மேலும் அறிய
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
மதுரை மாநகரில் 5 ஆண்டுகளில் 1லட்சத்தி 33 ஆயிரத்தி 523 பேர் தெருநாய்கள் கடித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெருநாய்கள் (கோப்புப்படம்)
மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் கடித்து ரேபிஸ் நோயால் 32 நபர்கள் உயிரிழப்பு என்று ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
நாய்கடி பாதிப்பு
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவிற்கு சுற்றி திரியும் நிலையில் பொதுமக்களை கடித்து காயம் ஏற்படுவதோடு ஏராளமான சிறுவர், சிறுமியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி மாமன்ற கூட்டங்களின் போது மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவிற்கு நாய்களின் நடமாட்டம் இருப்பதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்.டி.ஐ., ஆர்வலரான N.G.மோகன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாய்கடி பாதிப்பு சிகிச்சை குறித்த விவரங்கள் கேட்டு மனு அளித்திருந்தார். அதில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2020 ஜனவரி 1 முதல் 2024 நவம்பர் மாதம் வரைநாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் நாய்கடியால் ரேபிஸ் நோய் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தை கேள்வியாக கேட்டிருந்தார்.
ரேபிஸ் நோயால் இறப்பு
அதற்கு அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அளித்துள்ள பதிலில்,” கடந்த 2020 ஆண்டு 30,168 பேர் உள் நோயாளியாகவும் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர். அதில் ஒருவர் நாய்க்கடியால் ரேபிஸ் நோயல் இறந்ததாகவும், 2021 ஆம் ஆண்டு 29 ஆயிரத்தி 100 பேர் சிகிச்சை பெற்றதில் 5 பேர் நாய் கடியால் ரேபிஸ் நோய் வந்து இறந்ததாகவும், 2022 ஆம் ஆண்டு 30391 பேர் சிகிச்சை பெற்றதில் 5 பேர் நாய் கடியால் ரேபிஸ் நோயால் இறந்ததாகவும், 2023 ஆம் ஆண்டு சிகிச்சை பெற்றதில் 23741 பேர் சிகிச்சை பெற்றதில் 11 பேர் நாய்க்கடியால் ரேபிஸ் நோயால் இறந்ததாகவும், 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 20123 பேர் சிகிச்சை பெற்றதோடு அதில் 10 பேர் ரேபிஸ் நோயால் இறந்ததாகவும் பதில் அளித்துள்ளனர்.
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் மொத்தம் 1லட்சத்தி 33ஆயிரத்தி 523 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ரேபிஸ் நோயால் 32 நபர்கள் உயிரிழந்தள்ளதாகவும் RTI மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
இது குறித்து பேசிய RTI ஆர்வலர் மோகன் மதுரை மாநகராட்சி பகுதிகளில் அதிகளவிற்கு தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். எனவும், தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கான கருத்தடை சிகிச்சை அதிகளவிற்கு செய்ய வேண்டும் எனவும், தெரிவித்தார்.
மாநகராட்சி தரப்பில் அதிகளவிற்கு கருத்தடை செய்வதாக கூறினாலும் கூட தொடர்ந்து தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை குறித்து உடனடியாக கணக்கீட்டு ஆய்வு நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Allu Arjun: புஷ்பா -2 பிரீமியர் காட்சியின் போது கூட்ட நெரிசரில் சிக்கி உயிரிழந்த ரேவதி குடும்பத்திற்கு 2 கோடி நிதியுதவி!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


7131
Active
10976
Recovered
78
Deaths
Last Updated: Fri 13 June, 2025 at 12:16 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
அரசியல்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion