மேலும் அறிய

தஞ்சாவூர்: ஆன்லைன் மூலம் நெல்கொள் முதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்...!

’’நெல்மூட்டைக்கு 40 லஞ்சமாக கேட்பதை கைவிட வேண்டும். ஒவ்வொரு மூட்டையும் 2 கிலோ கூடுதலாக எடை வைப்பதை தடுக்க வேண்டும் என கூறி முழக்கம்’’

நெல் விற்பனைக்கு ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்து கைவிட வேண்டும்  என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சாலை மறியல், கொள்முதல் நிலையம் முற்றுகை, காத்திருப்பு மற்றும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாகுபடி செய்த நெல் மூட்டைகளை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய கொள்முதல் நிலையங்களுக்கு வரும் முன்பாக ஆன்லைனில் பதிவு செய்த பின்பு, அவர்கள் குறிப்பிட்ட நாட்களில் நெல்லை கொண்டு வருமாறு கூறிய பின் நெல் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் புதிய நடைமுறையை ஒன்றாம் தேதி  முதல் அமலுக்கு கொண்டு வந்தனர்.


தஞ்சாவூர்: ஆன்லைன் மூலம் நெல்கொள் முதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்...!

இந்த ஆன்லைன் எனும் புதிய நடைமுறைக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தாலுக்காக்களில் நடைபெற்ற ஆன்லைன் பயிற்சியை விவசாயிகள் புறக்கணித்தனர். இந்நிலையில் 2021-22ஆம் ஆண்டு கொள்முதல் பருவம் தொடங்கியது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்ய நெல்  மூட்டைகளை, கடந்த 15 நாட்களுக்கு மேலாக மலை போல் குவித்து வைத்துள்ளனர். மழை இரவு நேரங்களில் பெய்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்து வந்தனர். எனவே, நேரடி நெல் கொள் முதல் நிலையத்தை உடனே திறந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


தஞ்சாவூர்: ஆன்லைன் மூலம் நெல்கொள் முதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்...!

இந்நிலையில், கொள் முதலுக்கான புதிய நடைமுறை அமலுக்கு வந்ததையடுத்து, தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல அலுவலகத்தின் முன்பு, விவசாய சங்க கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் கழுத்தில் நெல் மூட்டைகளை தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலகத்தின் உள் பகுதிக்கு சென்று அங்கு தரையில் படுத்து காத்திருக்கும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது,  விவசாயிகள் ஆன்லைன் பதிவு முறையை உடனடியாக கைவிட வேண்டும். மாவட்டம் முழுவதும் உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். மழை பெய்வதால் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் ஈரப்பதத்தின் அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும். நெல்மூட்டைக்கு 40 லஞ்சமாக கேட்பதை கைவிட வேண்டும். ஒவ்வொரு மூட்டையும் 2 கிலோ கூடுதலாக எடை வைப்பதை தடுக்க வேண்டும் என கூறி முழக்கங்களை எழுப்பினர்.


தஞ்சாவூர்: ஆன்லைன் மூலம் நெல்கொள் முதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்...!

பின்னர் துணை மேலாளர் முத்தையா, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், தற்போது கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள மூட்டைகளை பழைய முறைப்படி கொள்முதல் செய்யப்படும், எங்கெங்கு நெல் மூட்டைகள் உள்ளதோ அங்கு உடனடியாக திறக்கப்படும் என உத்திரவாதம் வழங்கியதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதே போல்  ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்து, பழைய முறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரத்தநாட்டை அடுத்த செல்லம்பட்டி கடைவீதியில் விவசாயிகள் டிராக்டரை சாலையின் குறுக்கே நிறுத்தியும், மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதே போல் தஞ்சாவூர் அருகே கோவிலூர் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஆன்லைன் பதிவை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுளளது.

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget