மேலும் அறிய

‛வெயில் மண்டையை பிளக்குது...’ சீர்காழி ஆதார் மையத்தில் தவம் இருக்கும் மக்கள்!

சீர்காழி ஆதார மையத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால் நாட்கணக்கில் பொது மக்கள் காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது.

பெரும்பாலான இடங்களில் நமது அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படும் ஆதார் அட்டை மிகமுக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். பல முக்கிய பணிகளுக்கு ஆதார் தேவைப்படுகின்றது. ஆதார் அட்டையின் அனைத்து விவரங்களும் முற்றிலும் சரியானவையாக இருப்பது மிகவும் முக்கியமாகும். பிறந்த நாள், பெயர், முகவரி போன்றவற்றை சரியாக நிரப்புவது அவசியம். இல்லையெனில் ஆதார் தொடர்பான பல வேலைகள் சிக்கிக்கொள்ளக்கூடும்.


‛வெயில் மண்டையை பிளக்குது...’ சீர்காழி ஆதார் மையத்தில் தவம் இருக்கும் மக்கள்!

ஆதார் அட்டையில் கொடுக்கப் பட்டுள்ள பெயர், பிறந்த தேதி போன்ற பல தகவல்களை ஆன்லைனில் மாற்றலாம். ஆனால் முகவரியை மாற்றுவதில் சிக்கல் உள்ளது. இந்த பிரச்சினை பெரும் பாலும் வாடகை வீடுகளில் வசிப் பவர்களுக்கு வருகிறது. ஏனெனில் வீட்டை மாற்றிய பின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மீண்டும் மாற்றுவது கடினமாக இருக்கிறது. ஆதார் அட்டையில் நிரந்தர முகவரியை மாற்ற மக்கள் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும். அங்கே அவர்கள் அனைத்து துணை ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு தான், ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கான பயன்பாட்டைப் பயன்படுத்த முடியும். ஆன்லைனில் இதனை மாற்றுவதற்கான வசதி இருந்தாலும், தேசிய மயமாக்கபட்ட, தனியார் வங்கிகள் மற்றும் அரசு இ சேவை மையங்களை நோக்கித்தான் ஏழை எளிய மக்கள் செல்கிறார்கள்.


‛வெயில் மண்டையை பிளக்குது...’ சீர்காழி ஆதார் மையத்தில் தவம் இருக்கும் மக்கள்!

முகவரி மாற்றத்திற்கு குரூப் ஏ மற்றும் பி அலுவலர்கள் கையெழுத்து போட்டால்தான் முகவரியை மாற்றமுடியும் என்றநிலை உள்ளது. இந்த கையெழுத்துக்கு அதிகபட்சம் ரூ.300 வசூலிக்கப்படுகிறது. மேலும் அரசு இ- சேவை மையத்தில் அதிகபட்சம் ரூ.100 முகவரி மாற்றத்திற்கு சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே நேரம் இச்சேவையை அளிக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இதற்கான சேவை கட்டணத்தை தங்களின் விருப்பம் போல வசூலிக்கிறார்கள். இதனால் ஒருவர் தன் முகவரி மாற்றத் திற்காக குறைந்தபட்சம் 500 ரூபாய் செலவழிக்கவேண்டியுள்ளது. 


‛வெயில் மண்டையை பிளக்குது...’ சீர்காழி ஆதார் மையத்தில் தவம் இருக்கும் மக்கள்!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஆதார் சேவை மையம் இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் இங்கு போதிய ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர். இணைய சேவை குறைபாடால் ஒரு கணினி மட்டுமே இயங்குவதால் நாள் முழுவதும் காத்திருந்தாலும், பணிகள் முடிவடையாத நிலை உள்ளதாகவும், சில நேரங்களில் மூன்று நாட்கள் அலைந்துதான் ஆதார் சேவை மற்றும் திருத்தங்களை செய்ய முடிவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் கிராம புறங்களில் இருந்து வருபவர்கள், முதியோர், மகளிர், குழந்தைகள் என பலரும் கடும் அவதியடைகின்றனர். மேலும் இந்த கொரோனா காலக்கட்டத்தில் சமூக இடைவெளியின்றியும், முககவசம் இன்றியும், கூட்டமாக நிற்கின்றனர். கடும் வெய்யிலிலும் திறந்த வெளியிலும் நிற்கும் சூழல் நிலவுகிறது. மக்களின் சிரமத்தினை கருத்தில் கொண்டு அரசு கூடுதல் ஊழியர்களை நியமித்தும் டோக்கன் முறையை அமல்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget