மேலும் அறிய

ABP Nadu Impact : "தஞ்சை மேம்பாலம் எச்சரிக்கை பலகையில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்" உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்..!

ஏபிபி நாடு செய்தி எதிரொலியாக தஞ்சை மேம்பாலத்தில் எச்சரிக்கை பலகையில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர்: ஏபிபி நாடு செய்தி எதிரொலியாக தஞ்சை மேம்பாலத்தில் எச்சரிக்கை பலகையில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது. 

தஞ்சை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன. சாலைகள், பழைய பேருந்து நிலையம், வணிக வளாகம் என்று பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தஞ்சை மாநகரில் உலக புகழ் பெற்ற பெரியகோயில், சரஸ்வதி மகால் நூலகம், அரண்மனை, கலைக்கூடம் போன்றவை அமைந்துள்ளன. இதனால் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் தஞ்சைக்கு வந்து செல்கின்றனர். முக்கியமாக வெளியூர், வெளிமாவட்டத்தை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் தஞ்சையில் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப்பார்க்க வருகின்றனர்.

வழிகாட்டி பெயர்ப்பலகைகளை விட்டு வையுங்கள்

இவர்கள் எந்தவித சிரமமும் இன்றி குறிப்பிட்ட இடங்களுக்கும், தங்களின் உறவினர்கள் வீடுகளை எளிதாக கண்டறியவும் சாலையோரங்களிலும், தெருமுனைகளிலும் வழிகாட்டி பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பலகைகளில் தெருக்களின் பெயர், சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் விபத்து நடைபெறும் பகுதி, மெதுவாக செல்ல வேண்டிய பகுதி போன்றவை குறித்தும் வேண்டும் எனவும் எழுதப்பட்டுள்ளன.

ஆனால் இது பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது என்பதை போஸ்டர் ஒட்டுபவர்கள் உணர்வதில்லை. முக்கிய சாலைகளில் உள்ள வழிகாட்டி பெயர் பலகைகள் மீது விளம்பர போஸ்டர்கள், ஆபர் நோட்டீஸ்கள், துணிக்கடை விளம்பர நோட்டீஸ் என பல்வேறு நோட்டீஸ்களையும் சிலர் ஒட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் வரக்கூடிய மக்கள் குழப்பம் அடைந்து திசை தெரியாமல் வழி மாறி செல்கின்றனர்.

போஸ்டர் ஒட்ட வேறு இடமே கிடைக்கலையாப்பா?

தஞ்சை மாவட்டத்திலேயே அதிகம் விபத்து நடைபெறும் பகுதியாக தஞ்சை பெரியகோயில் அருகே உள்ள மேம்பாலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் செல்லக்கூடிய வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் என்பதற்காக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பலகையின் மீதும் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த போஸ்டர் கிழிக்கப்பட்டாலும் பலகையில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் தெரியவில்லை. இதுகுறித்து ஏபிபிநாடு செய்தி வெளியிட்டது. 

செய்தியின் எதிரொலியாக சுத்தமானது

இதையடுத்து எச்சரிக்கை வாசகங்கள் தெரியும் வகையில் அந்த போர்ட்டில் இருந்து போஸ்டர்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இதேபோல் சில இடங்களில் வழிகாட்டி பெயர் பலகைகள் உடைந்து காணப்படுகிறது. இப்படி செய்பவர்களுக்கு மனசாட்சி இருக்குமா? இருக்காதா என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது. 

மேம்பாலம் எச்சரிக்கை பலகையை சரி செய்தது போல் தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள தெரு வழிகாட்டி பெயர் பலகை உடைந்துள்ளது. இதை கயிறால் கட்டி வைத்துள்ளனர். இதேபோல் மானம்புச்சாவடியில் உள்ள தெருவை குறிக்கக்கூடிய வழிகாட்டி பெயர் பலகை கம்பி மட்டும் உள்ளது. தெருவின் பெயர் எழுதப்பட்டிருந்த பலகை எங்கு சென்றது என்றே தெரியவில்லை. இவற்றையும் சரி செய்ய வேண்டும். அப்போதுதான் பிற மாவட்ட, மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் வழி தெரியாமல் தடுமாற மாட்டார்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முத்தெடுக்கும் சோளத்தில் முளைத்த முட்களாய் படைப்புழு: மீட்கும் வழிகள் என்ன?
முத்தெடுக்கும் சோளத்தில் முளைத்த முட்களாய் படைப்புழு: மீட்கும் வழிகள் என்ன?
மாநில அளவில் 7-வது இடம்: தேர்ச்சியில் 'கெத்து' காட்டும் தஞ்சாவூர்
மாநில அளவில் 7-வது இடம்: தேர்ச்சியில் 'கெத்து' காட்டும் தஞ்சாவூர்
மீட்டும் விரல்கள்... பேசும் நரம்புகள்: மெய்மறக்கச் செய்யும் தஞ்சை வீணையின் மாயாஜாலம்
மீட்டும் விரல்கள்... பேசும் நரம்புகள்: மெய்மறக்கச் செய்யும் தஞ்சை வீணையின் மாயாஜாலம்
இயற்கை தந்த வெள்ளை தங்கம்... தஞ்சை கலைஞர்கள் செதுக்கும் நெட்டி அதிசயம்
இயற்கை தந்த வெள்ளை தங்கம்... தஞ்சை கலைஞர்கள் செதுக்கும் நெட்டி அதிசயம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Government Formation LIVE: திமுகவுடன் கூட்டணி.. தவெகவுக்கு ஆதரவு.. கூட்டாக அறிவித்த சிபிஎம்-சிபிஐ
Tamil Nadu Government Formation LIVE: திமுகவுடன் கூட்டணி.. தவெகவுக்கு ஆதரவு.. கூட்டாக அறிவித்த சிபிஎம்-சிபிஐ
Hung Assembly: தமிழ்நாட்டில் உருவாகும் தொங்கு சட்டசபை: கோவா, மகாராஷ்டிரா வரலாறு தெரியுமா? என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
Hung Assembly: தமிழ்நாட்டில் உருவாகும் தொங்கு சட்டசபை: கோவா, மகாராஷ்டிரா வரலாறு தெரியுமா? என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
Thirumavalavan: துணை முதலமைச்சர் ஆகும் திருமாவளவன்? விஜய் ஆட்சியமைக்க விசிக கிரீன் சிக்னல்?
Thirumavalavan: துணை முதலமைச்சர் ஆகும் திருமாவளவன்? விஜய் ஆட்சியமைக்க விசிக கிரீன் சிக்னல்?
Vijay Govt Formation: தவெகவுக்கு ஓகே சொன்ன இடதுசாரிகள்.. முடிவுக்கு வரும் இழுபறி.. ஆட்சியமைக்கும் விஜய்?
Vijay Govt Formation: தவெகவுக்கு ஓகே சொன்ன இடதுசாரிகள்.. முடிவுக்கு வரும் இழுபறி.. ஆட்சியமைக்கும் விஜய்?
Vijay Govt Formation: தவெகவுக்கு கிரீன் சிக்னல்? சிபிஎம் எடுத்த முக்கிய முடிவு... வெளியான தகவல்
Vijay Govt Formation: தவெகவுக்கு கிரீன் சிக்னல்? சிபிஎம் எடுத்த முக்கிய முடிவு... வெளியான தகவல்
TN Politics: தமிழகத்தில் யார் ஆட்சி? - முடிவு எடுக்கப்போகும் 3 கட்சி.. பொன்னான வாய்ப்பு என்னாகும்?
TN Politics: தமிழகத்தில் யார் ஆட்சி? - முடிவு எடுக்கப்போகும் 3 கட்சி.. பொன்னான வாய்ப்பு என்னாகும்?
வாட்ஸப்பில் அனுப்பி ஆதரவு கேட்பதா? தவறாக வழிநடத்தப்படும் விஜய்- வெடித்த விசிக!
வாட்ஸப்பில் அனுப்பி ஆதரவு கேட்பதா? தவறாக வழிநடத்தப்படும் விஜய்- வெடித்த விசிக!
பிளஸ் 2 தேர்வில் 565 மார்க்! காஞ்சிபுரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை!
பிளஸ் 2 தேர்வில் 565 மார்க்! காஞ்சிபுரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை!
Embed widget