மேலும் அறிய

ATM இயந்திரத்தை உடைக்க முயற்சி-பணம் எடுக்க முடியாததால் கடப்பாரையை விட்டு சென்ற திருடன்

’’சுமார் அரை மணி நேரம் கடும் முயற்சி செய்த பின், ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணத்தை திருட முடியாததால், கடப்பாறையை மட்டும் அங்கேயே விட்டு சென்று விட்டார்’’

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த வேப்பத்துார்-கல்யாணபுரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அனைவரும் விவசாயிகளாகவும் மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் இருப்பதால், அவர்கள் பணம் பரிவர்த்தனையை, பேங்க் ஆப் பரோடா வங்கியின் மூலம் செய்து வருகின்றனர். இவர்கள் திருவிடைமருதுாரிலுள்ள வங்கிக்கு சென்று பணம் பரிவர்த்தனை செய்ய முடியாததால், ஏடிஎம் இயந்திரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததின் பேரில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, வேப்பத்துார்-கல்யாணபுரம் சாலையில் ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொது மக்கள், ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் பரிவர்த்தனை செய்து வந்தனர்.


ATM இயந்திரத்தை உடைக்க முயற்சி-பணம் எடுக்க முடியாததால் கடப்பாரையை விட்டு சென்ற திருடன்

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்களுக்கு பல்வேறு பொருட்கள் வாங்க பணம் தேவைப்படும் என்பதால், அதிகமான பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில், வங்கி அலுவலர்கள் வைத்திருந்தனர். இந்நிலையில், அதிகாலை 2.48 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தலையில் பிளாஸ்டிக் கேரி பேக் உடன், முகத்தில் மாஸ்க் அணிந்து உள்ளே வந்து, ராட்ஷத கடப்பாறையால், ஏடிஎம் இயந்திரத்தை பெயர்க்க முயற்சி செய்தார். சுமார் அரை மணி நேரம் கடும் முயற்சி செய்த பின், ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணத்தை திருட முடியாததால், கடப்பாறையை மட்டும் அங்கேயே விட்டு சென்று விட்டார்.

இது குறித்து தகவலறிந்த திருவிடைமருதூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, பார்வையிட்டனர். பின்னர், வங்கி அதிகாரிகளுக்கும், கைரேகை பிரிவு எஸ்ஐ லெட்சுமி, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த அடையாளம் தெரியாத நபரின் கைரேகை பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், வங்கி அதிகாரிகள் சோதனையிட்டதில், சுமார், 2.5 லட்சம் பணம் ஏடிஎம் இயந்திரத்திலேயே பாதுகாப்பாக இருந்ததால், அப்பணத்தை வங்கி அதிகாரிகள், இயந்திரத்திலிருந்து மீட்டு வைத்துள்ளனர்.


ATM இயந்திரத்தை உடைக்க முயற்சி-பணம் எடுக்க முடியாததால் கடப்பாரையை விட்டு சென்ற திருடன்

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், கல்யாணபுரம்-திருவிடைமருதுார் சாலையில் கல்யாணபுரம் கிராமத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி ஏடிஎம் உள்ளது. இங்குள்ள ஏடிஎம் குறுகலான பகுதியில் இருப்பதால், வெளிநபர்களுக்கு எளிதாக தெரியாது. இந்த ஏடிஎம் இருப்பது உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தெரியும். அதிகாலை 2.48 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்கவர்கள் தான் செய்திருக்க வேண்டும். மேலும் தலையில் கேரிபேக்கை போட்டு கொண்டு, முகத்தில் மாஸ்க் மட்டும் அணிந்து வந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்துள்ளது இப்பகுதியில் சேர்ந்துள்ளவர்களாக இருக்கலாம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடிப்பதற்கும், பல்வேறு செலவுகளுக்கு பணம் இல்லாததால், வேறு வழியின்றி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருடியிருக்கலாம். இது குறித்து திருவிடைமருதுார் போலீசார், பழைய கொள்ளைக்காரர்களின் உருவ படங்களை வைத்து, திருடும் அடையாளம் தெரியாத நபரின் உருவத்தை ஆய்வு செய்து வருகின்றனர் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget