மேலும் அறிய

கஞ்சாவை அழிக்கும் பணி.... நவீன இயந்திரம் மூலம் 1145 கிலோ கஞ்சா தீ வைத்து அழிப்பு

கஞ்சாவை அழிக்கும் பணியை டிஐஜி கொடியசைத்து தொடங்கி வைத்து, அதற்கான இயந்திரத்தில் கஞ்சா பண்டல்களையும், மூட்டைகளையும் போட்டார்.

தஞ்சாவூர்: திருச்சி மத்திய மண்டலத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட 1,145 கிலோ கஞ்சா தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் நவீன இயந்திரம் மூலம் தீவைத்து அழிக்கப்பட்டது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஓராண்டு காலத்தில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை, நீதிமன்ற உத்தரவின்படி நேற்று தீயிட்டு அழிக்கப்பட்டது.


கஞ்சாவை அழிக்கும் பணி.... நவீன இயந்திரம் மூலம் 1145 கிலோ கஞ்சா தீ வைத்து அழிப்பு

இதற்காக தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவ கழிவுகள் அழிக்கும் கூடத்தில், இந்த கஞ்சாவை அழிக்க அந்தந்த மாவட்டங்களில் உள்ள போலீசார் மூட்டைகளாக கொண்டு வந்தனர். பின்னர் தஞ்சாவூர் சரக டிஐஜி., ஜியாவுல் ஹக், கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு, அந்த மாவட்ட போலீசாரிடம் விவரங்கள் கேட்டறிந்தார்.

பின்னர் போலீசார் அனைவரும் போதை பொருள் தடுப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து கஞ்சாவை அழிக்கும் பணியை டிஐஜி கொடியசைத்து தொடங்கி வைத்து, அதற்கான இயந்திரத்தில் கஞ்சா பண்டல்களையும், மூட்டைகளையும் போட்டார்.

தொடர்ந்து நவீன இயந்திரத்தில் கஞ்சா முழுவதும் தீயிட்டு அழிக்கப்பட்டது. இப்பணியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் விவேகானந்த சுக்லா, ஏடிஎஸ்பிக்கள் தஞ்சாவூர் முத்தமிழ்செல்வன், புதுக்கோட்டை சுப்பையா, பெரம்பலூர் பாலமுருகன், கரூர் பிரபாகரன், டிஎஸ்பிக்கள் நாகை முத்துக்குமார், திருவாரூர் இமானுவேல் ராஜ்குமார், அரியலூர் தமிழ்மாறன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  


கஞ்சாவை அழிக்கும் பணி.... நவீன இயந்திரம் மூலம் 1145 கிலோ கஞ்சா தீ வைத்து அழிப்பு

பின்னர் நிருபர்களிடம் தஞ்சாவூர் சரக டிஐஜி., ஜியாவுல் ஹக் கூறியதாவது: மத்திய மண்டலத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் போலீஸார் மூலம் 2,899  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,625 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று 1,145 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் காவல் சரகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் கண்டறிப்பட்டு, கைது செய்யப்பட்டு, அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் கஞ்சா கடத்துவதை தடுக்க தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனையை கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற திட்டத்தை தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தாா். தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பைத் தடுக்கும் வகையிலும், போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவா் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும், போதைப் பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி இளைய தலைமுறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

போதைப் பொருள் பிரச்னை என்பது உள்ளூா் பிரச்னையாக இல்லாமல் உலகம் தழுவிய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகள் எல்லாம் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு படாத பாடுபடுகின்றன. கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டும் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் போதைப் பொருள்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதும் அவற்றைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதும் போதைப் பொருள் குற்றங்கள் குறித்த 2021-ஆம் ஆண்டின் ஐ.நா. சபை அறிக்கை மூலம் தெரியவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Embed widget