மேலும் அறிய

சீர்காழியில் வீட்டில் சுயபிரசவம் பார்த்த 3 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து

சீர்காழி அருகே வீட்டில் சுயபிரசவம் பார்த்ததாக மூன்று பேர் மீது போடப்பட்ட வழக்கை காவல்துறையினர் ரத்து செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த எருக்கூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர் என்பவரின் மனைவி பெல்சியா.  இவர்களுக்கு முதல் குழந்தை அறுவை சிக்கிச்சை மூலம் மருத்துவமணையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கடந்த அக்டோபர் 4 -ம் தேதி இவருக்கு  வீட்டிலேயே சுகப்பிரசவத்தின் மூலம் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. முதல் குழந்தை அறுவை சிகிச்சையில் பிறந்ததால் இரண்டாவது குழந்தையும் அறுவை சிகிச்சையில் தான் பிறக்கும் என்பதால் அதை விரும்பாத தம்பதியினர் இரண்டாவது குழந்தையை சுகபிரசவத்தில் வீட்டிலேயே பெற்றெடுக்க முடிவுசெய்து  அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு மருந்து, மாத்திரை, ஊசிகள் பயன்படுத்தாமல் சுகபிரசவத்தின் வாயிலாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. 


சீர்காழியில்  வீட்டில் சுயபிரசவம் பார்த்த 3 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து

இதுகுறித்து தகவலறிந்த அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் தம்பதியினரிடம் வீட்டிற்கு நேரடியாக சென்று தாய், சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவே உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் என 108 அவசர ஊர்தி வாகனத்தை வைத்துகொண்டு அழைத்துள்ளனர். ஆனால் தம்பதியினர்  மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டனர். இந்நிலையில் மறுநாள் நள்ளிரவு 12 மணிக்கு கொள்ளிடம் காவல்துறையினருடன் சென்று மருத்துவமனைக்கு வர சுகாதாரத்துறையினர் கட்டாயபடுத்தியுள்ளனர். தொடர்ந்து வர மறுத்த குழந்தையின் தாய் பெல்சியா, தந்தை ஜான் கிறிஸ்டோபர் மற்றும் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் சுதாகர்  ஆகிய  மூன்று பேர் மீது வட்டார மருத்துவர் அலுவலர் ரமேஷ் குமார் கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். அதனை அடுத்து திட்டுவது, தொப்புள் கொடியை மறைத்து வைத்தது, அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் மிரட்டல் விடுத்தது ஆகிய  நான்கு பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


சீர்காழியில்  வீட்டில் சுயபிரசவம் பார்த்த 3 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து

இந்த சூழலில் இந்த மூன்று பேர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி பல்வேறு தரப்பட்ட அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கைளை வைத்தனர். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் காவல்துறையினர் ரத்து செய்து மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர், இதனை ஏற்று மாவட்ட நீதிமன்றமும் வழக்கு ரத்து செய்ததை உறுதி செய்துள்ளது.


சீர்காழியில்  வீட்டில் சுயபிரசவம் பார்த்த 3 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சுகாதார வட்டம் குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்பட்ட எருக்கூர் கிராமத்தை சேர்ந்த ஜான் கிருஸ்டோபர் என்பவரின் மனைவி பெலுசியா என்பவர் கடந்த 04.10.2022 அன்று நண்பகல் 02.10 மணியளவில் தனது வீட்டிலேயே தனது இரண்டாவது குழந்தையை எவ்வித மருத்துவத்துறை மேற்பார்வை உதவி இன்றி தனது கணவர் மூலமாக ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து உள்ளார். பிரசவம் பார்ப்பதில் பயிற்சி பெற்றவர்களின் உதவி இல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதன்காரணமாக தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஜான் கிருஸ்டோபர், அவரது மனைவி பெல்சியா , அவருகளுக்கு உதவிய நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் சுதாகர் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் கொள்ளிடம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இதுபோன்ற இயற்கை ஆர்வலர்கள் என்ற பெயரில் மருத்துவமனை அல்லது பிரசவம் பயிற்சி பெற்ற நபர்கள் உதவி இல்லாமல் பிரசவம் பார்ப்பது தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் என்பதால் அத்தகைய செயல்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள நிலையில் இவர்கள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Embed widget