மேலும் அறிய

தஞ்சாவூரில் மொழிவாரி மாநிலப்பிரிப்பு நாள் கொண்டாட்டம் - பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

’’நவம்பர் 1 தமிழ்நாடு தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கினர்’’

1956 நவம்பர் ஒன்றாம் தேனி மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட தமிழ்நாடு 65 ஆவது ஆண்டு விழா தஞ்சாவூர் மாவட்டத்தில் இனிப்பு, வழங்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு நாடு விடுதலையான பிறகு சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாமல் ஒன்றுடன் ஒன்று கலந்து இருந்தது. மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்றும், எல்லை வரையறுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் சங்கரலிங்கனார், ஜீவா, நேசமணி, மபொசி உள்ளிட்ட பல தமிழக தலைவர்கள் நீண்ட நெடிய போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, பல மாநிலங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதன் அடிப்படையில் நேரு தலைமையிலான மத்திய அரசு குழு அமைத்து மொழி வழி மாநிலங்கள் பிரிக்க சட்டம் இயற்றப்பட்டது. இந்த அடிப்படையில் 1956 நவம்பர் 1ஆம் தேதி சென்னை மாகாணம் உருவானது. பின்னர் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆந்திரா ,கேரளா கர்நாடகா உள்ளிட்ட 16 மாநிலங்கள் 6 யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டன. மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதி ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு விழாவாக அறிவித்து, அரசு விடுமுறையுடன் விழா நடத்தப்பட்டு வருகிறது.


தஞ்சாவூரில் மொழிவாரி மாநிலப்பிரிப்பு நாள் கொண்டாட்டம் - பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

தமிழ்நாடு பிரிக்கப்பட்ட நிகழ்வை  தஞ்சாவூரில் பல்வேறு இயக்கங்கள் சார்பில் எல்லை போராட்ட வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி  உறுதிமொழி ஏற்கப்பட்டது. தஞ்சாவூர் காவேரி சிறப்பங்காடி அருகில் ஏஐடியூசி மாவட்ட தலைவர் சேவையா தலைமையில் நடைபெற்ற விழாவில், சிபிஐ மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிரமணியன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், மக்கள் கலை இலக்கிய கழகம் மாநகரச் செயலாளர் ராவணன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணை ப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் அதிகாரம் மாநகர செயலாளர் தேவா, எழுத்தாளர் சாம்பான் உள்ளிட்டோர் தமிழ்நாடு உருவான நாள் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.


தஞ்சாவூரில் மொழிவாரி மாநிலப்பிரிப்பு நாள் கொண்டாட்டம் - பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

நிகழ்ச்சியில், தாய்மொழி தமிழை பாதுகாக்கவும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் மொழி வழிக் கல்வியை கட்டாயமாக்கவும், தமிழ் மொழியை அழிக்கின்ற இந்தி, சமஸ்கிருதம் திணிப்பை விரட்டியடடிக்கவும், குலக்கல்வி முறையை கொண்டு வரும் புதிய தேசிய கல்வி கொள்கை, இல்லம் தேடி கல்வி திட்டம் ஆகியவற்றை திரும்ப பெறவும்,  பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவும், தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பில் தமிழ் மொழி வழி கல்வியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்திடவும், அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட சட்டம் இயற்றவும் தமிழ் நாடு மற்றும் மத்திய அரசுகளுக்கு கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் ஆறுகள், மலைகள், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களையும், கனிம வளத்தையும் பாதுகாக்கவும், தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை போராட்டத்தை ஆதரித்தும், இழந்து விட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் சாதி மதம் கடந்து தமிழராய் ஒன்றிணைந்து சமதர்ம தமிழகம் படைத்திடவும் உறுதியான ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க உறுதி ஏற்கப்பட்டது. இதே போல் கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் குடந்தை அரசன் தலைமையில் நவம்பர் 1 தமிழ்நாடு தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கினர். அப்போது பறையடித்து, நிகழ்ச்சியை கொண்டாடினர்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget