மேலும் அறிய

தமிழ்நாடு முதலமைச்சர் குறித்த மக்களின் எண்ணம் ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு முதலமைச்சர் குறித்த மக்களின் எண்ணம் ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது என மயிலாடுதுறையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் மூன்றாவது நிதிநிலை அறிக்கையாகும். தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20 ஆம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிக்க உள்ளார்.


தமிழ்நாடு முதலமைச்சர் குறித்த மக்களின் எண்ணம் ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையின்படி வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பெரும்பாலும் மார்ச் 21ஆம் தேதி தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதில் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் மற்றும் சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாடு முதலமைச்சர் குறித்த மக்களின் எண்ணம் ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நாககுடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2023- 2024 ஆம் ஆண்டுக்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயளர் சமயமூர்த்தி, வேளாண்மை உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, சர்க்கரை துறை முதன்மை செயலாளர் விஜயராஜ்குமார் உள்ளிட்ட வேளாண் துறையைச் சேர்ந்த பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 


தமிழ்நாடு முதலமைச்சர் குறித்த மக்களின் எண்ணம் ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களையும், விவசாயிகளுக்கு தேவையான தொழில்துறை வசதிகளையும் தங்கள் குறைகளையும் கூறி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, தஞ்சாவூர் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்த கருப்பு கேட்ப கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.


தமிழ்நாடு முதலமைச்சர் குறித்த மக்களின் எண்ணம் ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியதாவது: விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ற பட்ஜெட்டை உருவாக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வரின் ஆணையின்படி மயிலாடுதுறை நாகை, திருவாரூர் தஞ்சாவூர், கடலூர், அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டுள்ளது. விவசாயிகள் மத்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து நல்ல எண்ணம், ஆதரவு உள்ளது. இந்த ஆதரவு தற்போது நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவில் எதிரொலித்துள்ளது. தமிழக முதலமைச்சர் விவசாயத்தில் காட்டும் ஆர்வம் காரணமாக நெல் உற்பத்தியில் 40 ஆண்டு வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது என்றார். அப்போது, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.


தமிழ்நாடு முதலமைச்சர் குறித்த மக்களின் எண்ணம் ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

மேலும் கருத்து கேட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளில் பலரை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நீ,வா, போ என ஒருமையில் பேசிய நிலையில், விவசாயி ஒருவர் விவசாயிகளை கூப்பிட்டு வைத்து அவமானம் படுத்தி விட்டீர்களா என கேட்டுவிட்டு கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார். இதனால் சிறிது நேரம் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Iran Economic Crisis: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget