மேலும் அறிய

தஞ்சாவூரில் மொழிவாரி மாநிலப்பிரிப்பு நாள் கொண்டாட்டம் - பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

’’நவம்பர் 1 தமிழ்நாடு தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கினர்’’

1956 நவம்பர் ஒன்றாம் தேனி மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட தமிழ்நாடு 65 ஆவது ஆண்டு விழா தஞ்சாவூர் மாவட்டத்தில் இனிப்பு, வழங்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு நாடு விடுதலையான பிறகு சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாமல் ஒன்றுடன் ஒன்று கலந்து இருந்தது. மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்றும், எல்லை வரையறுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் சங்கரலிங்கனார், ஜீவா, நேசமணி, மபொசி உள்ளிட்ட பல தமிழக தலைவர்கள் நீண்ட நெடிய போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, பல மாநிலங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதன் அடிப்படையில் நேரு தலைமையிலான மத்திய அரசு குழு அமைத்து மொழி வழி மாநிலங்கள் பிரிக்க சட்டம் இயற்றப்பட்டது. இந்த அடிப்படையில் 1956 நவம்பர் 1ஆம் தேதி சென்னை மாகாணம் உருவானது. பின்னர் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆந்திரா ,கேரளா கர்நாடகா உள்ளிட்ட 16 மாநிலங்கள் 6 யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டன. மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதி ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு விழாவாக அறிவித்து, அரசு விடுமுறையுடன் விழா நடத்தப்பட்டு வருகிறது.


தஞ்சாவூரில் மொழிவாரி மாநிலப்பிரிப்பு நாள் கொண்டாட்டம் - பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

தமிழ்நாடு பிரிக்கப்பட்ட நிகழ்வை  தஞ்சாவூரில் பல்வேறு இயக்கங்கள் சார்பில் எல்லை போராட்ட வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி  உறுதிமொழி ஏற்கப்பட்டது. தஞ்சாவூர் காவேரி சிறப்பங்காடி அருகில் ஏஐடியூசி மாவட்ட தலைவர் சேவையா தலைமையில் நடைபெற்ற விழாவில், சிபிஐ மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிரமணியன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், மக்கள் கலை இலக்கிய கழகம் மாநகரச் செயலாளர் ராவணன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணை ப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் அதிகாரம் மாநகர செயலாளர் தேவா, எழுத்தாளர் சாம்பான் உள்ளிட்டோர் தமிழ்நாடு உருவான நாள் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.


தஞ்சாவூரில் மொழிவாரி மாநிலப்பிரிப்பு நாள் கொண்டாட்டம் - பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

நிகழ்ச்சியில், தாய்மொழி தமிழை பாதுகாக்கவும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் மொழி வழிக் கல்வியை கட்டாயமாக்கவும், தமிழ் மொழியை அழிக்கின்ற இந்தி, சமஸ்கிருதம் திணிப்பை விரட்டியடடிக்கவும், குலக்கல்வி முறையை கொண்டு வரும் புதிய தேசிய கல்வி கொள்கை, இல்லம் தேடி கல்வி திட்டம் ஆகியவற்றை திரும்ப பெறவும்,  பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவும், தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பில் தமிழ் மொழி வழி கல்வியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்திடவும், அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட சட்டம் இயற்றவும் தமிழ் நாடு மற்றும் மத்திய அரசுகளுக்கு கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் ஆறுகள், மலைகள், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களையும், கனிம வளத்தையும் பாதுகாக்கவும், தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை போராட்டத்தை ஆதரித்தும், இழந்து விட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் சாதி மதம் கடந்து தமிழராய் ஒன்றிணைந்து சமதர்ம தமிழகம் படைத்திடவும் உறுதியான ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க உறுதி ஏற்கப்பட்டது. இதே போல் கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் குடந்தை அரசன் தலைமையில் நவம்பர் 1 தமிழ்நாடு தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கினர். அப்போது பறையடித்து, நிகழ்ச்சியை கொண்டாடினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Embed widget