மேலும் அறிய

கும்பகோணத்தில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து - இதுவரை 4 பேர் உயிரிழப்பு

’’சாலையில் திரியும் மாடுகளை கோசாலைகளில் விடுவதுடன், அலட்சியமாக செயல்படும் மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை’’

கும்பகோணம் நகரில் 45 வார்டுகளில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் 200க்கும் மேற்பட்டோர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எருமை மற்றும் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.  மாடு வளர்ப்போர் தங்களுடைய தொழுவத்தில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு பரவும் என கருதி பால் கறந்ததும் மாடுகளை அவிழ்த்து விட்டுவிடுகின்றனர். இதனை தொடர்ந்து, கும்பகோணத்தில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. குறிப்பாக நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனை ஒருங்கே அமைந்துள்ள மூர்த்தி சாலை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள், குடியிருப்புகளில் மாடுகள் வரிசையாக படுத்துக்கிடப்பதால் நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது.


கும்பகோணத்தில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து - இதுவரை 4 பேர் உயிரிழப்பு

மேலும் நோயாளிகளை ஏற்றிவரும் ஆம்புலன்ஸ்கள் சாலையில் படுத்து கிடக்கும் மாடுகளால் குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு செல்ல முடியாததால் நோயாளிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இது குறித்து நகராட்சி ஆணையரிடம் தொடர்ந்து புகார்கள் சென்றதையடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கடந்த மாதம் முதற்கட்ட எச்சரிக்கை விடுப்பட்டது. ஆனாலும் மாடுகளை சாலையில் அவிழ்த்து விட்டிருந்தனர். இதையடுத்து கடந்த மாதம் இறுதியில்,  கும்பகோணம் டி.எஸ்.பி அசோகன் மேற்பார்வையில், போலீசார் பாதுகாப்புடன்  நகராட்சி அதிகாரிகள் கும்பகோணத்தில் சாலையில் சுற்றித்திரிந்த 20 பசு மாடுகள் மற்றும் கன்று குட்டிகள்,  மாடு பிடிப்பவர்கள் மூலம் பிடித்து கும்பகோணம் பழைய நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள, வானாவதிராஜபுரத்தில் உள்ள மடத்திற்கு சொந்தமான கோசாலைக்கு அனைத்து மாடுகளும் வேனில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. ஆனால் பொது மக்கள், நிர்வாகத்தின் பேச்சை அலட்சியப்படுத்தும் விதமாக, மாடுகள், கன்றுகளை அவிழ்த்து விட்டதால் மீண்டும் கும்பகோணம் சாலைகளில் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கும்பகோணம், மாகமக குளக்கரை,  ஆயிகுளம் சாலை, ஹாஜியார் தெரு, நாகேஸ்வரன் வடக்கு வீதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் திரியத்தொடங்கின. இது குறித்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர். ஆனாலும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாததால், கும்பகோணத்தில் சாலையின் நடுவில் படுத்திருந்த மாட்டின் மேல் மோதி துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

கும்பகோணத்தில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து - இதுவரை 4 பேர் உயிரிழப்பு

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், உள்ளூர், செட்டி மண்டபம், அம்பேத்கார் நகரை சேர்ந்த கோவிந்தசாமி மகன் பிரபாகரன் (30). எலக்டிரிஷியனான இவர், கொரநாட்டுக்கரூப்பூர் சாலையில் நின்றிருந்த மாடு திடீரென சாலையின் குறுக்கே ஒடியது. அப்போது வாகனத்தில் வந்த   பிரபாகரன் நிலைதடுமாறி மாட்டின் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த பிரபாகரனை அப்பகுதியினர், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  உயிரிழந்த பிரபாகரனுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.


கும்பகோணத்தில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து - இதுவரை 4 பேர் உயிரிழப்பு

இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் படுத்திருந்த மாடுகள் தெரியாமல், இருவர் இறந்தனர். மேலும் கடந்த 8 ஆம் தேதி மணிகண்டன் என்பவர் மாட்டின் மீது சம்பவ இடத்திலேயே இறந்தார். சாலையில் செல்பவர்களை விரட்டிய மாட்டை துரத்திய போலீசாரின் வயிற்றில் மாடு கொம்பால் குத்தியால் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து, மாடுகளை சாலையில் அவிழ்த்து விட்ட, மாட்டின் உரிமையாளரான கும்பகோணம் செக்காங்கண்ணியை சேர்ந்த அருமைநாயகம் மகன் குழந்தைசெல்வம் (52) என்பவரை, கால்நடை அத்துமீறல் சட்டத்தின் கீழ், கும்பகோணம் மேற்கு போலீசார் கைது செய்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது மக்கள், வாகனத்திற்கு இடையூராக சாலையில் திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் விட வேண்டும், மாட்டின் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு பதிந்து, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், இனி வரும் காலங்களில் இது போன்ற இறப்புகள் ஏற்படாதவகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget