மேலும் அறிய

ஒரு விவசாயி பிரச்சனை தீர்க்க முடியாமல் என்னாத்த கிழிக்கிறீர்கள் - ஆட்சியர் முன் கேள்விகேட்ட விவசாயிகள்

விவசாய பிரச்சனையை தீர்க்க முடியாமல் இங்கு நீங்கள் என்னத்த கீழிக்கிறீர்கள். நாங்கள் கொடுத்த மனுக்கள் கழுதைக்கு இரையாக்குவது போல் துாக்கி வீசி விடுகிறீர்கள். மாவட்ட கலெக்டரான உங்களால் எதுவும் முடியாது

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் தலைமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய சங்கத்தினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து வந்தனர். கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, அலுவலக வாயிலிருந்து தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்கத்தினர், திடீரென 50 க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கோஷமிட்டவாறு, உள்ளே நுழைந்தனர்.

இதனையறிந்த போலீசார், கோஷமிடாமல் உள்ளே செல்ல வேண்டும் என மறித்தால், விவசாயிகள் அமைதியாக செல்கின்றோம் என்று கூறி விட்டு, கூட்டரங்கிற்கு சென்றனர். அப்போது உள்ளே சென்ற போது, விவசாய சங்கத்தினர் திடீரென, மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்திலுள்ள அனைவரையும் கண்டிக்கின்றோம், என்று கோஷமிட்டபடி அனைவரும், திரண்டு சென்று, மாவட்ட கலெக்டர் மேஜையின் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு விவசாயி பிரச்சனை தீர்க்க முடியாமல் என்னாத்த கிழிக்கிறீர்கள் - ஆட்சியர் முன் கேள்விகேட்ட விவசாயிகள்

அப்போது, தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, தாலுக்கா, பூவத்துார் ஊராட்சி, பொட்டலங்குடிகாட்டை சேர்ந்த ராமசாமி மகன் திருவேங்கடத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் நஞ்செய் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த போதும், திருவேங்கடத்தின், வயலுக்கு செல்லும் பொது, பாதையை சில சமூக விரோதிகள், போலி விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கை கோர்த்து கொண்டு, திருவேங்கடத்தின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பொது பாதையை ஆக்கிரமித்து கொண்டு அறுவடை இய்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் தடுத்து விட்டனர்.

இதனால் விளைந்துள்ள நெற்கதீர்களை அறுவடைசெய்ய முடியாத காரணத்தால், முற்றிலும் மண்ணோடு மண்ணாக சாய்ந்துள்ளதால், முளைத்து மடித்து விட்டது. இது போன்ற நிலையால், அனைத்தும் வீணாகி விட்டதால், சுமார் 5 லட்சம் நஷ்டமாகி விட்டது. இததொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு, தலைமை செயலாளர், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர், வேளாண்மை துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர்  உள்ளிட்ட அனைவருக்கும் பலமுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுக்கள் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், விவசாயின் நிலையை கண்டு கொள்ளவில்லை. இதனால் ஏற்கனவே 4 போகம் பாதிக்கப்பட்ட நிலையிலும், தற்போது நடைபெறவுள்ள சம்பா சாகுபடியும், நடவு செய்ய முடியவில்லை.


ஒரு விவசாயி பிரச்சனை தீர்க்க முடியாமல் என்னாத்த கிழிக்கிறீர்கள் - ஆட்சியர் முன் கேள்விகேட்ட விவசாயிகள்

திருவேங்கடம் கொடுத்த மனுக்கள் மீது ஒருதலைபட்சமாக மாவட்ட நிர்வாகம் நடந்து கொள்வதால், மாவட்ட கலெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து,  பாதிக்கப்பட்டவிவசாயிக்கு  1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், முதியவரான விவசாயி நிலத்தை அபகரிப்பது குறித்து பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கூட மனு அளித்தும்,  விவசாய பிரச்சனையை தீர்க்க முடியாமல் இங்கு நீங்கள் என்னத்த கிழிக்கிறீர்கள். நாங்கள் கொடுத்த மனுக்கள் கழுதைக்கு இரையாக்குவது போல் துாக்கி வீசி விடுகிறீர்கள். மாவட்ட கலெக்டரான உங்களால் எதுவும் முடியாது,

நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டரை கண்டித்தும், உடனடியாக தீர்வு காண வேண்டும், அதுவரை கூட்டரங்கில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தரையில் அமர்ந்து, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது, தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்க புகழேந்தி மற்றும் போராட்டக்காரர்களை, போலீசார் கைது செய்ய வந்த போது, என்னை கைது செய்தால், தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கொளுந்து விட்டு எரியும் என கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து பிரச்சனை விஸ்வரூபமானதால், மற்ற விவசாய சங்கத்தினர்கள், புகழேந்தியை சமாதானம் செய்தனர். அப்போது, மாவட்ட கலெக்டரிடம், வழங்கிய மனுவை காண்பித்து, நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் என ஆதாரத்தை கோபத்துடன் காண்பித்தார்.

பின்னர், தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்கத்தினருக்கு, ஆதரவாக கூட்டத்திற்கு வந்த விவசாய சங்கத்தினர், மாவட்ட கலெக்டர், உடனடியாக தீர்வு காண வேண்டும், தவறும் பட்சத்தில் அனைத்து விவசாய சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கோஷமிட்டதால், கூட்டத்தில் பெரும் பரபரப்பானது.  இதனையடுத்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலீவர், கோட்டாட்சியர் வேலுமணியிடம், உடனடியாக சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டார். பின்னர், மாவட்ட கலெக்டர் பேசுகையில், உங்களது மனுவை நான் பார்க்க வில்லை. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததின் பேரில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் விவசாய குறை தீர்க்கும் கூட்டம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி, பிரச்சனைக்குரிய சாலையை மீட்டு, தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
Embed widget