மேலும் அறிய

தஞ்சாவூரில் திருநங்கைகள் ரேஷன் கார்டுகள் பெற சிறப்பு முகாம்

’’திருநங்களாக மாறி வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தால் ஆதார் அட்டையை பெற்றோர் தர மறுக்கின்றனர்; இதனால் எங்களால் ரேசன் கார்டு பெற முடியவில்லை’’

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 1,200 திருநங்கைகள் உள்ளனர். இவர்களில் சுமார் 50 பேர் மட்டுமே ரேஷன்  கார்டு பெற்றுள்ளனர். இந்நிலையில் திருநங்கைகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் சார்பில், தஞ்சாவூர் வட்டத்துக்குட்பட்ட திருநங்கைகள் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் தஞ்சாவூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்ட திருநங்கைகளின் ஒருங்கிணைப்பாளர் ராகிணி தலைமையில் 30 பேர் தங்களுக்கு ரேஷன் கார்டு வழங்குமாறு அதற்கான விண்ணப்பத்தை, வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜிடம் வழங்கினர்.


தஞ்சாவூரில் திருநங்கைகள் ரேஷன் கார்டுகள் பெற சிறப்பு முகாம்

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயில் தைப்பூச பெருவிழா கொடியேற்றம்

அப்போது திருநங்கைகளின் ஒருங்கிணைப்பாளர் ராகிணி கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,200க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். ஆனால் குறைந்த அளவிலேயே ரேஷன் கார்டு பெற்றுள்ளனர். ரேஷன் கார்டு பெற ஆதார் அட்டை கட்டாயம் என கூறப்படுகிறது. இதனால் நாங்கள் வெளியூர்களுக்கு செல்லும் போதும் பல்வேறு வலை நிமித்தமாக செல்லும் போதும், சலுகைகளை பெறுவதற்கு ரேசன் கார்டு அட்டை கட்டாயம் வேண்டும் என்கிறார்கள். ஆனால் ரேசன் கார்டுகள் இல்லாததால், பொருட்கள் வாங்க முடியாமலும், சலுகைகளை பெற முடியவில்லை. இது போன்ற காரண்ங்களால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்க முடியாமல் போய் விடுகிறது. நாங்கள் திருநங்களாக மாறி வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தால் ஆதார் அட்டையை பெற்றோர் தர மறுக்கின்றனர்.  இதனால் எங்களால் ரேசன் கார்டு பெற முடியவில்லை. அதிகாரிகளிடம் கூறியும் பயனில்லாததால், ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளோம். 


தஞ்சாவூரில் திருநங்கைகள் ரேஷன் கார்டுகள் பெற சிறப்பு முகாம்

எங்களை போன்ற திருநங்கைகளுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதே போல் பலர் நன்றாக படித்து வருகின்றார்கள். அவர்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவர்களால் மேற்கொண்டு படிப்பதற்கான வழிகள் இல்லாமல் போய், மாற்றுப்பணிகளில் ஈடுபடுகின்றனர். திருநங்களுக்கு அரசு வழங்கும் ஆவணங்களை வழங்கினால், நாங்களும் சமுதாயத்தில் ஒருவராக வாழ்வோம். பலமுறை மீதமுள்ளவர்களுக்கு ஆவணங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கையும், மனுக்களும் வழங்கி வந்துள்ளோம். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கொரோனா பரவலை மறந்து பாஜக சார்பில் கபடி போட்டி- சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் கபடி கபடி

இப்போது நாங்கள் வழங்கும் மனுக்களை பெற்று கொண்டு நாங்கள், கேட்கும் ஆவணங்களை வழங்க வேண்டும். சிறப்பு முகாம் மூலம் எங்களுக்கு அரசு ஆவணங்களை வழங்கினால், நாங்களும் மற்றவர்களை போல், உரிய பொருட்களையும், சலுகைகளை பெற்று கொண்டு வாழ்வோம். எனவே ஆதார் அடையாள அட்டைக்குப் பதில், தமிழக அரசால் திருநங்கைகளுக்கு நலவாரியம் மூலம் வழங்கப்பட்டுள்ள  அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக் கொண்டு ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மேட்டூர் அணையின் நீர் வரத்து 2,565 கன அடியில் இருந்து 2,390 கன அடியாக குறைந்தது

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Embed widget