மேலும் அறிய

‛வெயில் மண்டையை பிளக்குது...’ சீர்காழி ஆதார் மையத்தில் தவம் இருக்கும் மக்கள்!

சீர்காழி ஆதார மையத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால் நாட்கணக்கில் பொது மக்கள் காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது.

பெரும்பாலான இடங்களில் நமது அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படும் ஆதார் அட்டை மிகமுக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். பல முக்கிய பணிகளுக்கு ஆதார் தேவைப்படுகின்றது. ஆதார் அட்டையின் அனைத்து விவரங்களும் முற்றிலும் சரியானவையாக இருப்பது மிகவும் முக்கியமாகும். பிறந்த நாள், பெயர், முகவரி போன்றவற்றை சரியாக நிரப்புவது அவசியம். இல்லையெனில் ஆதார் தொடர்பான பல வேலைகள் சிக்கிக்கொள்ளக்கூடும்.


‛வெயில் மண்டையை பிளக்குது...’ சீர்காழி ஆதார் மையத்தில் தவம் இருக்கும் மக்கள்!

ஆதார் அட்டையில் கொடுக்கப் பட்டுள்ள பெயர், பிறந்த தேதி போன்ற பல தகவல்களை ஆன்லைனில் மாற்றலாம். ஆனால் முகவரியை மாற்றுவதில் சிக்கல் உள்ளது. இந்த பிரச்சினை பெரும் பாலும் வாடகை வீடுகளில் வசிப் பவர்களுக்கு வருகிறது. ஏனெனில் வீட்டை மாற்றிய பின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மீண்டும் மாற்றுவது கடினமாக இருக்கிறது. ஆதார் அட்டையில் நிரந்தர முகவரியை மாற்ற மக்கள் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும். அங்கே அவர்கள் அனைத்து துணை ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு தான், ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கான பயன்பாட்டைப் பயன்படுத்த முடியும். ஆன்லைனில் இதனை மாற்றுவதற்கான வசதி இருந்தாலும், தேசிய மயமாக்கபட்ட, தனியார் வங்கிகள் மற்றும் அரசு இ சேவை மையங்களை நோக்கித்தான் ஏழை எளிய மக்கள் செல்கிறார்கள்.


‛வெயில் மண்டையை பிளக்குது...’ சீர்காழி ஆதார் மையத்தில் தவம் இருக்கும் மக்கள்!

முகவரி மாற்றத்திற்கு குரூப் ஏ மற்றும் பி அலுவலர்கள் கையெழுத்து போட்டால்தான் முகவரியை மாற்றமுடியும் என்றநிலை உள்ளது. இந்த கையெழுத்துக்கு அதிகபட்சம் ரூ.300 வசூலிக்கப்படுகிறது. மேலும் அரசு இ- சேவை மையத்தில் அதிகபட்சம் ரூ.100 முகவரி மாற்றத்திற்கு சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே நேரம் இச்சேவையை அளிக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இதற்கான சேவை கட்டணத்தை தங்களின் விருப்பம் போல வசூலிக்கிறார்கள். இதனால் ஒருவர் தன் முகவரி மாற்றத் திற்காக குறைந்தபட்சம் 500 ரூபாய் செலவழிக்கவேண்டியுள்ளது. 


‛வெயில் மண்டையை பிளக்குது...’ சீர்காழி ஆதார் மையத்தில் தவம் இருக்கும் மக்கள்!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஆதார் சேவை மையம் இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் இங்கு போதிய ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர். இணைய சேவை குறைபாடால் ஒரு கணினி மட்டுமே இயங்குவதால் நாள் முழுவதும் காத்திருந்தாலும், பணிகள் முடிவடையாத நிலை உள்ளதாகவும், சில நேரங்களில் மூன்று நாட்கள் அலைந்துதான் ஆதார் சேவை மற்றும் திருத்தங்களை செய்ய முடிவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் கிராம புறங்களில் இருந்து வருபவர்கள், முதியோர், மகளிர், குழந்தைகள் என பலரும் கடும் அவதியடைகின்றனர். மேலும் இந்த கொரோனா காலக்கட்டத்தில் சமூக இடைவெளியின்றியும், முககவசம் இன்றியும், கூட்டமாக நிற்கின்றனர். கடும் வெய்யிலிலும் திறந்த வெளியிலும் நிற்கும் சூழல் நிலவுகிறது. மக்களின் சிரமத்தினை கருத்தில் கொண்டு அரசு கூடுதல் ஊழியர்களை நியமித்தும் டோக்கன் முறையை அமல்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Congress : முதுகில் குத்திய காங்.! இனி எந்த காலத்திலும் கிட்ட சேர்க்கவே கூடாது.! அடித்து ஆடும் உதயநிதி
முதுகில் குத்திய காங்.! இனி எந்த காலத்திலும் கிட்ட சேர்க்கவே கூடாது.! அடித்து ஆடும் உதயநிதி
TN Weather Update: 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
TN Minister: பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்னைக்கு தீர்வு தான் என்ன? ஸ்டிக்கர் விவகாரம் - அமைச்சர் விக்னேஷ் பதில்
பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்னைக்கு தீர்வு தான் என்ன? ஸ்டிக்கர் விவகாரம் - அமைச்சர் விக்னேஷ் பதில்
Iran Warns America: “மறுபடியும் முட்டாள்தனமான காரியம் ஏதாவது செஞ்சா..“ அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்; என்ன கூறியது.?
அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்; அசிம் முனீரிடம் கூறியது என்ன.?
Modi Marco Rubio Talks: ட்ரம்ப்பின் முக்கிய செய்தியை கொண்டு வந்த மார்கோ ரூபியோ; பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
ட்ரம்ப்பின் முக்கிய செய்தியை கொண்டு வந்த மார்கோ ரூபியோ; பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
Ebola-US Ban Entry: மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
Embed widget