மேலும் அறிய

மயிலாடுதுறையில் புத்தாண்டு சிறப்புக் கண்காட்சி: 500 வகையான மாடல்களில் கேக் - அசந்து போன பொதுமக்கள்!

புத்தாண்டை முன்னிட்டு தனியார் பேக்கரியில் நடைபெற்ற கேக் கண்காட்சியில் நூறு வகையான சுவைகளில் 500 வகையான மாடல் கேக்குகள் பார்வையாளர்களை கவர்ந்தது.

புத்தாண்டு என்றாலே கேக்குகளுக்கு தனி இடமுண்டு, பெரும் பங்கும் உண்டு. புத்தாண்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி புத்தாண்டு மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பரிமாறி கொள்கின்றனர். அந்த வகையில் கேக் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பேக்கரிகள், தங்களின் தனி திறமையை வெளிப்படுத்தும் விதமாக கேக்குகளில் என்ன புதுமையை செய்து காண்பிக்க முடியுமோ அதனை செய்து வருகின்றனர்.


மயிலாடுதுறையில் புத்தாண்டு சிறப்புக் கண்காட்சி: 500 வகையான மாடல்களில் கேக் - அசந்து போன பொதுமக்கள்!

அதன் ஒன்றாக மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள தனியார் பேக்கரி நிறுவனம் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு பல வகையான கேக்குகளின் கண்காட்சி வைத்துள்ளது. இந்த கண்காட்சியில் கண்ணை கவரும் வகையில் 500 -க்கும் மேற்பட்ட வடிவங்களில், நூறு வகையான சுவைகளில் தயாரிக்கப்பட்ட கேக்குகள் இடம் பெற்றிருந்தன. மூன்று அடி உயரத்தில் ராக்கெட் கேக், இன்டர்நேஷனல் ஸ்வீட், அரபிக் பெல்ஜியம் சாக்லேட் கேக் வகைகள், ரசமுல்லா கேக், சாக்கோ கேமல் க்ரென்ச் கேக், ஸ்ராபெரி கேக் பொம்மை வடிவிலான விதவிதமான கேக்குகள் உள்ளிட்ட பல்வேறு கேக்குகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 


மயிலாடுதுறையில் புத்தாண்டு சிறப்புக் கண்காட்சி: 500 வகையான மாடல்களில் கேக் - அசந்து போன பொதுமக்கள்!

மேலும் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த கேக் கண்காட்சியில் கலந்து கொண்டு கேக் வகைகளை தங்கள் செல்போனில் படம் பிடித்தும் கண்டு ரசித்தனர். புதிய வகை கேக்குகளை  ஆர்டர் செய்து வாங்கிச் செல்கின்றனர்.  நியூ இயர் பண்டிகைக்காக கண்ணை கவரும் வகையில் விதவிதமாக கேக்குகளை செய்து வைத்து கேக் கண்காட்சி நடத்திய நிறுவனத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர். 

புத்தாண்டை முன்னிட்டு காவலர்களுக்கும் பொது மக்களுக்கும் நல்லுறவு வளர்க்கும் விதமாக மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.

நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் மயிலாடுதுறை  பழைய பேருந்து நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு நல்லுறவை வளர்க்கும் விதமாக பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார். 


மயிலாடுதுறையில் புத்தாண்டு சிறப்புக் கண்காட்சி: 500 வகையான மாடல்களில் கேக் - அசந்து போன பொதுமக்கள்!

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவலர் குடியிருப்பில் காவலர் குடும்பங்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமதி நிஷா காவலர் குடும்பத்தினர் குழந்தைகளுடன் கேக் வெட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து காவலர் குடும்பத்தினருக்கு இனிப்புகளை வழங்கினார். 

Officers Promotion and Transfer : பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உட்பட 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தமிழக அரசு அதிரடி..


மயிலாடுதுறையில் புத்தாண்டு சிறப்புக் கண்காட்சி: 500 வகையான மாடல்களில் கேக் - அசந்து போன பொதுமக்கள்!

நிகழ்ச்சியில் மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதேபோல் மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு புத்தாண்டை வரவேற்று பிரார்த்தனை செய்தனர். புத்தாண்டையொட்டி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Embed widget