாலுக்கா பாளையப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

மழவராயன் ஏரியை தூர்வாருவது குறித்த தீர்மானம்

நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா பாளையப்பட்டி தெற்கு பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் உள்ள குமரன் மழவராயன் ஏரியை தூர்வாருவது குறித்து ஊராட்சித் தலைவர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் கிராம மக்கள் முன்னிலை ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பூசாரி தெரு, சோழகம்பட்டி கிராமம் ஆச்சம்பட்டி, நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் மகன் சாமிநாதனிடம் தூர் வாரும் பணி ஒப்படைக்கப்பட்டது. தற்போது பிரவீன் குமார் மூலமாக ஏரியை ஆழப்படுத்துவதற்கு தங்களிடம் கோரிக்கை விடுத்தோம். அதன் அடிப்படையில் தங்கள் உத்தரவின் பெயரில் வருவாய்த் துறை அனுமதியோடும், கனிம மற்றும் சுரங்க துறையினர் அனுமதியோடும் ஏரியை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 

நிலத்தடி நீர் உயர தூர் வாரும் பணி

இந்த ஏரியின் மூலமாக உசிலம்பட்டி, சிதம்பரப்பட்டி , பாளையப்பட்டி வடக்கு, பாளையப்பட்டிதெற்கு, மேட்டுப்பட்டி, கொத்தம்பட்டி, கிள்ளுக்கோட்டை, பில்லுகுலவாய்பட்டி ஆகிய கிராமங்களின் வாழ்வாதாரமே கால்நடைகள் தான். எனவே கால்நடைகள் நீர் அருந்துவதற்கும், நிலத்தடி நீர் உயரவும், மழை நீர் சேகரித்து விவசாயம் செழிக்கவும் ஏரியை தூர் வாரும் பணி நடந்து வருகிறது. 

இந்த பணியை தடுப்பதற்காக சில தனிநபர்கள் பேரம் பேசிக்கொண்டு எங்களுக்கு இவ்வளவு தொகை கொடுத்தால் தான் நீங்கள் ஏரியை ஆழப்படுத்தலாம். இல்லாவிடில் நாங்கள் அனைவருக்கும் புகார் அளிப்போம் என்று சமூக வலைத்தளங்கள் மூலமாக ஒப்பந்தக்காரர்களை மிரட்டுகின்றனர். இதனால் ஏரியை ஆழப்படுத்தும் பணி தடைப்படும் நிலை உருவாகி உள்ளது. தற்போது ஏரியை நல்ல முறையில் தூர்வாரிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் ஆழப்படுத்தி கொடுத்தால் எங்கள் கிராமத்திற்கு பயன் உள்ளதாக அமையும். இந்த ஏரியை தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மழவராயன் ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை: கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்

சமத்துவபுர வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கணும்

இதேபோல் ஒரத்தநாடு அருகே தோப்பு விடுதி பெரியார் சமத்துவபுரத்தில் அரசு வழங்கிய இலவச வீட்டை மீட்டு தரக் கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். 

அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருவோணம் தாலுகாவிற்கு உட்பட்ட தோப்பு விடுதி கிராமத்தில் கடந்த 2009 திமுக ஆட்சியில் பெரியார் சமத்துவபுரத்தில் இலவசமாக 100 வீடுகள் கட்டி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இதில் 80 வீடுகளில் ஒதுக்கப்பட்ட பயனாளிகள் வசித்து வருகின்றனர். மீதமுள்ள 20 வீடுகளில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுத்தும் அந்த வீடுகளில் சம்பந்தம் இல்லாதவர்கள் குடியிருந்து வருகின்றனர்.

இதுகுறித்து திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர்  நேரடி ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Embed widget