மேலும் அறிய

சீர்காழியில் வீட்டில் சுயபிரசவம் பார்த்த 3 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து

சீர்காழி அருகே வீட்டில் சுயபிரசவம் பார்த்ததாக மூன்று பேர் மீது போடப்பட்ட வழக்கை காவல்துறையினர் ரத்து செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த எருக்கூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர் என்பவரின் மனைவி பெல்சியா.  இவர்களுக்கு முதல் குழந்தை அறுவை சிக்கிச்சை மூலம் மருத்துவமணையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கடந்த அக்டோபர் 4 -ம் தேதி இவருக்கு  வீட்டிலேயே சுகப்பிரசவத்தின் மூலம் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. முதல் குழந்தை அறுவை சிகிச்சையில் பிறந்ததால் இரண்டாவது குழந்தையும் அறுவை சிகிச்சையில் தான் பிறக்கும் என்பதால் அதை விரும்பாத தம்பதியினர் இரண்டாவது குழந்தையை சுகபிரசவத்தில் வீட்டிலேயே பெற்றெடுக்க முடிவுசெய்து  அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு மருந்து, மாத்திரை, ஊசிகள் பயன்படுத்தாமல் சுகபிரசவத்தின் வாயிலாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. 


சீர்காழியில்  வீட்டில் சுயபிரசவம் பார்த்த 3 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து

இதுகுறித்து தகவலறிந்த அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் தம்பதியினரிடம் வீட்டிற்கு நேரடியாக சென்று தாய், சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவே உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் என 108 அவசர ஊர்தி வாகனத்தை வைத்துகொண்டு அழைத்துள்ளனர். ஆனால் தம்பதியினர்  மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டனர். இந்நிலையில் மறுநாள் நள்ளிரவு 12 மணிக்கு கொள்ளிடம் காவல்துறையினருடன் சென்று மருத்துவமனைக்கு வர சுகாதாரத்துறையினர் கட்டாயபடுத்தியுள்ளனர். தொடர்ந்து வர மறுத்த குழந்தையின் தாய் பெல்சியா, தந்தை ஜான் கிறிஸ்டோபர் மற்றும் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் சுதாகர்  ஆகிய  மூன்று பேர் மீது வட்டார மருத்துவர் அலுவலர் ரமேஷ் குமார் கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். அதனை அடுத்து திட்டுவது, தொப்புள் கொடியை மறைத்து வைத்தது, அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் மிரட்டல் விடுத்தது ஆகிய  நான்கு பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


சீர்காழியில்  வீட்டில் சுயபிரசவம் பார்த்த 3 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து

இந்த சூழலில் இந்த மூன்று பேர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி பல்வேறு தரப்பட்ட அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கைளை வைத்தனர். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் காவல்துறையினர் ரத்து செய்து மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர், இதனை ஏற்று மாவட்ட நீதிமன்றமும் வழக்கு ரத்து செய்ததை உறுதி செய்துள்ளது.


சீர்காழியில்  வீட்டில் சுயபிரசவம் பார்த்த 3 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சுகாதார வட்டம் குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்பட்ட எருக்கூர் கிராமத்தை சேர்ந்த ஜான் கிருஸ்டோபர் என்பவரின் மனைவி பெலுசியா என்பவர் கடந்த 04.10.2022 அன்று நண்பகல் 02.10 மணியளவில் தனது வீட்டிலேயே தனது இரண்டாவது குழந்தையை எவ்வித மருத்துவத்துறை மேற்பார்வை உதவி இன்றி தனது கணவர் மூலமாக ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து உள்ளார். பிரசவம் பார்ப்பதில் பயிற்சி பெற்றவர்களின் உதவி இல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதன்காரணமாக தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஜான் கிருஸ்டோபர், அவரது மனைவி பெல்சியா , அவருகளுக்கு உதவிய நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் சுதாகர் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் கொள்ளிடம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இதுபோன்ற இயற்கை ஆர்வலர்கள் என்ற பெயரில் மருத்துவமனை அல்லது பிரசவம் பயிற்சி பெற்ற நபர்கள் உதவி இல்லாமல் பிரசவம் பார்ப்பது தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் என்பதால் அத்தகைய செயல்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள நிலையில் இவர்கள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Breaking News LIVE:  நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
Breaking News LIVE: நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Breaking News LIVE:  நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
Breaking News LIVE: நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
Coolie: விக்ரமை தொடர்ந்து கூலி! ஒளிப்பதிவாளரை புக் செய்த லோகி! ரஜினி படத்தில் இணையும் பிரபலங்கள்?
Coolie: விக்ரமை தொடர்ந்து கூலி! ஒளிப்பதிவாளரை புக் செய்த லோகி! ரஜினி படத்தில் இணையும் பிரபலங்கள்?
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
Embed widget