மேலும் அறிய

லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட வணிக வரி அலுவலர் மீதான வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை

வியாபாரியிடம் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட வணிக வரி அலுவலர் மீதான வழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: வியாபாரியிடம் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட வணிக வரி அலுவலர் மீதான வழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே வடசேரியைச் சேர்ந்தவர் பக்தவச்சலம். இவர் செய்து வந்த வியாபாரம் சரியாக நடைபெறாததால், வணிக வரித் துறைக்கு கடந்த 2007ம் ஆண்டில் பூஜ்ய அறிக்கையை அனுப்பினார். இதைத் தொடர்ந்து, பக்தவச்சலத்தை பட்டுக்கோட்டை வணிக வரி அலுவலர் ஸ்ரீதரன் (தற்போது 70 வயது) வரவழைத்து தனக்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும். தங்களிடமுள்ள ரசீதுகளை எடுத்து வாருங்கள். முதலில் ஆயிரம் ரூபாய் கொண்டு வாருங்கள் என்று பக்தவச்சலத்திடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பக்தவச்சலம் இதுகுறித்து தஞ்சாவூர் ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில், ஊழல் தடுப்பு காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஊழல் தடுப்பு காவல் துறையினர் கூறியது போல் வியாபாரி பக்தவச்சலம் நடந்து கொண்டார். அதன்படி கடந்த 2007, செப்டம்பர் 12ம் தேதி பக்தவச்சலத்திடம் லஞ்சம் வாங்கிய ஸ்ரீதரனை ஊழல் தடுப்பு காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கை நீதிபதி டி. சண்முகப்ரியா விசாரித்து ஸ்ரீதரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட வணிக வரி அலுவலர் மீதான வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை

திருவையாறு அருகே மாமனாரை அடித்துக் கொன்ற மருமகனுக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட மதுக்கூர் அருகே கருப்பூர் கிழக்கு அம்பலக்காரத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன் மகன் அய்யப்பன் (34). ஓட்டுநர். இவர் திருவையாறு பகுதிக்கு வேலை தொடர்பாக அடிக்கடி வந்தபோது வளப்பக்குடியைச் சேர்ந்த ஜோசப் (71) மகளைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், ஜோசப்புக்கும், அய்யப்பனுக்கும் கடந்த 2022ம் ஆண்டில் சொத்து பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, அய்யப்பன் தாக்கியதில் ஜோசப் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து மருவூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனைக் கைது செய்த விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் விசாரித்து மாமனாரை அடித்துக் கொன்ற அய்யப்பனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget